news

News August 22, 2024

இலங்கை செல்ல விசா தேவையில்லை

image

இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா வர விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி ஆறு மாதங்கள் வரை இலங்கையில் விசா இன்றி தங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலம் அதிக வருமானம் கிடைக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News August 22, 2024

அடுத்த 2 மாதங்களுக்குள் பட்டமளிப்பு விழா: ஆளுநர்

image

அடுத்த 2 மாதங்களுக்குள் 10 பல்கலை.களில் பட்டமளிப்பு விழா நடத்த முன்மொழிந்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. பட்டமளிப்பு விழா தாமதம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆளுநர், 2023 ஏப். முதல் 2024 ஜூலை வரை 20 மாநிலப் பல்கலை.களில் 18 பல்கலை.களில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். முன்னதாக, பட்டமளிப்பு விழா தாமதமாவதால் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக தகவல் வெளியானது.

News August 22, 2024

சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை

image

விருதுநகர், வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் என்றழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது மோதிரத்தில் பதிக்கும் வகையில் உள்ளது. செதுக்கு முறையில் சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப்பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். இப்பதக்கம் 10.6 மிமீ சுற்றளவும் 3.6 மிமீ தடிமனும் 60 மிகி எடையும் கொண்டுள்ளது.

News August 22, 2024

வளம் தரும் திருவிளக்கு வழிபாடு

image

காலையும், மாலையும் திருவிளக்கு ஏற்றி வழிபட்டால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என ஆன்மிகம் கூறுகிறது. அதை தெரிந்து கொள்வோம். காலை, மாலை 2 வேளையும் திருவிளக்கை ஏற்றி, பக்தியுடன் வழிபாடு நடத்தினால், அனைத்து பிரச்னைகளும் விலகும். திருவிளக்கு வெளிச்சத்தில் பரவும் ஒளி வீட்டில் இருளைப் போக்கி நேர்மறை சக்தியை பரப்பி வளம் தரும் என ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது.

News August 22, 2024

சமூகத்தின் நம்பிக்கை குலைகிறது: மம்தா

image

நாடு முழுவதும் தினந்தோறும் சுமார் 90 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதாக WB CM மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து PM மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தின் நம்பிக்கையையும், மனசாட்சியையும் குலைப்பதாக கூறியுள்ளார். மேலும், கடுமையான சட்டங்கள் உருவாக்கிட வேண்டுமெனவும், விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்திட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News August 22, 2024

விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை.. APPLY

image

இந்திய விமானப்படையில் அக்னிவீர் திட்டத்தின்கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடைபந்து, கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட 20 விளையாட்டு பிரிவுகளில் இந்த ஆட்தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பப்பதிவு https://agnipathvayu.cdac.in/casbspm இல் நடைபெறுகிறது. செப். 29ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாமே.

News August 22, 2024

கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை: முதல்வர்

image

கருணாநிதியின் அனைத்து நூல்களும், நூலுரிமை தொகையின்றி நாட்டுடைமை ஆக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆயிரக்கணக்கான கடிதங்களை அவர் எழுதியுள்ளார். மேலும், 75 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதை தமிழறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.

News August 22, 2024

போட்டி போட்டு களம் இறங்கும் AR Glasses

image

Meta மற்றும் Snap ஆகியவை தங்களின் சமீபத்திய Augmented Reality (AR) கண்ணாடிகளை அடுத்த மாதம் காட்சிப்படுத்த தயாராகி வருகின்றன. செப்.17இல் Snapஇன் கண்ணாடியும், செப்.25இல் Metaவின் கண்ணாடியும் அறிமுகமாகிறது. இரு கண்ணாடிகளும் முந்தைய Generationஐ விட அதிக செயல்திறன் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. AR கண்ணாடி மூலம் கேமிங், வீடியோ, Reading ஆகியவற்றில் Realtime Experienceஐ உணர முடியும்.

News August 22, 2024

டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த ரிஸ்வான்

image

வங்கதேசம் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 448/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. இதில் பாக்., தரப்பில் சிறப்பாக ஆடிய ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 171* ரன்கள் குவித்தார். டெஸ்டில் இவர் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். அது மட்டுமின்றி இதுவே அவரது அதிகபட்ச டெஸ்ட் ரன்னாகும். இதற்கு முன்பாக அவர் 115 ரன்கள் எடுத்ததே டெஸ்டில் அவரது அதிகபட்ச ரன்னாக இருந்தது.

News August 22, 2024

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

image

நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முதல் மருத்துவர்கள் பணிகளை தொடங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!