India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. ரோஹித், ஜெய்ஸ்வால், கில், கோலி, கே.எல் ராகுல், சர்பராஸ் கான், பண்ட், துருவ் ஜூரல், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். நீங்க மிஸ் செய்யும் இந்திய வீரர் யார் என்பதை கமெண்ட் பண்ணுங்க.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா செப்டம்பர் 6ஆம் தேதி காங்கிரஸில் இணைந்த நிலையில், இன்று அவருக்கு மிரட்டல் வருவதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு எண்ணில் இருந்து மிரட்டல் வருவதாக காவல்நிலையத்தில் பஜ்ரங் புனியா புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TVK கட்சியை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதற்கு, நடிகர் விஜய்க்கு சீமான் வாழ்த்து கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் கழகத்தை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சியை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். TVK தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
காங்கிரஸில் அண்மையில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல் வந்தது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக ஹரியானா CM நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு எண்ணில் இருந்து தன்னிடம் பேசிய ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புனியா புகார் அளித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு சைனி, போலீஸ் விசாரணை நடத்துவதாகவும், குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிலளித்தார்.
மும்பையில் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அங்கு பெரும் திரை நட்சத்திரங்கள் வந்திருந்த நிலையில் நடிகை சாரா அலிகான் அணிந்து இருந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர், 60 ஆண்டுகள் பழமையான மறுசுழற்சி செய்யப்பட்ட Brocade புடவைகளால் தயாரிக்கப்பட்ட லெஹங்கா உடையை அணிந்திருந்தார். இதுகுறித்தான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலினுடன் இருப்பது டிரில்லியண்ட் நிறுவனத்தின் தலைவரல்ல என்பது பொய்யானது என்று TN Fact Check தெரிவித்துள்ளது. ஜிம் மடேஜ் சமீபத்தில் தான், டிரில்லியண்ட் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆகையால், அவர் குறித்து விவரங்கள் அப்டேட் செய்யப்படவில்லை. அவரது அருகே உள்ள மைக் மோர்ட்டிமர் பற்றி விவரங்கள் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் இருப்பதைக் காணலாம் என தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை கட்டுப்பாடின்றி நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 4 வழிச் சாலை பணிகளுக்கு, கனிமவளங்கள் தேவை என்று கூறி மலைகளை தகர்க்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். தகர்க்கப்படும் கனிமவளங்கள் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுவதாகவும், அதை அரசு தடுத்து, உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2019 ஆண்டுக்கு முன்பாக, காஷ்மீரில் பயங்கரவாத சூழல் நிலவியது. ஆனால், இன்று யாரும் கைத்துப்பாக்கியை எடுக்கவோ, துப்பாக்கி சூடு நடத்தவோ துணிவதில்லை எனக் குறிப்பிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம் என்றார். இங்கு செப். 18, 25 மற்றும் அக்.1இல் தேர்தல் நடைபெறுகிறது.
துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைந்து ’காந்தா’என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. பாக்யஸ்ரீ என்பவர் துல்கருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
விஜய்யின் தவெகவில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர் தவெகவில் இணையும் பட்சத்தில், கட்சியின் அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.