India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2007 T20WC & 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டி-சீரிஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார் வெளியிட்டுள்ளார். தனித்துவமான விளையாட்டுப் பயணத்தை கதைக்களமாகக் கொண்ட இப்படம் ‘The Test of My Life’ என்ற அவரது சுயசரிதையை தழுவி உருவாக்கப்பட உள்ளது.
இந்திய போஸ்ட் ஆபீஸில் உள்ள 44,228 காலிப் பணியிடங்களுக்கான (Gramin Dak Servaks) முதல் தகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் <
பாகிஸ்தானில் உள்ள மைதானங்கள் சர்வதேச தரத்தில் இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி வெளிப்படையாக விமர்சித்துள்ளார். பாக்., உள்ள எந்தவொரு மைதானத்திலும் போதுமான இருக்கைகள், குளியலறைகள் இல்லை எனக் கூறிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன் கடாபி ஸ்டேடியம் உள்ளிட்டவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்படிப்புக்காக நியூசிலாந்து செல்ல திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்களுக்கு, அந்நாட்டு அரசு அதிர்ச்சித்தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, உயர்கல்வி விசாவுக்கான கட்டணத்தை நியூசிலாந்து உயர்த்தியுள்ளது. இதுவரை ₹19,000ஆக இருந்த கட்டணத்தை ₹38,190ஆக (இருமடங்கு) உயர்த்தியுள்ளது. இது அக்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நியூசி.,சென்று பயிலும் மாணவர்களில், இந்தியர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) 2ஆவது முறையாக உயர்த்தப்படவுள்ளது. 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, செப்.,முதல் வாரத்தில் இந்த உயர்வை மத்திய அரசு அறிவிக்குமெனக் கூறப்படுகிறது. DA 3% வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், கோவிட் காலத்தில், 18 மாதங்கள் நிறுத்தப்பட்ட நிலுவைத் தொகையை அரசு அளிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடை வரம்பு விதிமுறையை பூர்த்தி செய்ய வேண்டியது, வீரர்களின் பொறுப்பு என விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS) தீர்ப்பளித்துள்ளது. வினேஷ் போகத் வழக்கின் இறுதித்தீர்ப்பில், விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றுதான். ஆர்டிக்கிள் 11 விதிப்படி, ஒரு வீரர் ஒரு போட்டியில் தகுதி இழந்தால், அது அனைத்துப்போட்டிகளுக்கும் பொருந்தும். அதன் அடிப்படையிலேயே வெள்ளிப்பதக்கம் மறுக்கப்பட்டதாக, CAS தெரிவித்துள்ளது.
ரோஹித் ஷர்மாவைப் போல திட்டமிடுதலுக்காக அதிக நேரம் செலவிடும் கேப்டனை, தான் இதுவரை பார்த்ததில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். தனித்தனியே மீட்டிங்கை நடத்தி, வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பார் எனக் கூறிய அவர், வெற்றிக்கான தந்திரம் அறிந்த ரோஹித்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. நிதி நிறுவன வங்கிக் கணக்கையும் பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் முடக்கியுள்ளனர். நிதி நிறுவனம் மீது இதுவரை 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த நிலையில், அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, அவரது தொலைக்காட்சி (WIN TV) நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மழைக்காலத்தில் ஏற்படும் செரிமானக் கோளாறு உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் திருநீற்றுப்பச்சிலைக்கு இருப்பதாக குணவாகடப் பாடல் கூறுகிறது. யுஜெனால், லினாலூல், ஜெரானியால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் இலைகளிலிருந்து சாறு எடுத்துத் தேனுடன் கலந்து செய்யப்படும் மருந்தை உரிய வகையில் உண்டால், அலர்ஜியால் ஏற்படும் சுரம், வாந்தி, தேமல், படை போன்ற நோய்களும் நீங்குமாம்.
Sorry, no posts matched your criteria.