India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2001 செப். 11இல் நிகழ்ந்த இரட்டை கோபுர தாக்குதல் உலகையே உலுக்கிய அசம்பாவிதமாகும். USA மீதான உலகின் பார்வையை இது முற்றிலுமாக மாற்றி அமைத்தது. உலகின் ஒரே சூப்பர் பவர் நாடு என்று கூறிவந்த USA மீது அல்கொய்தா நடத்திய இந்த தாக்குதல், தீவிரவாதத்தின் கோர முகத்தை உலகிற்கு வெளிக்காட்டியது. இந்த சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இதன் 23ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
விஜய்யின் தவெக கட்சியில் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் உள்ள அதிருப்தி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் விரைவில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதை கவனித்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், அதிருப்தி நிர்வாகிகள் யாரும் தவெக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு செல்வதை தடுக்கும் நோக்கில், அவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. லெவல் 1 முதல் லெவல் 5 வரையிலான பதவிகளில் காலியாகவுள்ள 67 இடங்கள் நிரப்பப்படுகின்றன. மாத சம்பளம் ₹18,000 முதல் ₹29,200 வரை ஆகும். வேலைக்கு www.rrcmas.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள் அக்டோபர் 6ம் தேதி ஆகும். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். SHARE IT
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை $70க்கு கீழ் சரிந்தது. பேரல் கச்சா எண்ணெய் விலை $2.33 சரிந்து, $69.51க்கு விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெயின் தேவை கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 2.11 மில்லியன் பேரலாக இருந்த நிலையில், தற்போது 2.03 மில்லியன் பேரலாக குறைந்துள்ளது. அதேபோல, அடுத்த ஆண்டுக்கான தேவை 1.74 மில்லியன் பேரலாக குறையும் என OPEC கணித்துள்ளது.
குமரியில் பிறந்து 20 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய <<14072610>>விக்டோரியா கெளரி<<>>, மதுரை ஐகோர்டில் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர். பாஜக உறுப்பினராக இருந்த இவர், தேசிய மகளிர் அணி செயலாளராகவும் இருந்துள்ளார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பாக பேசி சர்ச்சையில் சிக்கிய இவரை, சென்னை HC நீதிபதியாக பரிந்துரைக்க 21 மூத்த வழக்கறிஞர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணிக்கான ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்டோரும், மகளிர் பிரிவில் ஹரிகா, வைஷாலி உள்ளிட்டோரும் களம் இறங்குகின்றனர். சென்னையில் நடந்த கடந்த ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. இம்முறையும் நமது வீரர்கள் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பு தொடங்கிவிடும். அதன்படி பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கவுள்ளது. ஜனவரி 10ம் தேதி பயணிப்போர் நாளையும், ஜனவரி 11க்கு பயணிப்போர் நாளை மறுநாளும், ஜனவரி 12க்கு வருகிற 14ம் தேதியும், ஜனவரி 13க்கு வரும் 15ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
USAவில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், TNஇல் அந்நிறுவனம் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்பு குறித்து ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் அமைந்ததாகவும், 30 ஆண்டுகால உறவை புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என Nutritionist கூறுகின்றனர். இது மலச்சிக்கல் பிரச்னையை தடுப்பதுடன் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் உதவும். பளபளப்பான சருமம், இளமையை பராமரிக்க உதவும் கொலாஜன் உற்பத்திக்கு பப்பாளியில் காணப்படும் வைட்டமின் சி உதவுகிறது. Share it.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் 13ஆம் தேதிவரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 62 பேர் பங்கேற்கிறார்கள். 1995க்கு பிறகு சென்னையில் நடைபெறும் முதல் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி இதுதான். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை போட்டி நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.