India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால், அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றிருக்க முடியாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவின் ஆதரவு வாக்குகள், அதிமுகவுக்கு சென்றதால் மட்டும் பல இடங்களில் அதிமுக வெற்றிபெற முடிந்ததாக விமர்சித்துள்ள அவர், பல தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகள், பாஜகவுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கடந்த வாரம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட முருகானந்தம், மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, பணியில் சிறப்பாக செயல்பட அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக தெரிகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராதான் தற்போது கிரிக்கெட்டில் சிறந்த பவுலர் என நியூசிலாந்து கேப்டன் சவுதி பாராட்டியுள்ளார். ‘சியட்’ விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா, முன்பை விட சிறப்பாக ஆடுவதாக கூறினார். மேலும், அவரைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை என தான் நினைப்பதாகவும், மூன்று வடிவ போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடி வருவதாகவும் புகழ்ந்துள்ளார்.
வட்டி குறைவாக இருப்பதால் வங்கிகளில் FD குறைந்துள்ளது. இந்நிலையில், FDஐ அதிகரிக்க வங்கிகள் குறைந்த காலத்தில் வட்டியை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில், IDIB வங்கி Utsav FD என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 300 நாள்களுக்கு 7.05%, 375 நாள்களுக்கு 7.25%, 444 நாள்களுக்கு 7.35% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5% வட்டி கிடைக்கும். இத்திட்டம் செப்.30 வரை மட்டுமே.
6 தமிழ் படங்கள் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. சூரி நடித்த கொட்டுக்காளி, மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விமல் நடிப்பில் ‘போகும் இடம் வெகுதூரமில்லை’, காமராஜ் இயக்கத்தில் ‘அதர்ம கதைகள்’, மணிபால் இயக்கத்தில் ‘சாலா’ படமும் வெளியாகிறது. ஸ்ரீவெற்றி இயக்கத்தில், நடிகை அபர்ணதி நடித்துள்ள ‘நாற்கரப்போர்’ படமும் ரிலீசாகிறது.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராயின் வாக்குமூலம் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் மனோதத்துவ ஆய்வு நடத்தினர். அதில் சஞ்சய் ராய் வக்கிரமான பாலியல் பழக்கத்திற்கு அடிமையாகி மிருகம் போல் நடந்து கொண்டதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். விசாரணையில் அவர் சற்றும் உணர்ச்சிவசப்படாமல், நிதானமாக பதிலளித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்கள் சந்திக்கும் பெரிய பிரச்னைகளில் முன்னந்தலை வழுக்கையும் ஒன்று. இதற்கு மருத்துவர்கள் கூறும் காரணத்தை அறியலாம். தலைமுடி பராமரிப்பில்லாதது, எண்ணெய் சத்து இல்லாதது, சத்து குறைபாடு, மூதாதையர் வழிவருதல், மாசடைந்த நீர் ஆகியவை காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், நல்ல தண்ணீர் ஆகியவை மூலம் வழுக்கையை கட்டுப்படுத்த முடியும் எனவும் பரிந்துரைக்கின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள தங்கள் உறவினர்களுக்காகவும், படிப்பு செலவுக்காகவும் இந்தியாவில் இருந்து கோடிக்கணக்கான பணம் அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும் பணத்திற்கான வரி 5-இல் இருந்து 20 சதவீதமாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் நிதி கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு 3.9 பில்லியன் டாலராக இருந்த அளவு, நடப்பாண்டு 2.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் தயாராக இருப்பதாக, ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் செப்.18, செப்.25, அக்.1 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பேசிய ராகுல், “கூட்டணிக்கு காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வை பிற கட்சிகள் மதிக்க வேண்டும்” என்றார்.
கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது நடவடிக்கைக்கு அஞ்சி, 19ம் தேதிக்கு முன்பே அவர் 2 முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக போலீசார் விளக்கமளித்துள்ளனர். உடல் நலக்குறைவால், தற்போது அவர் மருத்துவமனையில் உள்ளார். காந்தி குப்பத்தில் போலி முகாம் நடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக, மற்றுமொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.