India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<<14090205>>கெஜ்ரிவாலுக்கு<<>> SC ஜாமின் வழங்கியிருப்பதை உண்மைக்கு கிடைத்த வெற்றி என AAP கூறியுள்ளது. AAP மூத்தத் தலைவர் மணிஷ் சிசோடியா கூறுகையில், கெஜ்ரிவால் போல வேறு எந்த அரசியல்வாதியும் உண்மையானவர்கள் இல்லை, தேசப்பற்றாளர் இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருப்பதாக கூறினார். ஜாமின் அளித்ததற்காக SC, அரசியலமைப்பு, அம்பேத்கருக்கு சல்யூட் அடிப்பதாகவும் குறிப்பிட்டார்.
SC ஜாமினையடுத்து 174 நாள்களுக்கு பிறகு <<14090205>>கெஜ்ரிவால்<<>> சிறையில் இருந்து விடுதலையாகிறார். மதுபானக் கொள்கை வழக்கில் மார்ச் 21இல் ED அவரை கைது செய்தது. இந்த வழக்கில் ஜூலை 12இல் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், இதே வழக்கில் அவர் சிபிஐயினரால் ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டதால் தொடர்ந்து சிறையில் இருந்தார். தற்போது SC இந்த வழக்கில் ஜாமின் வழங்கியுள்ளாதால் அவர் சிறையில் இருந்து விடுதலையாகிறார்.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், செப். 17ஆம் தேதிக்கான அனைத்து Appointmentகளையும் செப். 16க்கு மாற்றியுள்ளது. இது குறித்த அரசின் செய்தி குறிப்பில், மிலாடி நபி செப். 17ஆம் தேதி கொண்டாட உள்ளதாகவும், இதனால், அன்றைய தினத்திற்கான பாஸ்போர்ட் Appointmentகளை முன்கூட்டியே வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான SMS விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் <<14090205>>கெஜ்ரிவாலுக்கு<<>> ஜாமின் அளித்த SC, பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. வழக்குத் தொடர்பாக கருத்துகளை வெளியிடக் கூடாது, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு வரும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் SC உத்தரவிட்டுள்ளது. CBI உரிய நடைமுறையை பின்பற்றி இருப்பதாகவும், அதே நேரத்தில் நீண்டகால சிறைவாசம் என்பது சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் SC தெரிவித்துள்ளது.
டெல்லி CM கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே ED வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் ஜாமின் அளித்துள்ளது. இதனால் கெஜ்ரிவால் விடுதலையாவது உறுதியாகியுள்ளது.
ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி எச்சரித்துள்ளார். “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை, அணியுமாம் தன்னை வியந்து” என திருக்குறளை தனது X பக்கத்தில் பதிவிட்டு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஸ்ரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டது தொடர்பாக அவர் இந்த கருத்தை பதிவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அவதூறு வழக்கு விசாரணைக்காக சபாநாயகர் அப்பாவு, சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதன் வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி, அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மாருதி சுசூகி நிறுவனம் CNG ஸ்விஃப்ட் வேரியண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல், டீசல் வேரியண்ட்களில் ஏற்கெனவே அக்கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், CNG காரை தற்போது மாருதி சுசூகி அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ₹8.20 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ CNGக்கு 32.85 கிலோ மீட்டர் தூர மைலேஜ் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
திமுக அரசைக் கண்டித்து, சென்னையில் வரும் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்காெடுமைகளை திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் 6 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை எனவும் இபிஎஸ் சாடியுள்ளார்.
வெள்ளி விலை கிலோவுக்கு இன்று ₹3,500 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ₹91.50க்கும், 1 கிலோ வெள்ளி ₹91,500க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3.50 உயர்ந்து ₹95ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ₹3,500 உயர்ந்து ₹95,000க்கு விற்கப்படுகிறது. இதையும் சேர்த்து, கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.