India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘தங்கலான்’ படத்தில் ஆரத்தி கதாப்பாத்திரம் மிகக் கடுமையான உழைப்பை வேண்டியதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். சிங்கிள் ஷாட் சண்டை காட்சிகள், கொளுத்தும் வெயிலில் 10 மணி நேர ஷூட்டிங், எருமையில் சவாரி செய்தது, எரியும் பாறையில் நின்றது என வேறு எந்த படத்திற்கும் இந்த மாதிரியான உழைப்பை கொடுத்ததில்லை எனவும், தற்போது அந்த கதாபாத்திரம் கொண்டாடப்படுவது நெகிழ்ச்சியைத் தருவதாகவும் கூறியுள்ளார்.
அரசியல் கட்சி தொடங்குவதும், கொடியை அறிமுகப்படுத்துவதும் ஒரு பெரிய விஷயம் கிடையாது என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். GST விவகாரம், நதிநீர் பங்கீடு, வக்ஃபு வாரிய சட்டம், நேரடி நியமன பதவி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் விஜய் தனது நிலைப்பாட்டை கூற வேண்டும் எனவும், தனியாக கட்சி நடத்தி பட்டால்தான் அவருக்கு புரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
▶ஆகஸ்ட் – 23 ▶ஆவணி – 07 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:45 AM – 10:30 AM ▶கெளரி நேரம்: 12:15 AM – 01:15 AM & 06:30 PM – 07:30PM ▶ராகு காலம்: 10:00 AM – 12:00 PM ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM ▶குளிகை: 07:30 AM – 9:00 AM >▶திதி: சதுர்த்தி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: பூரம். ▶நட்சத்திரம்: உத்திரட்டாதி
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்க ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தவெக கொடி மங்களகரமாக உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். குங்குமமும், மஞ்சளுமாக கொடி இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், விமர்சையாக கொடி ஏற்றினால் விமர்சனங்கள் வரும், அந்த வகையில் கொடி ஏற ஏற விமர்சனமும் ஏறிகொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், விமர்சனம் இல்லாமல் ஒரு கட்சி வளர முடியாது என்பதால் இது ஆரோக்யமான சூழல்தான் என தெரிவித்துள்ளார்.
*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டு எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *இந்த உலகை மாற்றுவதற்கான சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *அடிமைத்தனம், நிறவெறி போலவே, வறுமையும் மனிதனால் உருவாக்கப்பட்டதாகும். * எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதை விட சிறந்த பரிசு இருக்க முடியாது.
அடுத்த முறையும் மோடி பிரதமராக 49% மக்கள் விரும்புவதாக CVoter சர்வேயில் தெரியவந்துள்ளது.
543 MP தொகுதிகளில் 40,591 பேரிடம் சர்வே நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் எடுக்கப்பட்ட சர்வேவைவிட மோடிக்கு 6% ஆதரவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், ராகுல் காந்தியின் எழுச்சி 8% அதிகரித்துள்ளது. மேலும், இன்று தேர்தல் நடந்தால் NDA 299, INDIA 233 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்டை ஆஸி. மக்கள் அதிகம் விரும்புவதாக முன்னாள் ஆஸி. வீரர் ஹெய்டன் தெரிவித்துள்ளார் பண்ட் போன்றவர்கள் வெற்றி தாகத்தை கொண்டிருப்பதாகவும், அவர் ஆஸி.,யில் விளையாடி போது ஒரு முக்கிய வீரராக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் விளையாடிய விதம் புதுமையாக இருந்ததாக புகழ்ந்துள்ளார். IND vs AUS இடையே வரும் நவம்பரில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், ஹெய்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
▶அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் சர்வதேச நாள். ▶1948 – A.K. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் ஆவணத் திரைப்படம் தமிழ், தெலுங்கில் வெளியிடப்பட்டன. ▶1966 – ‘லூனார் ஆர்பிட்டர் 1’ விண்கலம் முதல் தடவையாக நிலவின் சுற்றுவட்டத்திருந்து பூமியைப் படம் பிடித்தது. ▶2023 – சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் முனைக்கு அருகில் பிரக்யான் ரோவர் மூலம் தரையிறங்கியது.
Cognizant இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் நம்பியார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். 250 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட IT ஊழியர்களின் தலைமை அமைப்பான Nasscom தலைவராக அவர் விரைவில் பொறுப்பேற்க இருக்க உள்ளதால் ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை ஆகிய துறைகளை மேம்படுத்துவதில் Nasscom முக்கிய பங்கு வகித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.