India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆன்லைன் மூலம் பட்டா பெற செல்போன் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலம் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், <
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக 2023 ஆக. 23இல் தரையிறக்கி வரலாறு படைத்தது. இந்நாள், தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என மோடி அறிவித்திருந்தார். அதன்படி, ஆக. 23 இன்று இந்தியா முதல் விண்வெளி தினத்தைக் காெண்டாடுகிறது. உலகத்தையே இந்தியா திரும்பி பார்க்க வைத்த இந்நாளை நாமும் கொண்டாடுவோம். இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. SHARE IT
நாய்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் இயங்குகிறது. பயப்படுபவர்களையே அவைகள் அதிகம் துரத்தும். எனவே பயத்தைக் காட்டவே கூடாது, ஓடாமல் நின்றாலே அருகில் வந்து குரைத்து விட்டு சென்றுவிடும். நாய்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கக்கூடாது. அது சண்டைக்கு அழைப்பது போல் ஆகிவிடும். கீழே கல்லோ அல்லது வேறு பொருள்களோ இருந்தாலும், இல்லாவிட்டாலும் குனிந்து எடுத்து எறிவது போல் பாவனை காட்டினால் ஓடிவிடும்.
பாலில் A1, A2 என ஒட்டப்படும் லேபில்களை நீக்கும்படி உணவுப் பொருள் விற்பனை நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற லேபில்கள், மக்களை தவறாக வழிநடத்த வாய்ப்புள்ளது என்றும், இது 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்திற்கு எதிரானது என்றும் FSSAI கூறியுள்ளது. புரோட்டீன் அதிகம் உள்ள பால் என வகைப்படுத்தி, அதில் A1, A2 ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் கல்லூரி மாணவர்கள் இடையே வினாடி-வினா போட்டிகள் நடத்த RBI திட்டமிட்டுள்ளது. வங்கியின் 90 ஆண்டுகால செயல்பாடுகளை நினைவுகூரும் வகையில், இளங்கலை பயின்று வரும் மாணவர்களுக்காக இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்காக ‘RBI90Quiz’ என்ற ஆன்லைன் தளத்தை RBI அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய & மாநில அளவிலான போட்டிகளில் வெல்பவர்களுக்கு ₹40 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதாகி உயிரிழந்த <<13920478>>சிவராமனின்<<>> தந்தையும் மரணமடைந்தார். நள்ளிரவு குடிபோதையில் வாகனத்தில் சென்ற அசோக்குமார்(61), கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, இருவரின் உடல்களையும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து தந்தை, மகன் இறப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட, அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் ₹9.74 லட்சம் கோடி அளவிற்கு தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்திருப்பதாக திமுக அரசு கூறுவதாக தெரிவித்துள்ள அவர், அதன் தற்போதைய நிலை என்ன? எனவும் வினவியுள்ளார். எவ்வளவு முதலீடு வந்துள்ளது? இன்னும் எவ்வளவு வர வேண்டியுள்ளது? என்பது குறித்து அறிக்கை வெளியிடவும் அன்புமணி கோரியுள்ளார்.
‘வாழை’ திரைப்படம் தனது சினிமா கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்துமென நடிகை நிகிலா விமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘வாழை’ படத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்த அவர், இயக்குநர் மாரி செல்வராஜ் நினைத்தது வரும் வரைக்கும் எத்தனை டேக் போனாலும், கவலைப்பட மாட்டார். அவர் கண்களுக்கு மட்டுமே தெரிந்த கதாபாத்திரத்தை நான் பிரதிபலித்தாக வேண்டும். அது எனக்கு கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது என கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை பாராட்டியது ஏன் என்பது குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். CAA சட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவற்றில் பாஜக கொள்கைகளை விஜய் விமர்சித்து வருகிறார். அப்படி இருக்கையில் அவரை குஷ்பு அண்மையில் தனது பேட்டியில் பாராட்டி இருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, விஜய் தனது தம்பி மாதிரி என்றும், அவரை புத்திசாலி என்று பாராட்டி இருந்தேன். அதில் தவறில்லை என்று கூறினார்.
பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தை அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் உற்றுநோக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு அண்மையில் சென்ற மோடி, நடுநிலையை நிரூபிக்க உக்ரைனுக்கு இன்று செல்கிறார். ஆரம்பம் முதல் ரஷ்யாவை இந்தியா ஆதரிப்பதாக குற்றம்சாட்டும் அமெரிக்காவும், இதேபோல், மோடி உக்ரைனிடம் என்ன முன்வைக்க போகிறார் என்று ரஷ்யாவும் உற்றுநோக்கி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.