India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் இன்று “பாரத் பந்த்” நடைபெறவுள்ளது. பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு (அருந்ததியர்) வழங்கியது செல்லும் என SC தீர்ப்பளித்தது. இதற்கு எதிரான பந்த்-க்கு விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால், வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும், பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என RMC கூறியுள்ளது. சென்னையில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் 26ம் தேதிவரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ICC வெளியிட்ட மகளிர் ODI பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (738) ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் (648) 9ஆவது இடத்தை தக்க வைத்துள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் 3ஆவது இடத்திலும், ஆல் ரவுண்டர் பிரிவில் 5ஆவது இடத்திலும் தீப்தி ஷர்மா உள்ளார். அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 104 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2024ஐ CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். சென்னையில் உள்ள லீலா பேலஸில், இன்று காலை 10 மணிக்கு விழா நடைபெறுகிறது. ₹17,616 கோடி மதிப்பிலான 19 திட்டங்களை தொடங்கி வைத்து, ₹51,157 கோடி முதலீடு கொண்ட 28 திட்டங்களுக்கு CM அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம் 1,06,803 வேலை வாய்ப்புகள் உருவாகுமென, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முடிந்தால் தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என, காங்கிரஸ் தலைமைக்கு கார்த்தி சிதம்பரம் சவால் விடுத்துள்ளார். திமுக அரசின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அவரின் கருத்தால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் தலைமையிடம், தமிழக கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த கேள்விக்கு, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தாம் பேசியது எப்படி விரோதமாகும் என்றார்.
‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். புதன்கிழமை புதன் பகவானுக்குரிய அதிதேவதையான கணபதியை வழிபட்டால் கல்வி, வியாபாரம், செல்வம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. இன்று கும்பகோணம் கரும்பாயிரம் கோயிலுக்குச் சென்று, அங்கு வீற்றிருக்கும் விநாயகரை அருகம்புல் சாற்றி, நெய் தீபம் ஏற்றி, கொழுக்கட்டைப் படைத்து வழிபட்டால், புதனின் வக்கிர பார்வை மறைந்து நினைத்தது யாவும் நடக்கும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில் ஆக.24, 25 (சனி,ஞாயிறு), ஆக.26 (திங்கட்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி (பொதுவிடுமுறை) என தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஆக.23 -26 வரை சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, குமரி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் www.tnstc.in மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
➤SC, ST இடஒதுக்கீட்டில், கிரீமிலேயர் முறை அவசியம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக இன்று நாடு தழுவிய பந்த் நடைபெற உள்ளது. ➤தமிழ்நாட்டில் ₹17,616 கோடி முதலீடுகளுக்கான துவக்க விழா இன்று நடக்க உள்ளது. ➤வங்கி கணக்கு இல்லாதவர்களும், UPI மூலம் பணம் செலுத்தும் வசதியை NPC அறிமுகம் செய்துள்ளது. ➤மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு, தமிழகத்தில் இன்று தொடங்குகிறது.
அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியால் வெளியிட்ட ஆய்வின்படி, மிதமான காஃபி நுகர்வு, ஒரு நாளைக்கு 2 – 3 கப் வரை காஃபி குடிப்பது, இதய நோய்க்கான குறைந்த ஆபத்துடன் தொடர்புடையது மற்றும் ஆயுட்காலம் நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் அதிகப்படியான காஃபின் உட்கொள்வது நடுக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது தூக்கத்தை சீர்குலைக்கவும் வாய்ப்புள்ளது. நன்றாக தூங்க விரும்புவர்கள் இரவு காஃபியை தவிர்க்கலாம்.
2023 IPL போட்டிகள் மூலம் BCCI-க்கு கூடுதலாக ₹5,120 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. BCCI வெளியிட்ட ஆண்டு நிதி அறிக்கையில், 2023 IPL போட்டிகள் மூலம் மொத்தம் ₹11,769 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த 2022 வருமானத்தை காட்டிலும் 116% அதிகமாகும். அதேவேளையில், கடந்த 2022ஐ விட 66% அதிகமாக ₹6,648 கோடி செலவு செய்துள்ளது. ஊடகங்களின் ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்ஷிப் மூலமே அதிக லாபம் ஈட்டியுள்ளது.
Sorry, no posts matched your criteria.