India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரவில் உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கும் நேரம். அப்போது நினைத்ததை எல்லாம் சாப்பிட்டால், அது அஜீரண பிரச்னையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சோலா பூரி, பரோட்டா, பிரியாணி, அசைவ உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், மைதா உணவுகள் சாப்பிடக் கூடாது. இட்லி, இடியாப்பம், ஓட்ஸ் கஞ்சி, தோசை, ஆப்பம், காய்கறி சாலட், பழங்கள், பழச்சாறுகள் சாப்பிடலாம் என பரிந்துரைக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் இன்று முதல் கலைத் திருவிழா தொடங்கியுள்ளது. பள்ளிகள் அளவில் நடனம், ஓவியம் உள்ளிட்ட பல வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஆக. 24, 25, 26 என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், இந்த 3 நாட்களில் கலைத் திருவிழா நடக்குமா, நடக்காதா? என்று மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதுபோன்று சந்தேகம் இருந்தால், நாளை பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்குப் பின் ‘அந்தகன்’ படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ள அவர் விஜய்யின் ‘கோட்’ படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக மம்முட்டி, அஜித், நடிப்பில் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு இவரிடம் சென்றது. ஒரு சில காரணங்களால் பிரசாந்த் நடிக முடியாமல் போகவே அதில் அஜித் நடித்துள்ளார்.
கதகளி அலங்காரத்தில் ஃபேஷன் போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளத்தில் பரவிய புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவின் கலைப் பண்பாட்டு கல்வி நிறுவனமான கலமண்டலம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பல கதகளி கலைஞர்கள் எதிர்ப்பு பதிவு செய்து வரும் நிலையில், போலிசில் புகார் அளிக்கவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. கதகளி பாரம்பரியத்தை அவமதித்தவர்கள் விளக்கம் அளிக்க கோரப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இலங்கை வீரர் மிலன் ரத்னாயக புதிய சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 9வது வீரராக களமிறங்கிய அவர் 72 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் 9வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் அடித்தவர் என்ற இந்திய வீரர் பல்விந்தர் சந்துவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். முன்னதாக பல்விந்தர் 1983ஆம் ஆண்டில் 71 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
இருளில் செல்போன் பார்ப்பது சரியா, தவறா என சந்தேகம் இருக்கும். அதுகுறித்து கண் மருத்துவர்கள் என்ன தெரிவிக்கின்றனர் என பார்க்கலாம். பொதுவாக, இருளில் செல்போன் பார்ப்பது, அதிலுள்ள வாசகங்களை படிப்பது கண்ணுக்கு சோர்வை தரும். இதனால் கண்ணில் அழுத்தம் அதிகரித்து படிப்படியாக பார்வை பிரச்னையை ஏற்படுத்தும், ஆதலால் இருளில் செல்போன் பார்ப்பதை தவிர்க்கும்படி அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT
Whatsapp ஹேக் செய்யப்பட பல காரணிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம். *Whatsapp Verification Codeஐ பிறருக்கு ஷேர் செய்தல். *Weakஆன Pinஐ செட் செய்தல். *மோசடி Linkஐ கிளிக் செய்தல். *VPNஐப் பயன்படுத்தாமல் பொது WiFi நெட்வொர்க்குகளில் WhatsApp பயன்படுத்துதல். *WhatsAppஐ அப்டேட் செய்யாமல் இருப்பது *PC, Laptopஇல் பயன்படுத்தும் போது Logout செய்ய மறப்பது. *ஒரே Passwordஐ பல தளங்களில் பயன்படுத்துதல்.
காவிரி பிரச்னை குறித்து இரு மாநிலங்களுக்கும் இடையே விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படும் என முன்னாள் PM தேவகவுடா கூறியுள்ளார். கர்நாடகாவில் 9 மாவட்ட மக்கள் தண்ணீருக்கு அவதிப்படுவதாகவும், பெங்களூருவில் 1.40 கோடி மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுவதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாட்டை ஆளும் கட்சிகளுக்கு இந்த பிரச்னை குறித்து தெரியும் என்றும், விரைவில் இதற்கு தீர்வு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தாட்கோ சார்பில் உயர் கல்வி பயில இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படவுள்ளன. இதற்கு, +2, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவுகள் தாட்கோவால் வழங்கப்படும். மனிதநேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை – அறிவியல் போன்ற படிப்புகளை வெளிநாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும்.
Ormax நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பிரபலமான நடிகர்களின் தரவரிசையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூலை மாதத்திற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் 2ஆம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் பிரபாஸ் உள்ளார். இவர்களைத் தொடர்ந்து ஷாருக் கான், மகேஷ் பாபு, ஜூனியர் NTR, அக்ஷய் குமார், அல்லு அர்ஜுன், சல்மான் கான், ராம் சரண், அஜித் குமார் ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.