India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘தங்கலான்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பா. ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘தங்கலான்’ படத்தில் சில காட்சிகள் பெளத்த மதத்தை போற்றுவதாகவும், வைணவ மதத்தை தூற்றுவதாகவும் உள்ளன. அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நாளை முதல் கொடி பறக்கும் என TVK தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், தமிழக நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாக மாறப் போகும் வீரக் கொடியை, நாளை காலை 9.15 மணிக்கு ஏற்றி பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும், நாளை முதல் கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும் என்ற வாசகமும் விஜய்யின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் ideunom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். UG, PG, MCA, M.Sc, MBA ஆகிய படிப்புகளுக்கு டிசம்பர் 2023இல் தேர்வு நடைபெற்றது. நேரடியாக கல்வி கற்க முடியாதவர்கள் தொலைதூர கல்வி பயின்று வருகின்றனர்.
விஜய் நடித்துள்ள G.O.A.T படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் விஜய் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். பொதுவாக குடும்பப்பாங்கான படமாக இருந்தாலும் ரத்தம் தெறிக்கும் வகையில் சண்டைக்காட்சிகள் அதிகமாக இருந்தால் U/A, A சான்றிதழ் வழங்கப்படும். ₹300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் செப்.5ல் வெளியாக உள்ளது.
அறிவாலயத்தில் நடந்த திமுக மா.செ-க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய வார்த்தைகள், கட்சி வட்டாரத்தில் அனலை வீசியுள்ளதாக கூறப்படுகிறது. முப்பெரும் விழா குறித்து பேசுவாரென எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்தில், சிலரது பெயர்களை சொல்லி, உங்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. இனியும் புகார் வந்தால், கட்சிப்பதவியில் நீடிக்க முடியாது. பார்த்து இருந்துகொள்ளுங்கள் என்ற தொனியில், அவர் எச்சரித்ததே இதற்கு காரணமாம்.
கிருஷ்ணகிரி அருகே மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து விசாரிக்க, பவானீஸ்வரி IPS தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க, CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவம் நடக்காமல் தடுக்க, உரிய பரிந்துரை அளிக்க பல்நோக்கு குழு அமைக்கவும், 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தரவும் ஆணையிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் எண்ணிக்கையில், பிரதமர் மோடியை இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் பின்னுக்கு தள்ளியுள்ளார். இன்ஸ்டாகிராமில் மோடிக்கு 91.3 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். ஆனால், அதைவிட அதிகமாக ஸ்ரத்தா கபூருக்கு 91.4 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். ஆனால், எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் மோடி 101.2 மில்லியன் பாலோயர்களுடன் அதிக பாலோயர் கொண்ட அரசியல் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சாட்சி விசாரணையை தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு முடிந்ததால், சாட்சிகளை விசாரிக்கலாம் என முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுமதியளித்து, விசாரணையை ஆக.28க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.
திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில், கன்வேயர் பெல்டில் தலைமுடி சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக, இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். “பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தொழிலாளர் பாதுகாப்பில் திமுக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களால் தப்பிக்க முடியாது என ஆஸி., கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸி., அணி வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறிய அவர், இந்தமுறை அதை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த தொடர் ஆஸி.க்கு அற்புதமான தொடராக இருக்கப்போகிறது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.