India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சினிமாவில் கலக்கும் நடிகை சமந்தா, World Pickleball League 2024 தொடரில் சென்னை அணியின் உரிமையாளராகியுள்ளார். சிறு வயதில் இருந்தே PickleBall விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்ற அவர், விளையாட்டில் இளம் பெண்கள் பங்கேற்பதை அதிகரிப்பதே தன்னுடைய நோக்கம் எனவும் கூறினார். இந்த போட்டிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளன. இதன் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற சமந்தாவின் ஒல்லியான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
9வது மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. முன்னதாக இத்தொடர் வங்கதேசத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சமீப காலமாக அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக UAEக்கு இத்தொடர் மாற்றப்பட்டுள்ளது. இப்போட்டிகள் அக்டோபர் 3 முதல் 20 வரை நடைபெற உள்ளன. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் அடுத்த மாதம் 27 முதல் தொடங்குகிறது.
சோஷியல் மீடியாவில் நேரம் செலவிடுபவர்கள் சலிப்பான VIDEOவை பார்த்தால், அதனை உடனே ஸ்கிப் செய்துவிடுவர். ஆனால், இந்த பழக்கம் சலிப்புத்தன்மையை மேலும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வில், குழந்தைகள் நடனம், விலங்குகளின் சேட்டை போன்ற VIDEOவை பார்ப்பவர்கள், அதனை சலிப்பாக கருதி தவிர்க்கின்றனர். இது அவர்களுக்கு குறைவான ஈடுபாடு, பார்வை அனுபவம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் ஆண்டுக்கு நான்கு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். பள்ளி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், குறிப்பிட்ட இயக்குநர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பை சேர்ந்த இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரசாந்த் நடிப்பில் நீண்ட வெளியான அந்தகன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அவர் எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இணைய உள்ள நிலையில், பும்ரா போன்ற சிறப்பான பவுலர்களுடன் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக மோர்கலின் சகோதரர் அல்பி மோர்கல் கூறியுள்ளார். இதனால், தனது சகோதரர் தவறு செய்ய வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளது. செப்.27ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தீபாவளிக்கு (அக்.31) ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. 1980இல் நடக்கும் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. டப்பிங் பணிகளின் தரத்தினை மேம்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளதாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
மலேசியாவில் உள்ள மலாயா பல்கலை.,யில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படும் என PM மோடி தெரிவித்துள்ளார். மலேசிய PM அன்வர் இப்ராஹிம் இந்தியா வந்துள்ள நிலையில், இந்திய தொழிலாளர்கள் மலேசியா செல்வதை எளிதாக்குவது, திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மலேசிய பிரதமரின் வருகை அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும்என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் ‘கபாலி’ ரஜினி ஸ்டைலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘தலைவா’ என குறிப்பிட்டு சல்யூட் அடிக்கும் எமோஜியும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ரஜினியை போல உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ, பண்ட் CSK அணியில் இணைய உள்ளார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். பண்ட் CSK அணியில் இணைவாரா?
SC, ST இடஒதுக்கீட்டில், கிரீமிலேயர் முறை அவசியம், உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக நாளை நாடு தழுவிய பந்த் நடைபெற உள்ளது. இந்த தீர்ப்பு, SC, ST இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் செயல் என விசிக, வடமாநில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முழு பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் சில அமைப்புகள் இந்த பந்தில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
பாஜகவுடன் திமுகவுக்கு ரகசிய உறவு என இபிஎஸ் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜக அரசுடன், திமுக இணைந்து செல்ல வாய்ப்பில்லை என்று கூறிய அவர், ‘கலைஞர் 100’ நாணய விழாவை காரணம் காட்டி திமுக-பாஜக ரகசிய உடன்பாடு என கூறுவது சரியான அரசியல் நடைமுறை அல்ல என்று விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.