India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடியை GO BACK சொன்னவர்கள் COME BACK சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என தமிழிசை தெரிவித்துள்ளார். ‘கலைஞர் 100’ நாணய வெளியிட்டு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து திமுக-பாஜக உறவு என்று சிலரால் கற்பனையாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், எத்தனை விமர்சனங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்தாலும் மோடியின் புகழை சிறிதளவும் குறைக்க முடியாது என்றார்.
‘வாழை’ படம் பார்த்த பிறகு மனசு பாரமாக இருந்ததாக நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார். இவ்வளவு நெருக்கமான, உருக்கமான விஷயத்தை எப்படி தாங்குறீங்க என மாரி செல்வராஜிடம் தான் நேரில் வியந்து கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படம் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று திரையிடப்பட்டது. இப்படம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
பிரேமலதா விஜயகாந்த், செல்வப்பெருந்தகை, தமிழிசை ஆகியோரின் வீட்டிற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் வீட்டிற்கும், ஆளுநராக இருந்த தமிழிசை வீட்டிற்கும், அச்சுறுத்தல் காரணமாக செல்வபெருந்தகை வீட்டிற்கும் துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதனை அரசு திடீரென்று வாபஸ் பெற்றுள்ளது.
‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். தலைவரின் தீவிர ரசிகரான அனிருத்திடம் இருந்து ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘ஹும்’ போல இன்னொரு ராக்கிங் சாங்கை எதிர்பார்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கை இன்று தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யவே பல மணிநேரம் ஆகி இருக்கிறது. இந்த தாமதத்துக்கு யார் காரணம்? பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை. மாற்றம் உடனே வேண்டும். அடுத்த பலாத்காரம் நடக்கும் வரை மாற்றத்திற்காக காத்திருக்க முடியாது” எனக் கடிந்து கொண்டார்.
தவெக கொடியை எங்கெல்லாம் ஏற்றுவது என கட்சியினருக்கு, விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் சொந்த இடங்களில் கல்வெட்டு அமைத்து கொடியை ஏற்ற அறிவுறுத்தியுள்ளார். அனுமதி பெறவில்லை என கூறி, எந்த ஒரு கொடிக்கம்பமும் அரசு நிர்வாகத்தால் அகற்றப்பட்டு விடக்கூடாது என்பதில், அவர் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தங்களை காப்பாற்றிக்கொள்ள பெண்கள் பாலியல் ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டும் என்ற கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மைனர் பெண் ஒருவரை இளைஞர் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், அப்பெண்ணுக்கும், இளைஞனுக்கும் காதல் உறவு இருந்ததால், வன்கொடுமை ஆகாது என கூறி, இளைஞனை ஐகோர்ட் விடுவித்தது. இத்தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், ஐகோர்ட்டிற்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியது.
கெஜ்ரிவால் மனைவி சுனிதா, தேசியவாத காங்கிரஸ் (SP) தலைவர் சரத் பவாரை சந்தித்துப்பேசியுள்ளார். ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், புனேயில் சுமார் 45 நிமிடங்கள் இச்சந்திப்பு நீடித்தது. இதில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கெஜ்ரிவால் விடுதலைக்கு ஆதரவு கோரி, இச்சந்திப்பு நடந்ததாக AAP தரப்பினர் கூறுகின்றனர்.
செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருக்கும் அவருக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில், அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் SC தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்களான ரத்தன் டாடாவும், முகேஷ் அம்பானியும் அண்மைக்காலமாக துணி விற்பனையில் நேரடியாக மோதி வருகின்றனர். இதில் ரிலையன்ஸ் துணி விற்பனை நிறுவனத்தை விட, டாடாவின் Zudio நிறுவனம் பல மடங்கு லாபத்தில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, சீனாவின் Shein என்ற ஆன்லைன் துணி நிறுவனத்துடன் கை கோர்த்துள்ள அம்பானி, டாடாவை வீழ்த்தும் முனைப்பில் இறங்கியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.