India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போர் தொடங்கிய பின், உலகத் தலைவர்கள் உக்ரைனின் கீவ் வருவதற்கு மட்டுமே, ரயில் ஃபோர்ஸ் 1 பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், கனடா பிரதமர் டூருடோ, ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உள்ளிட்டோர் இந்த ரயிலில் பயணித்து, அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ளனர். தற்போது மோடி பயணித்துள்ளார். யுத்த களமான பின் பாதுகாப்பு காரணங்களுக்காக, தலைவர்கள் இந்த ரயிலில் உக்ரைன் செல்கின்றனர்.
ஆன்மிகத்தில் வெள்ளிக்கிழமை புனித நாளாக குறிப்பிடப்பட்டு, அன்று கோயிலுக்குச்சென்று வழிபடுவது நல்ல பலனைத் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றும் மக்கள், வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்கு செல்வது, விரதமிருப்பது என தொடர்கின்றனர். சிலர், சில நேரங்களில் மட்டுமே இதை கடைபிடிப்பர். இதில் நீங்கள் எந்த வகை? வெள்ளிக்கிழமை கண்டிப்பாக கோயிலுக்கு செல்வீர்களா? இல்லையா? கீழே பதிவு செய்யுங்கள்…
தென் – மத்திய ஆப்பிரிக்க நாடான பாட்ஸ்வானாவில் உலகின் 2ஆவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. கரோவியில் உள்ள சுரங்கத்தில் இருந்து அதிநவீன எக்ஸ்-ரே தொழில்நுட்ப உதவியுடன் ₹357 கோடி மதிப்பிலான 2,492 கேரட் வைரத்தை லுகாரா டயமண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் வெட்டி எடுத்துள்ளது. இதற்கு முன்னர் 1905இல் தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்பட்ட 3,106 கேரட் வைரம்தான் உலகின் மிகப் பெரிய வைரம் ஆகும்.
கிருஷ்ணகிரியில் வன்முறை வழக்கில் கைதான <<13920764>>சிவராமன்<<>>, அவரது தந்தையின் மரணம் குறித்து அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார். முக்கியப் புள்ளிகள் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுவதாக கூறினார். மேலும், இவ்விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு மோடி சென்ற RAIL FORCE 1 ரயில், 2014இல் கிரிமியாவுக்கு சுற்றுலா செல்ல உருவாக்கப்பட்டது. ரஷ்ய தாக்குதலுக்கு பிறகு, விமானப் போக்குவரத்து ரத்தானதால், பிற நாடுகளுடனான முக்கிய போக்குவரத்துக்கு மட்டும் பயன்படுகிறது. தாக்குதலில் பாதிக்கப்படாதவாறு புல்லட் புரூப் கட்டமைப்பு என பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. டீசலில் இயங்கக் கூடிய இந்த ரயிலில், VVIPகள் தங்குவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன.
சிலர் இயற்கையாகவே அதிக எடையுடன் இருப்பார்கள். என்ன உடற்பயிற்சி செய்தாலும் ஓரளவுக்குதான் எடை குறையும். இவர்களுக்கான அற்புத பானம்தான் இது. கருஞ்சீரகம், வெந்தயம் தலா 100 கிராம், ஓமம் 50 கிராம் எடுத்து வறுக்க வேண்டும். அதை பொடி செய்து, கால் டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கலந்து, இரவு உணவுக்கு பின் குடிக்க வேண்டும். உடல் மட்டுமல்லாமல் கல்லீரல் கொழுப்பையும் இது கரைக்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
தவெக கொடியில் விதிமீறல் இருப்பதாக விஜய் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் அளித்த புகாரில், கொடியில் சட்டத்துக்கு புறம்பாக, கேரள போக்குவரத்துக்கழக சின்னம், ஸ்பெயின் தேசிய கொடி நிறத்தை பயன்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். தேர்தல் சின்னத்தில் விலங்குகளை பயன்படுத்துவது விதிகளுக்கு புறம்பானது என உச்சநீதிமன்றம் கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் தூங்க முடியவில்லை எனக் கூறி, பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார். துளையிடுதல் உள்ளிட்ட பணிகளால் வரும் சத்தத்தால் தூங்க முடியவில்லை. ஆதலால் அதை நிறுத்த உத்தரவிடக்கோரி அந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்த தீர்ப்பாயம், சத்தம் எழுப்பக் கூடாத பகுதியில் வசிக்கும்பட்சத்தில் போலீஸில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியது.
Paralympics வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் பங்கேற்கவுள்ளார். பாரிஸில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக்ஸில் இத்தாலியைச் சேர்ந்த பார்வை குறைபாடுள்ள வீராங்கனை பெட்ரிலோ (50) 200 மீ ஓட்டப் பந்தயத்தில் களம் காண இருக்கிறார். ஆணாக பிறந்த அவர், 2019ஆம் ஆண்டு பாலின மாற்ற ஹார்மோன் தெரபி மூலம் பெண்ணாக மாறினார். 2023 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.