news

News August 22, 2024

விஜய்யின் மனைவி எங்கே?

image

விஜய் தனது கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்திய விழாவில் அவரது தாயார் சோபா, தந்தை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் 2 பேரும் பந்தலில் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். விழாவுக்கு வரும்போது 2 பேரிடமும் பேசாத விஜய், கடைசியில் சில நொடிகள் மட்டும் பேசினார். இதேபோல், விஜய்யின் மனைவி சங்கீதா, மகன், மகள் ஆகியோர் வரவில்லை. இது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

News August 22, 2024

கால் பாதங்கள் வீக்கமா? உடனே கவனிங்க

image

சிலருக்கு கால் பாதம் திடீர் திடீரென வீங்குவது வாடிக்கையாக இருக்கும். இதை சாதாரணம் என்று கருதி விட்டுவிடக் கூடாதென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் கால்பாதம் வீங்கும் என்றும், ஆதலால் மருத்துவர்களை உடனடியாக அணுகி பரிசோதனை செய்வது அவசியம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். இதை நண்பர்களுக்கு பகிருங்க.

News August 22, 2024

மகாராஜா படத்தில் நடிக்காதது ஏன்? சாந்தனு விளக்கம்

image

மகாராஜா படத்தில் நடிக்காமல் போனதற்கு, தந்தை பாக்யராஜ் காரணமல்ல என, நடிகர் சாந்தனு விளக்கமளித்துள்ளார். இயக்குநர் நித்திலன் முதலில் தன்னிடம் கதையை கூறியதாகவும், தயாரிப்பு தரப்பு அதை ஏற்காததால் படம் ட்ராப் ஆனதாகவும் தெரிவித்துள்ளார். ஜூன் 14இல் வெளியான இப்படம் ₹100 கோடியை வசூலித்துள்ளது. மேலும், 2024 இல் நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.

News August 22, 2024

BREAKING: விஜய் கட்சி கொடி; BSP எச்சரிக்கை

image

தவெக கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்குமாறு விஜய்க்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய கட்சியான பிஎஸ்பியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதிகள்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில், தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவும், வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பிஎஸ்பி எச்சரித்துள்ளது.

News August 22, 2024

விஜய் vs உதயநிதி என மாறுமா தமிழக அரசியல் களம்?

image

கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்திற்கு வந்திருக்கிறார் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கே விஜய் கடும் சவாலாக மாறுவார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, எதிர்காலத்தில் உதயநிதி வசம் திமுக வரும் போது, அவருடன் நேரடி அரசியல் மோதலில் விஜய் ஈடுபடுவார் என்றும், விஜய் vs உதயநிதி என களம் மாறலாம் எனவும் கணிக்கின்றனர்.

News August 22, 2024

இதய நோய்களை அடித்து விரட்டும் கணவாய் மீன்

image

அசைவ உணவுகளில் மீன் தான் எப்போதும் பெஸ்ட். அதிலும் கணவாய் மீன் வேற லெவல். பேச்சு வழக்கில் ‘கடம்மா’ என அழைக்கப்படும் இந்த மீனில் நல்ல கொழுப்பும், B12 வைட்டமினும் அதிகமுள்ளதால், இதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. ஆதலால் தான், இதய நோயாளிகளுக்கு இந்த மீன்கள் மிகவும் நல்லது. இன்சுலினை சுரக்க செய்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது அருமருந்து. ஆண்மைக் குறைவையும் இது போக்குகிறது.

News August 22, 2024

24 வயதில் அர்ச்சனா காமத் விலகல்…காரணம் என்ன?

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் சாதித்த அர்ச்சனா காமத் (24), டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லவுள்ளதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. பாரிஸ் ஒலிம்பிக்ஸில் காலிறுதிப் போட்டியில் இந்தியா சார்பாக அர்ச்சனா காமத் மட்டுமே ஒரேயொரு சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். பொருளாதாரம் தொடர்பான படிப்பை அவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

News August 22, 2024

திமுக கொடியுடன் உதயநிதி.. விஜய்க்கு போட்டியா?

image

கையில் திமுக கொடியுடன் உதயநிதி ஸ்டாலின் நிற்பது போன்ற வீடியோவை திமுக I.T. பிரிவு, தனது x தளத்தில் வெளியிட்டிருப்பது, அரசியல் களத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது. பனையூரில் தவெக கட்சிக் கொடியை விஜய் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து அக்கொடி பற்றிய செய்தி வைரலாகி வரும் நிலையில், திமுக I.T. பிரிவின் எக்ஸ் பக்கத்தில் உதயநிதியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

News August 22, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: மேலும் மூவர் கைது

image

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் மூவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். புதூர் அப்பு என்பவரின் கூட்டாளியான ராஜேஷ், கோபி, குமரன் என்ற அந்த 3 பேரும், சம்போ செந்தில் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகத் தெரிகிறது.
கொலைக்காக அவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்ததாகவும், ஒருவேளை அரிவாள் வெட்டு தவறினால், வெடிகுண்டு வீசி கொல்வதை பிளான்-பி ஆக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

News August 22, 2024

சென்னையை நம்பர்-1 நகரமாக்குவோம்: அன்புமணி

image

சென்னையை நம்பர்-1 நகரமாக்க உறுதியேற்போம் என்று, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தினத்தையொட்டி அவர் வெளியிட்ட பதிவில், சென்னை மண் பாட்டாளிகள், பூர்வகுடிகளின் மண் என கூறியுள்ளார். பாட்டாளிகளின் உழைப்பே சென்னையை வளர்ச்சியடைந்த மாநகரமாக மாற்றியிருக்கிறது. சென்னையை முதன்மை நகரமாக்க கடுமையாக உழைக்க உறுதியேற்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!