India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அரசு ஆதாரங்கள் கொடுத்தால் சர்ச்சைக்குரிய மத போதகர் <<2528806>>ஜாகிர் நாயக்கை<<>> நாடு கடத்துவது குறித்து பரிசீலிப்போம் என மலேசிய PM அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று டெல்லி வந்த அவர், இந்தியாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய எதையும் நாயக் கூறவில்லை என்றார். மேலும், இந்தியாவின் மத சிறுபான்மையினர், இன சிறுபான்மையினர் குறித்து கவலை அடைவதாகவும் அவர் கூறினார்.
<<13843752>>கொல்கத்தா <<>>சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு மெடிக்கல் காலேஜில், 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க மருத்துவ கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார். அதில் “36 கல்லூரிகள், மருத்துவ மாணவிகளின் விடுதிகளில் காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். கல்லூரிகளில் 100-160 CCTV வரை பொருத்த வேண்டும். மெடிக்கல் காலேஜ் போலீசாரின் எண்ணிக்கையை 9ஆக உயர்த்த வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டில் மாலை நேரத்தில், விளக்கு ஏற்றியதும் எதை செய்ய கூடாது என ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன? *கூந்தல் வார கூடாது * தயிர் தானமாக அளிக்க கூடாது * எண்ணெய் கீழே சிந்தக் கூடாது * குங்குமம் தவறியும் சிந்தக் கூடாது * வீட்டில் சண்டையிடக் கூடாது *வீட்டை தண்ணீர் விட்டு கழுவக் கூடாது * வீட்டை சுத்தம் செய்யக் கூடாது * தலை சவரம் அல்லது முக சவரம் செய்ய கூடாது *வீட்டில் தூங்கக் கூடாது
‘கலைஞர் 100’ நாணய வெளியீட்டு விழாவை குறிப்பிட்டு, திமுக-பாஜக ரகசிய உறவு என்று அதிமுக தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். திமுக நிகழ்ச்சிக்கு எதற்காக ராஜ்நாத் சிங் வர வேண்டும் எனவும், கூட்டணியில் உள்ள ராகுலை ஏன் அழைக்கவில்லை என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்தார். பாஜகவுடன் கொள்கை ரீதியாக எந்த உறவும் இல்லை என்று முதல்வர் பதிலளித்தாலும், சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
நாடு முழுவதும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிய 23 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 6.19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். பிஹாரில் 4.5 லட்சம், சத்தீஸ்கரில் 3.3 லட்சம் பணியாளர்களை நீக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. போலி அட்டை, வேலை செய்ய விரும்பாதவர்கள், கிராமத்திலிருந்து வெளியேறுதல் மற்றும் இறப்பு ஆகிய காரணங்களால் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களில் தலைமை மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 9 நிறுவனங்கள் தங்கள் CEOக்களை மாற்றியுள்ளன. அந்த வரிசையில், தற்போது தலைமை நிதி அதிகாரிகளும் (CFO) மாற்றப்பட்டு வருகின்றனர். சிலர் ஓய்வு பெறுவதன் காரணமாக மாற்றப்பட்டாலும், பலர் AI வளர்ச்சிக்கு ஏற்றபடி தொழில்நுட்ப ஆர்வலர்களாக இருக்க வேண்டுமென்ற காரணத்திற்காக மாற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
பாஜக தலைமை நினைத்தால் அண்ணாமலையை நாளையே மாற்றி விடுவார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். தமிழகத்தில் கூட்டணி குறித்து மத்திய பாஜக மட்டுமே முடிவு செய்யும் என்ற அவர், அண்ணாமலையால் மாமன் மச்சான் கூட்டணி எல்லாம் அமைக்க முடியாது என்றும் கூறினார். அரசியலில் தான் ஒரு கத்துக்குட்டி என்பதை அவர் தொடர்ந்து நிரூபித்து வருவதாகவும் சாடினார்.
அரசு முறைப் பயணமாக 2 நாள்கள் போலந்து சென்ற பிரதமர் மோடிக்கு வார்சா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளில் போலந்துக்கு இந்தியப் பிரதமர் செல்வது இதுவே முதல் முறையாகும். அந்த பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 23ஆம் தேதி ரயில் மூலமாக மோடி உக்ரைன் செல்லவுள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் அதிபருடன் அவர் பேச வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கருணாநிதி நினைவு நாணயம், ஒரே நாளில் ₹50 லட்சத்திற்கு விற்றுள்ளது. மறைந்த DMK தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு (1924-2024) நினைவாக ₹100 நாணயம் வெளியிடப்பட்டது. இதனை ₹10,000 கொடுத்து வாங்கலாம் என CM ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து நேற்று ஒரே நாளில் 500 நாணயங்கள் விற்றுள்ளன. இதனிடையே ஏழை தொண்டர்களும் வாங்கும் வகையில், நினைவு நாணயத்தின் விலையை குறைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
உலகின் தலைசிறந்த 3 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களை ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்துள்ளார். முதலிடத்தில் ஆஸி, முன்னாள் வீரர் ரோட்னி மார்ஷ் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் முறையே தோனி மற்றும் இலங்கையின் சங்கக்கார உள்ளனர். தோனி கூலாக இருப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஆடம் தெரிவித்துள்ளார். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கில்கிறிஸ்ட் அந்த பட்டியில் தனக்கு இடமளிக்கவில்லை.
Sorry, no posts matched your criteria.