India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃப்ரஷர்ஸ்களுக்கான ‘பவர்’ என்ற சிறப்பு வேலைவாய்ப்புத் திட்டத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. திறன் தேர்வு & நேர்காணலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஆண்டுத் தொகுப்பாக ₹6.5 லட்சம் – ₹9 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. கோடிங், மென்பொருள் டெஸ்டிங், புரோகிராமிங்கில் திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இன்ஃபோசிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
CM ஸ்டாலினின் தனி செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, முதல்வரின் 1வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ், 2வது தனி செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே, தனி செயலாளராக இருந்த முருகானந்தம், தலைமை செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
லேடரல் என்ட்ரி என்பது அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முறை. அதாவது, மத்திய அரசின் அமைச்சகங்களில் உள்ள அதிகாரமிக்க பதவிகளுக்கு, UPSC தேர்ச்சிப்பெறாதவர்களும், இட ஒதுக்கீட்டை பின்பற்றாமலும் நிரப்பப்படுகிறது. இதனால்,
காலங்காலமாக உயர் பதவியில் இருப்பவர்களின் வாரிசுகளே மீண்டும் உயர்பதவிக்கு வர வாய்ப்புள்ளது. இதனால், SC, ST, BC, MBC பிரிவினர் உயர் பதவிகளுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு யாராவது லஞ்சம் கேட்டால், ஒரு ரூபாய் கூட தராதீர்கள் என்று மக்களுக்கு அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு வீடு கட்ட அரசு ₹3.5 லட்சத்தை ஒதுக்கும் நிலையில், சிலர் ₹10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தகவல் வருகிறது. இதுபோன்று யாராவது லஞ்சம் கேட்டால், புகார் அளிக்க வேண்டும். உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை 85% கூடுதலாக பெய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
லேடரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமன நடைமுறையை ரத்து செய்யுமாறு, UPSCக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. UPSC தேர்வு பெறாதவர்களும், தனியார் துறையை சேர்ந்தவர்களும் மத்திய அரசின் உயர் பொறுப்புகளில் நேரடி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இதனால், SC,ST பிரிவினரின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், சமூக நீதியை காக்கும் நடவடிக்கையாக இந்த நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை & குற்றங்கள் அதிக அளவில் நடப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி ஹேமா கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில், திரையுலகம் கிரிமினல் கும்பலின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. படப்பிடிப்புத் தளம், கேரவன் என அனைத்து இடங்களிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். முன்னணி நடிகர்களும் இது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்க்கையையே முடக்கிப்போடும் அளவுக்கு மோசமானது மூட்டு வலி. அவர்களுக்காகவே சூப்பர் தெரபி வந்துள்ளது. ஒரு பெட்ஷிட்டை மடித்து சுருட்டி, அதனை மூட்டின் கீழ்ப்பகுதிக்கு ஒரு இன்ச் மேல் வைத்துவிட்டு, படுக்க வேண்டும். பின்னர் சரியாக 10 எண்ணி விட்டு, அதை எடுத்துவிட வேண்டும். இவ்வாறு ஒரு நாளை 3 முறை செய்து வந்தாலே, மூட்டு வலி பறந்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்புக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுபற்றி பேசிய டிரம்ப், “மஸ்க் மிகச்சிறந்த அறிவாளி. நான் அதிபரானால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பேன்” எனக் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “அமைச்சராகி சேவை செய்ய தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அமேசான் பயனாளிகளுக்கான பிரத்யேக டிஜிட்டல் பரிவர்த்தனை அப்பான ‘Amazon Pay’-ஐ தனி செயலியாக அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இ-காமர்ஸ் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண தளத்தில் இயங்கிவரும் Amazon Pay-இன் பயன்பாட்டை இதன் மூலம் அதிகரிக்க முடியுமென அந்நிறுவனம் நம்புகிறது. ஜூலை நிலவரப்படி, Amazon Pay வழியே ஏறத்தாழ 72.4 மில்லியன் பரிவர்த்தனைகள் (UPIஇல் 0.5%) நடைபெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.