India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*தைவான்: சீனாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், தைவான் அரசு ஜியுபெங் ராணுவ தளத்தில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. *மெக்சிகோ: என்.ஜி.ஓ மூலம் மெக்சிகோ உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என, அதிபர் ஒப்ராடோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். *ஸ்காட்லாந்து: சாக்சாவோர்ட் ஏவுதளத்தில் சோதனை முயற்சியின்போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு ராக்கெட் வெடித்து சிதறியது.
இண்டிகோ விமானத்தில் லக்னோ – பெங்களூரு பயணித்த வழக்கறிஞர் ஷ்ரயன்ஷ் சிங்கிடம் ரூ.10,023 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டண விவரத்தில் cute fee ரூ.50 என குறிப்பிட்டிருந்த நிலையில், அழகாக இருந்தால் கட்டணம் வசூலிப்பார்களா? என அவர் வலைதளத்தில் கேள்வியெழுப்பினார். அது சோதனைக் கருவிக்கான கட்டணம் என பதிலளிக்கப்பட்டது. அதற்கு அவர், மக்கள் வரியில் வாங்கிய கருவிகளுக்கு பயணிகளிடம் கட்டணமா? எனக் கேட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் டைரக்டர் நெல்சனின் மனைவி மோனிஷாவுக்கு தொடர்பில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது. போலீஸ் தரப்பு கூறியபோது, <<13898071>>நெல்சன்<<>> மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு 10 நாள்களுக்கும் மேலாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடியிடம் செல்போனில் பேசியதை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதில், அவருக்கு சம்பந்தமில்லை என தெரிய வந்துள்ளதாக போலீஸ் குறிப்பிட்டுள்ளது.
ரேஷன் கடைகளின் பெயரை “ஜன் போஷன் கேந்திரா” என மாற்றும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, உ.பி. மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட 60 கடைகளுக்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் 1.50 லட்சம் கடைகள் பெயர் மாற்றப்படவுள்ளன. இக்கடைகளில் இனி 50% சத்து தானியங்கள் விற்கப்பட உள்ளன.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். இதற்கு அவரது காதல் மனைவி பெக்கி பாஸ்டன், 2ஆவது முறையாக கருவுற்றிருப்பதே காரணமாகும். இது தொடர்பாக பெக்கி தனது இன்ஸ்டாவில், கம்மின்ஸ் மீண்டும் தந்தையாகப் போகிறார். இதை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என பதிவிட்டுள்ளார். மகன் ஆல்பி பிறந்து ஓராண்டு கழித்து, இந்த ஜோடி 2022இல் திருமணம் செய்து கொண்டது.
ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்த சீட்டுகளில் யாராவது அமர்ந்து கொண்டு, நகர மாட்டேன் என அடம்பிடித்தால் டென்ஷன் ஆக வேண்டியதே இல்லை. ரயில்வே Help Line எண்ணான 139-க்கு ஒரு மெசேஜ் தட்டினால் போதும். அதில் உங்கள் சீட் நம்பரையும், PNR நம்பரையும் பிறகு seat occupied by another passenger என டைப் செய்து அனுப்பினால் போதும். 10 நிமிடத்தில் அங்கு வரும் டிடிஆர், சம்பந்தப்பட்டவரை அன்பாக வழியனுப்பி வைப்பார்.
மின்கட்டணம் ₹5,000க்கு மேல் கட்டுவது தொடர்பாக, மின்சார வாரியம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது. ₹5,000க்கு மேல் இனி ரொக்கமாக கட்டக்கூடாதென உத்தரவிட்டு, உடனடியாக TNEB அமல்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இத்தொகை முதலில் ₹20,000ஆக இருந்தது. பின்னர் ₹10,000ஆக குறைக்கப்பட்டு, தற்போது ₹5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, இனி காசோலை, D.D மூலம் பணம் கட்ட ஆணையிட்டுள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் எவற்றை சாப்பிடக் கூடாது என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அவை என்னென்ன? * ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை * சிட்ரஸ் பழங்கள் * காபி * சர்க்கரை உணவுகள் * பச்சை காய்கறி * காரமான உணவு * வாழைப்பழங்கள். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்று உப்புசம், செரிமான பிரச்னை, அடி வயிறு வலி ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவ படிப்புக்கான (MBBS) முதல்கட்ட கலந்தாய்வு, தமிழகத்தில் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, ஆக.27 மாலை 5 மணி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய கல்லூரிகளை தேர்வு செய்யலாம். 13,417 மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக.30இல் இறுதி முடிவுகள் வெளியாகும். செப்.5க்குள் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு வங்கிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் IBPS அமைப்பு, சமீபத்தில் 896 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு, பி.இ, பி.டெக்., எல்.எல்.பி., எம்பிஏ >படித்தவர்கள் https://www.ibps.in/index.php/specialist-officers/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஆக.21) முடிவடைகிறது. வேலை தேடும் நபர்களுக்கு இதை பகிர்ந்து உதவுங்கள்
Sorry, no posts matched your criteria.