India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குரங்கு காய்ச்சலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை மினிஸ்டர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது என்றார். சென்னை ராஜீவ்காந்தி ஹாஸ்பிடலில் 10 படுக்கை கொண்ட வார்டு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Netflix OTT தளத்தில் அதிக பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ பெற்றுள்ளது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி ₹100 கோடி கிளப்பில் இணைந்த இப்படம் Netflixஇல் 18.6M வியூஸைக் கடந்து, முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, க்ரூ (17.9M) & லாப்டா லேடீஸ் (17.1M) ஆகிய இரு படங்கள் 2 & 3ஆம் இடத்தைத் தக்கவைத்துள்ளன.
சிறு வியாபாரிகள் GST வரி செலுத்துகிறார்களா என, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளதால், சிறு வியாபாரிகள் GST வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். ஆதலால், G Pay, Phone pay உள்ளிட்ட ஆன்லைன் பேமண்ட் நிறுவனங்களுடன் சேர்ந்து இதனை, சரக்கு, சேவை வரி இயக்குநரகம் கண்காணித்து வருகிறது.
1 நாள் என்பது 24 மணி நேரத்தைக் குறிக்கும் என அனைவரும் அறிந்ததே. ஆனால், இக்கணக்கீடு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுபடுமென ஆதாரத்தோடு சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்களது ஆய்வில், 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கேம்ப்ரியன் வெடிப்பு காரணமாக, நிலவின் ஈர்ப்பு விசை குறைந்து, பூமியின் சுழற்சி பாதிக்கப்பட்டதாகவும், இதனால் நாளின் கால அளவு 26 மணி நேரமாக முன்பு இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
போலந்து பயணத்தை நிறைவு செய்தபின், பிரதமர் மோடி அங்கிருந்து உக்ரைனுக்கு செல்லவுள்ளார். உக்ரைன் ராணுவம் தயாரித்துள்ள Rail Force One என்ற ரயிலில் அவர் பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 20 மணிநேரம் மோடி பயணிக்கவுள்ள அந்த ரயில், நவீன பாதுகாப்பு அம்சங்களையும், விமானத்திற்கு நிகரான வசதிகளையும் கொண்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் இந்த ரயிலில் உக்ரைன் சென்றுள்ளனர்.
இன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.51,157 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். இதன் மூலம் 6.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்கிற நம்பிக்கைதான் இந்த வெற்றிக்கு காரணம்” என பெருமிதத்துடன் கூறினார்.
செல்போன் வந்ததில் இருந்து அதை வைத்து குற்றமும் அதிகரிக்கின்றன. இதை தவிர்க்க சில யோசனைகள். 1) ரகசியம் பேசுகையில் அருகில் இருப்பவர் வீடியோ எடுப்பதாக சந்தேகம் எழுந்தால், உடனடியாக சுதாரிக்கவும் 2) மறுமுனையில் குரலை பதிவு செய்வதாக கருதினால் பேச்சை மாற்றவும் 3) பழைய போனை விற்கையில், மெமரியை அழிக்கவும் 4) அறிமுகமில்லாத நபரிடம் செல்போன் தர வேண்டாம் 5) கடவுச்சொல் பயன்படுத்தவும்.
சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாறுதல் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அவர்களில் செம்பியம் உதவி ஆணையர் பிரவீன் குமாரும் ஒருவர். அவர், சென்னை காவல்துறை பாதுகாப்புப் பிரிவு உதவி ஆணையராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து புளியந்தோப்பு காவல் உதவி ஆணையர் மாறுதல் செய்யப்பட்டார். இதன்பிறகு, செம்பியம் உதவி ஆணையரும் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு 3 ஆண்டாக நடத்தப்படவில்லை என, அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கல்வி உரிமைச்சட்ட அடிப்படையில் அறிமுகமான அத்தேர்வு, ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இந்த விதியை அரசு மதிப்பதே இல்லை என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டு
உள்ளனர். கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், 57 பேரை பணியிட மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.