news

News August 21, 2024

இனி வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து

image

நாகையிலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இனி வாரத்திற்கு 3 நாள்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் மக்கள் வராத காரணத்தால் இனி செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டுமே நாகையில் இருந்து கப்பல் இயக்கப்படும். இதில் சாதாரண இருக்கைக்கு ₹5,000, பிரீமியம் இருக்கைக்கு ₹7,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

News August 20, 2024

சமூக நீதி காவலர் மோடி: எல்.முருகன்

image

இந்தியாவில் உண்மையான சமூக நீதியை கடைபிடிப்பவர் பிரதமர் மோடி தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளாா். ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக உருவாக்கி, இந்திய அரசியலில் சமூக நீதியை மோடி நிலைநாட்டியதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றால் மாநில அரசே நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

News August 20, 2024

25 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யும்

image

தமிழகத்திலுள்ள 25 மாவட்டங்களில், நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், திருச்சி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, நீலகிரி, தென்காசி, தேனி, தஞ்சை, நாகை உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 20, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (21.08.2024)

image

*மேஷம் – புகழ் அதிகரிக்கும்
*ரிஷபம் – அன்பு தேடி வரும்
*மிதுனம் – தடங்கல் ஏற்படும்
*கடகம் – நலம் உண்டாகும்
*சிம்மம் – அமைதியான நாள்
*கன்னி – பெருமையடைவீர்
*துலாம் – பொறுமை தேவை
*விருச்சிகம் – ஜெயம் உண்டாகும்
*தனுசு – அனுகூலமான நாள்
*மகரம் – மகிழ்ச்சி அதிகரிக்கும் *கும்பம் – முயற்சிக்கேற்ற பலன் *மீனம் – சுபமான நாள்

News August 20, 2024

ரயில்வேயில் 1,376 பணியிடங்கள்

image

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் 1,376 பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டயட்டிசியன், நர்சிங் சூப்பிரண்ட், ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட் உள்ளிட்ட 20 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு <>www.rrbapply.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக செப். 16 வரை விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினருக்கு ₹500, பட்டியல் பிரிவினருக்கு ₹250 தேர்வு கட்டணம்.

News August 20, 2024

முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்

image

மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு, தமிழகத்தில் நாளை தொடங்குகிறது. நாளை காலை 10 மணி முதல் ஆக.27 மாலை 5 மணி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய கல்லூரிகளை தேர்வு செய்யலாம். 13,417 மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக.30இல் இறுதி முடிவுகள் வெளியாகும். செப்.5க்குள் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 20, 2024

Pickleball விளையாட்டு என்றால் என்ன?

image

Pickleball விளையாட்டு அமெரிக்காவில் 1965இல் உருவானது. இந்த போட்டிகள் ஒற்றையர், இரட்டையர் போட்டிகளாக விளையாடப்படுகிறது. பிளாஸ்டிக் பந்துகளுடன், டேபிள் டென்னிஸ் ராக்கெட் போன்று மரத்தாலான ராக்கெட்டுகள் இதில் பயன்படுத்தபடுகிறது.
இந்த போட்டிக்கான மைதானம் 44 அடி (13.4 மீ) நீளமும் 20 அடி (6.1 மீ) அகலமும் கொண்டது. இந்த போட்டிகள் அனைத்தும் 15 முதல் 21 புள்ளிகளை அடிப்படையாக கொண்டு விளையாடப்படுகிறது.

News August 20, 2024

வங்கிக் கணக்கு இல்லாதோரும் UPI மூலம் பணம் செலுத்தலாம்

image

வங்கி கணக்கு இல்லாதவர்களும், UPI மூலம் பணம் செலுத்தும் வசதியை NPC அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் UPI ஐடியை, வங்கி கணக்கு இல்லாதோர் பயன்படுத்தலாம். ஆனால், மெயின் அக்கவுண்ட் ஹோல்டர், கடன் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருந்தால் இந்த வசதியை பெற முடியாது. தற்போது சிலருக்கு மட்டுமே இது பொருந்தும் என்றாலும், விரைவில் அனைவரும் பயனடையும் வகையில் மாற்றம் வரும் எனக் கூறப்படுகிறது.

News August 20, 2024

மாரி செல்வராஜ் யார் என்பதை ‘வாழை’ வெளிப்படுத்தும்: SK

image

மாரி செல்வராஜ் யார் என்பதை ‘வாழை’ படம் எடுத்து காட்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் புகழாரம் சூட்டியுள்ளார். மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்ததை இந்த படத்தின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் என்று நெகிழ்ச்சி தெரிவித்த அவர், எளிய மக்களின் வலி, வேதனை, கண்ணீர், மகிழ்ச்சியை பதிவு செய்யும் போது சினிமா மிகவும் அழகாக இருக்கிறது என்றார். வாழை படம் பல விருதுகளை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

News August 20, 2024

கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து

image

கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் வார கொண்டாட்டங்களை ரத்து செய்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் 231 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது. இந்த சோக நிகழ்வு காரணமாக ஓணம் வார கொண்டாட்டங்களை முதல்வர் ரத்து செய்துள்ளார்.

error: Content is protected !!