India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு’ என்ற தலைப்பில், அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் நாளை கலைத் திருவிழா தொடங்குகிறது. 1 முதல் +2 வரை, மாணவர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஓவியம், நடனம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆக.30 வரை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க, பதிவு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. உடனே விண்ணப்பியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை பகிருங்கள்
அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 83 மாவட்டங்களை, 100ஆக அதிகரிக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அதிமுக பிளவுக்கு பிறகு, அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்விகளை சந்தித்து வருவதால், கட்சியை பலப்படுத்த தீர்மானித்துள்ளார். புதிதாக 15 பேருக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்கி, புதியவர்களை கட்சியில் இணைக்கவும், வாக்கு வங்கியை அதிகரிக்கவும் இபிஎஸ் முடிவு எடுத்துள்ளதாக, அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியை பாக்., வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி பாராட்டியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், “2022 டி20 WC தொடரில் பாக்., அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸை போல எனது முழு வாழ்க்கையிலும் ஒரு போட்டியை தான் பார்த்ததில்லை” எனக் கூறியுள்ளார். அந்தப் போட்டியில், 82 (53) ரன்கள் எடுத்து கோலி இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார்.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், மயிலாப்பூர் நிதி நிறுவன தலைவருமான தேவநாதன் கைது நடவடிக்கையின் பின்னணி குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் ஏராளமானார் டெபாசிட் செய்த ₹525 கோடி, 300 கி. தங்கம் மாயமாகி விட்டதாக காங்கிரஸ் நிர்வாகி ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். பிறகு வந்த புகார்களின்பேரில் அவர் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது.
AIIMS உள்ளிட்ட மத்திய அரசின் ஹாஸ்பிடல்களில் பார்வையாளர் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர், வன்கொடுமை- கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, 1 (அ) 2 பார்வையாளர் மட்டுமே நோயாளியுடன் தங்க அனுமதிக்க வேண்டுமென ஹாஸ்பிடல்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பெண் பணியாளர் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் ஆணையிட்டுள்ளது.
1990களுக்கு பிறகு வெளியான அனைத்து ஆக்ஷன் படங்களுக்கு பாட்ஷா திரைப்படம்தான் அடிப்படையாக இருப்பதாக நடிகர் SJ சூர்யா கூறியுள்ளார். ‘சூர்யாவின் சனிக்கிழமை’ பட ப்ரோமோஷன் நிகழ்வில் பேசிய அவர், “பாட்ஷா ஃபார்முலாவைதான் இயக்குநர் ஆத்ரேயாவும் பயன்படுத்தியுள்ளார். ஞாயிறு தொடங்கி வெள்ளி வரை மாணிக்கமாக இருக்கும் நானி, சனிக்கிழமை மட்டும் பாட்ஷாவாக மாறுவது போல கதையை உருவாக்கி உள்ளார்” என்றார்.
வறட்டு இருமல், நெஞ்சு சளி, சுவாசக்கோளாறு பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் முசுக்கை எனும் அயிலேயத்திற்கு இருப்பதாக குணப்பாடல் கூறுகிறது. பினாலிக், யூஜெனால், சபோனின்ஸ், டெர்பெனாய்டுஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் வேருடன், ஆடாதோடை, கண்டங்கத்திரி, திப்பிலி, மிளகு, கிராம்பு ஆகியவற்றைப் பொடித்து, தேனில் குழைத்து வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட உடலில் அதிகரித்த கபமும் பித்தமும் குறையும்.
நாதக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸை, கட்சியிலிருந்து சீமான் நீக்கியுள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேசியதாக, திருச்சி SP வருண்குமார் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு, சாட்டை துரைமுருகன் கொடுத்த தகவலின்படி சீமான் பேசியதாக, தலைமையின் ஒப்புதல் இன்றி, நேற்று ஃபெலிக்ஸ் தன்னிச்சையாக விளக்கக்கடிதம் அளித்தார். இந்நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக, அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் குறித்த அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ தினமான ஆக.8ஆம் தேதி ரெட் லைட் ஏரியாவுக்கு அவர் சென்றிருக்கிறார். அங்கு அடுத்தடுத்து 2 பெண்களுடன் தனிமையில் இருந்த அவர், பிறகு அதிக அளவில் மது அருந்தியுள்ளார். பின்னரும் வேட்கை அடங்காமல், சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சஞ்சய் ராய் சென்று, குற்றத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மோடி 3.0 அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களில், அறிவித்த 4 விஷயங்களில் இதுவரை பின்வாங்கியுள்ளது. ஒளிபரப்பு சேவை ஒழுங்குமுறை மசோதாவை திரும்பப் பெற்ற அரசு, வக்ஃப் மசோதாவினை ஆய்வு செய்ய JPC-க்கு அனுப்பியது. கடும் எதிர்ப்பு LSGT வரி குறியீட்டு பலன்களைக் குறைத்து, பின்னர் அதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது லேட்ரல் என்ட்ரி. பெரும்பான்மை பலம் இல்லாததே இந்த தடுமாற்றங்களுக்கு காரணமெனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.