India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசால் நடத்தப்படும் முதலீட்டாளர் மாநாட்டால் என்ன பயன் என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.8 லட்சம் கோடிக்கு முதலீடுகள் பெற்றதாக CM தெரிவிப்பதாக கூறிய அவர், அந்த மாநாட்டின் மூலம் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது ? எத்தனை ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்? என வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் என்றும் வினவியுள்ளார்.
மத்திய அரசின் ரயில் விகாஸ் நிகாம் நிறுவன வேலைவாய்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் DGM, EXECUTIVE, SENIOR EXECUTIVE உள்ளிட்ட 5 பதவிகளில் 44 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. EXECUTIVE வேலை மட்டும் ஒப்பந்த அடிப்படையிலானது. மற்ற வேலைகள், ரெகுலர் அடிப்படையிலானது. rvnl.org தளத்தில் விண்ணப்பப் பதிவு செய்யலாம். செப். 5 கடைசி நாள் ஆகும்.
ஆந்திரா ஃபார்மா நிறுவனத்தில் ரசாயன ரியாக்டர் வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரண நிதி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த நிகழ்வு வலியைத் தருவதாக இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டார்.
கடந்த 2020 முதல் GST உள்ளீட்டு வரிப்பயன் மோசடி மூலம், ₹1.20 லட்சம் கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை GST புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து, போலி நிறுவனங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து அரசின் வருவாயை பெருக்க, கடந்த 16 ஆம் தேதி முதல் சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு இந்த சோதனைகள் தொடரும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் (RMC) தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வருகிற 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் RMC குறிப்பிட்டுள்ளது.
இனி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த குஷ்பு, அந்த பதவியில் இருந்ததால், கட்சி செயல்பாடுகளில் தன்னால் ஈடுபட முடியவில்லை என்று கூறினார். எனவே பாஜக தலைமையிடம் கலந்து பேசியே தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
➤வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றி, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது. ➤நாடு முழுவதும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிய 23 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 6.19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். ➤தவெக கட்சி கொடி இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் 405 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 279 இடங்கள் பராமரிப்பு தொழிற் பழகுநர் அடிப்படையிலானது. எஞ்சிய 126 இடங்கள் எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்டவை ஆகும். இந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு, இந்திய அணுசக்தி நிறுவன இணைய தளத்தில் இன்று தொடங்கி உள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க செப். 11 கடைசி நாள் ஆகும். SHARE IT
மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாதத்திற்குள் CCTV கேமராக்களை பொறுத்த வேண்டும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. பட்லபூர் பகுதியில் உள்ள பள்ளியில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம், அதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் வன்முறை என இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை, வயநாடு நிலச்சரிவோடு இணைத்து பேசிய மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபிக்கு OPS கண்டனம் தெரிவித்துள்ளார். காடுகள் அழிப்பு, சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட காரணங்களால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இதை புரிந்து கொள்ளாமல் பொறுப்புள்ள மத்திய அமைச்சர், பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.