India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழையால் தெலுங்கு மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கி, மக்கள் அவதிப்பட்டு வருவது தெரிந்ததே. இந்நிலையில், மக்களின் துயரத்தைப் போக்க நடிகர் சிம்பு தனது பங்களிப்பாக ₹6 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். தெலுங்கானா & ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ₹3 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளார். டோலிவுட்டிக்கு வெளியே இருந்து நிதி வழங்கிய ஒரே நடிகர் சிம்பு என்பது கவனிக்கத்தக்கது.
வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என அதிமுக EX அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். வி.சி.க மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது என்றும், அதிமுக தவிர்க்க இயலாத மாபெரும் அரசியல் கட்சி என்பதால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருமாவளவனின் அதிமுக அழைப்பு, திமுக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், ஓவர்சீஸை தவிர்த்து மற்ற இடங்களில் ‘G.O.A.T’ திரைப்பட வசூல் மிகப்பெரிய அடி வாங்கி இருப்பதாக திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிகளில் CSK போட்டிக்கு பதிலாக இந்தியா மேட்ச் காட்டி இருந்தால், இந்தியா முழுவதும் கொண்டாடி இருப்பார்கள் என வெங்கட் பிரபுவே கூறியுள்ளார். ₹1,000 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், ₹500 கோடியை தாண்டுவதே கஷ்டம் என்கிறார்கள்.
இன்று 10 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) பன்றி 2) மெர்குரி 3) பிட்மேன் 4) சுதேசமித்திரன் 5) கரையான் 6) போலந்து 7)அஞ்சல் குறியீட்டு எண். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
தேசிய நெடுஞ்சாலையில் 20 kmக்குள் பயணிப்பவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. Fast Tag முறைக்கு மாற்றாக சேட்டிலைட் உதவியுடன் செயல்படும் GNSS முறையை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், நேஷனல் பர்மிட் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள், 20 kmக்குள் பயணித்தால் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. இது குறித்து உங்களோட கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
முந்திரி பருப்பின் பயன்கள் குறித்து மருத்துவர்கள் சில பரிந்துரை அளித்துள்ளனர். அவை என்னென்ன? 1) எலும்புகளை வலுப்படுத்த உதவும் 2) தசைப்பிடிப்பு, ஒற்றைத் தலைவலி, மயக்கத்தை சரி செய்ய உதவும் 3) ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 4) மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும் 5) காசநோய் மற்றும் தொழுநோய்களை குணப்படுத்தக்கூடும். இந்தத் தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். நண்பர்களுக்கும் இதை பகிருங்க
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை முதலீடு செய்ய அழைப்பது ஏன்? என CM ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வேலைவாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை என்ற தனிச்சட்டம் நிறைவேறுவது எப்போது? என வினவியுள்ளார். மேலும், பிற மாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுகவை மாநாட்டிற்கு அழைப்பது விசிகவின் விருப்பம் என அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார். விசிகவின் பூரண மதுவிலக்கு மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். திமுகவின் கூட்டணியில் இருக்கும் விசிக, அதிமுகவுக்கு அழைப்பு விடுப்பதா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில், அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து திருமாவளவனிடம்தான் கேட்க வேண்டும் என உதயநிதி கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மே.வங்க மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெண் பயிற்சி மருத்துவர் கொலையைக் கண்டித்தும், மருத்துவ சுகாதாரத் துறை செயலாளரை மாற்றக் கோரியும் மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தால் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டும் மருத்துவர்களை இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப SC நேற்று உத்தரவிட்டது.
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை அருகே நடைபெற்ற மாதா கோயில் திருவிழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து பிராங்க்ளின் (23), ஆண்டோ (20) கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) சென்றுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
Sorry, no posts matched your criteria.