India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நியூசிலாந்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை சாரா ஜெட்லி, விராட் கோலிக்கு எதிராக பந்து வீச விரும்புவதாக தெரிவித்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் பந்து வீசுவது கடினம் எனவும், விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கோலிக்கு எதிராக பந்து வீசுவது மட்டுமில்லாமல், அவருடன் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
பாமகவில் அதிகளவில் பட்டியல், பழங்குடியினத்தவரை சேர்க்க ராமதாஸ் அறிவுறுத்தியதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்ட அரூர் சட்டசபை தொகுதி அமமுக மாவட்ட கலை இலக்கிய அணி இணைச் செயலாளர் அன்பழகன் தலைமையில், SC, ST பிரிவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் ராமதாஸ் முன்னிலையில் நேற்று பாமகவில் இணைந்தனர். முன்னதாக, தமிழகத்தில் பட்டியலினத்தவர் முதல்வராக முடியாது என திருமா பேசி இருந்தார்.
▶ஆகஸ்ட் – 21 ▶ஆவணி – 05 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 06:30 PM – 07:30PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 AM >▶திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆக.27ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் எனவும், டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய தலைவரான நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பருடன் முடிவடைய உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் தாய்லாந்து தப்பி சென்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில், சென்னை போலீசார் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளனர். சம்போ செந்திலின் கூட்டாளியான இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்தது தெரியவந்தது. மேலும், இவருடன் செல்போனில் பேசியதாக சினிமா இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
*எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவதே மனிதனின் மிக உயர்ந்த பண்பு. *ஒரு மணிநேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன். *அனைவரும் ஒரே அச்சுக்குள் வார்த்து உருவாக்கப்பட்டிருந்தால், அழகு போன்ற எதுவும் இருக்காது. *ஒரு மனிதனின் நட்பு அவனது மதிப்புக்குரிய சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாகும். *ஒரு மொழி என்பது ஒரு உயிரினத்தைப் போன்றது, அழிந்துபோனால் ஒருபோதும் மீண்டும் தோன்றாது.
கர்நாடகாவில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணிக்குழுவை அமைத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட்டுள்ளார். பெண் மருத்துவர்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சூழலில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவாலா கூறியுள்ளார். உலகளாவிய சுகாதார அவசர நிலையை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் முயற்சியாக தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஓராண்டுக்குள் இது தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
உ.பி, ம.பி, பெங்களூரு, பஞ்சாப், தமிழ்நாடு என கடந்த 2 நாள்களாக அடுத்தடுத்து பெண்கள், குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் செய்திகளால் மகள்களை பெற்றவர்கள் அதீத அச்சத்தில் உள்ளனர். பெண் குழந்தைகளை பாதுகாப்பாக இருக்க சொல்லும் சமூகம், ஆண் குழந்தைகளுக்கு காமம் பற்றிய புரிதல், பாலின சமத்துவம், காதல் மறுப்பை ஏற்று கொள்ளும் பக்குவத்தை ஏன் சொல்லிக் கொடுப்பதில்லை என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
▶1888 – முதலாவது கால்குலேட்டர் கருவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ▶1911 – லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிஸின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது. ▶1957 – சோவியத் ரஷ்யா ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது. ▶1988 – நேபாள-இந்திய எல்லைப்பகுதியில் 6.9 ரிக்டர் என்ற அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,450 பேர் வரை உயிரிழந்தனர்.
Sorry, no posts matched your criteria.