India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் மொட்டை கிருஷ்ணனுக்கு தான் பணம் தரவில்லை என இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கடந்த 7ஆம் தேதி போலீசார் விசாரணை நடத்தியதாகவும், அதில் தன் தரப்பு விளக்கத்தை கூறியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மொட்டை கிருஷ்ணனுடன் தன்னை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் கர்நாடகாவில் நடைபெறும் மகாராஜா T20 லீக்கில் விளையாடி வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7,7,33,16,2 என மொத்தம் 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனை ஜாம்பவானின் மகன் இப்படி தடுமாறுகிறார் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இனி வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
TVK கொடி, 2 வண்ணங்களை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்சி தொடங்கியுள்ள விஜய், நாளை காலை 9.15 மணிக்கு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துகிறார். சென்னை பனையூரில் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், கட்சிக் கொடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், 2 வண்ணங்கள் இருப்பதாகவும், கொடியின் நடுவில் 2 போர் யானைகள் உள்ளது போல உருவாக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
ஜார்கண்ட் EX முதல்வர் சம்பாய் சோரன் ஒரு வாரத்தில் புதிய கட்சியைத் தொடங்குகிறார். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் என்றும், கட்சி தொடங்கி தனது புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பும் கட்சிகளை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஹேமந்த் சோரனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால், அவர் JMM கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
வெளிநாட்டு முதலீட்டாளரான Highdell Investment, 2.36 சதவீத கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகளை ₹1300 கோடிக்கு அதன் உரிமையாளரிடம் விற்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 2.42 கோடி பங்குகளை ₹535 வீதம் வாங்கவுள்ளதாக கல்யாண் ஜுவல்லர்ஸ் Stock Exchangeஇல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் Promoter holding 60.59%இல் இருந்து 62.95%ஆக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நாடு முழுவதும் சுமார் 65 லட்சம் மாணவர்கள் 10, +2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 10ஆவது பெயிலானவர்களின் எண்ணிக்கையில் ம.பி.யும், 12ஆவது பெயிலானவர்களின் எண்ணிக்கையில் பிஹாரும் முதலிடம் பிடித்துள்ளன. State Boardஇல் படித்த 16% பேரும், Central Boardஇல் படித்த 6% பேரும் 10ஆவது தேர்ச்சி பெறவில்லை என அரசு குறிப்பிட்டுள்ளது. +2வில் இது 18% & 16% ஆக உள்ளது.
சிலர் பொழுது போக்கிற்காக TV நிகழ்ச்சியை காலையில் இருந்து இரவு தூங்கும் வரை பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது குறித்து கண் மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம். TVயை தொடர்ந்து பார்ப்பது கண்ணுக்கு பாதிப்பை தரும், கண் அழுத்தம், பார்வை குறைபாடு பிரச்னையை தரும் என கூறுகின்றனர். டிவியில் பார்ப்பதில் இருந்து கண்ணுக்கு குறைந்தது 4 மணி நேரம் ஓய்வு தரவும் பரிந்துரைக்கின்றனர்.
ஆந்திராவிலுள்ள தொழிற்சாலையில், அணு உலை வெடித்ததில் 14 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சுதாபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ள Escientia ஃபார்மா ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அணு உலை வெடித்ததில் கட்டடம் இடிந்த நிலையில், அதன் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பயணிகளின் பேக்கேஜ் அளவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் குறைத்துள்ளது. AIE விமானத்தில் பயணிக்கும் அனைவரும் இனி 20 கிலோ அளவு மட்டுமே பொருட்களை எடுத்து செல்ல முடியும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன் 30 கிலோ வரை பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கு முன்பாக எடையை சரிபார்த்து கொள்ள பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நடிகர் விஜய், லண்டனை சேர்ந்த தனது ரசிகை சங்கீதாவை கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை எழும்பூரில் உள்ள மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விரைவில் இவர்கள் 25ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாட உள்ள நிலையில், இவர்களது திருமண பத்திரிகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் திருமணத்தின் போது உங்கள் வயது என்ன?
Sorry, no posts matched your criteria.