India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக நிர்வாகிகள் எடுக்கும் உறுதிமொழிகள் வெளியாகியுள்ளன. அதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன், எல்லோர்க்கும் சமவாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன், ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவத்தை பேணிக்காப்பவராகச் செயல்படுவேன், மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக் கடமை ஆற்றுவேன் என்று கூறப்பட்டுள்ளது.
40 வயதை கடந்த பெரும்பாலான பெண்களுக்கு அடிக்கடி கை, கால் வலியும், நடக்க சிரமப்படும் நிலையும் ஏற்படும். இதற்கு காரணம் நம் உடல்தான். எலும்புகளை வலுவாக்குவதும், இதயத்திற்கும் கால்சியம் முக்கியம். அது இல்லையெனில் நம் உடலே, எலும்புகளில் உள்ள கால்சியத்தை உறிஞ்சிவிடும். இதுதான் எலும்புகளை வலுவிழக்கச்செய்கிறது. பால், வெண்ணை, கீரை, சிட்ரஸ் பழ வகைகள் உள்ளிட்டவற்றில் கால்சியம் நிறைந்துள்ளது.
செபி தலைவர் மாதவி புச் ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாநில தலைநகரங்களில் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதானி குழும முறைகேடு, செபி தலைவருக்கு எதிரான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை 151 M.P., MLAக்கள் எதிர்கொள்வது தெரிய வந்துள்ளது. 2019-2024ம் ஆண்டு வரை தேர்தல்களில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலேயே அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தில் 25 M.P., MLAக்கள் பெண்களுக்கு எதிரான வழக்குகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் சென்னை குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். மெரினா, வள்ளுவர் கோட்டம், பெசன்ட் நகர், வடபழனி, சத்யம் தியேட்டர் என சென்னையில் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத ஒரு இடம் இருக்கும். அந்த வகையில் சென்னை என்றதும் உங்கள் நினைவில் வரும், உங்களால் மறக்க இயலாத, உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது? கமெண்ட்டில் சொல்லுங்க.
ஹெர்பல் பால், அஸ்வகந்தா பால், சுக்குமல்லி காபி ஆகியவற்றை அறிமுகம் செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியபோது, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், புதுவிதமான பால்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறினார். ரேஷன் கடைகள், அமுதம் அங்காடிகளில் ஆவின் பாலை விற்க தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாகித்ய அகாடமி, பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பம் கோரியுள்ளது. அந்த அமைப்பில் துணை செயலர்கள், பிராந்திய செயலர், டெபுடி எடிட்டர், பதிப்பு உதவியாளர், உதவி ஆசிரியர் (ஆங்கிலம்), நிகழ்ச்சி உதவியாளர், ஸ்டெனோகிராபர், ஜூனியர் கிளார்க், பிழை திருத்துபவர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதர விவரம் sahitya.akademi.gov.in இணையதளத்தில் உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய பணிக்குழுவை, மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த பணிக்குழுவிற்கு, அமைச்சரவை செயலாளர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த 3 வாரங்களுக்குள் இடைக்கால அறிக்கையும், 2 மாதங்களுக்குள் முழு அறிக்கையும் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
சென்னை இன்று 385ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 1639-இல் வெங்கடப்பா நாயக்கர், அய்யப்பா நாயக்கர் வசமிருந்த மதராசப் பட்டினத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்காக ஒரு இடத்தை ஆங்கிலேயர்கள் கேட்டனர். அதன்படி, 5 மைல் நீளம், ஒரு மைல் அகலத்தில் ஒரு இடத்தை நாயக்கர் சகோதரர்கள் கொடுத்தனர். அவர்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக, அவ்விடத்திற்கு சென்னப் பட்டினம் என பெயரிடப்பட்டது. அதுதான் சென்னை ஆனதாக வரலாறு.
தவெக கொடியை இன்று காலை விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார். இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதில் நிர்வாகிகள் 500 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட உள்ளார். கொடியில் வாகை மலர், மஞ்சள், சிகப்பு, வெள்ளை நிறங்கள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.