India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்கத்தைப் போலவே நவரத்தினங்களில் ஒன்றான வைரமும் ‘காரட்’ என்ற அளவுகோலில் அளவிடப்படுகிறது. 1 காரட் வைரம் (திராட்சை விதையின் கால் பங்கு) 200 மி.கி., அல்லது 0.2 கிராம் எடையைக் குறிக்கும். 1907இல் பாரிஸில் நடந்த எடை & அளவீடுகளின் மாநாட்டின்போது, இந்த கணக்கீடு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காரட் என்பது எடையைக் குறிப்பிட்டாலும், அதன் தரத்தை நிர்ணயிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
அம்பானி மறைவுக்குப் பிறகு, மூத்த மகன் முகேஷ், இளைய மகன் அனிலிடம் ரிலையன்ஸ் நிறுவனங்கள் பிரித்து கொடுக்கப்பட்டன. வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், <<13922522>>அனில் அம்பானியின்<<>> ரிலையன்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அனிலுக்கு 5 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது. தொடர்ந்து இதுபோல் அனில் பின்னடைவை சந்திக்கும் நிலையில், முகேஷ், ஜியோ ஆரம்பித்து வெற்றிநடை போடுகிறார்.
சீமானின் நாதக கட்சியை காங்கிரஸ் உதாசீனம் செய்யக்கூடாது என்று, கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சீமான் கட்சியை காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வ பெருந்தகை அண்மையில் விமர்சித்திருந்தார். இந்நிலையில், கார்த்தி அளித்த பேட்டியில், இளைஞர்கள் சீமான் கட்சி நோக்கி செல்வது உண்மை என்றும், இதற்கான காரணத்தை ஆராய வேண்டும் எனவும் தெரிவித்தார். இளைஞர்களை காங்கிரஸ் பக்கம் கொண்டு வர முயல வேண்டும் என்றார்.
உ.பியில் அரசு ஊழியர்களுக்கு, அம்மாநில அரசு கிடுக்குப்பிடி போட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை ஆக.31க்குள் அறிவிக்காவிட்டால், இம்மாத சம்பளம் வழங்கப்படாது என எச்சரித்துள்ளது. இதுவரை 26% ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை அறிவித்த நிலையில், 13 லட்சம் பேர் இன்னும் தாக்கல் செய்யவில்லை. அரசின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் அங்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரிபுரா சிட் ஃபண்ட் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்தபாடில்லை. 2017இல் DGPஆக சைலேந்திரபாபு இருந்தபோது, பதிவான இந்த வழக்கு, அவரே ரிட்டயர்டாகி சென்றுவிட்ட நிலையிலும், ஒரு முன்னேற்றத்தையும் அடையவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமும் போய் சேரவில்லை. இந்நிலையில், ஆருத்ரா, ஹிஜாவு போன்ற வழக்குகளின் கதி என்ன ஆகுமோ? என மக்கள் புலம்பித் தீர்க்கிறார்கள்.
இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் SEBI தடை விதித்துள்ளது. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ, நிர்வாக பொறுப்பிலோ அவர் இருக்கக்கூடாது என உத்தரவிட்டு, அவருக்கு ₹25 கோடி அபராதமும் விதித்துள்ளது. முதலீட்டாளர்கள் நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை, அந்நாட்டின் இடைக்கால அரசு ரத்து செய்துள்ளது. மனித உரிமை மீறல் நடந்ததா என விசாரிக்க, ஐ.நா குழு டாக்கா வந்துள்ள வேளையில், ஹசீனா பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர் போராட்டம் தீவிரமடையவே, வங்கதேசத்தை விட்டு வெளியேறி, அவர் இந்தியா வந்தார். அவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி, வங்கதேச அரசு வலியுறுத்தி வருகிறது.
தலைபாரம், சளி, சைனசிடிஸ் போன்ற பாதிப்புகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் தும்பைக்கு இருப்பதாக தேரன் பாடல் கூறுகிறது. லுகாஸ் அஸ்பெரா, சைடோஸ்டிரால், ஓலியோனோலிக் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் பூவின் சாறை (5 துளி அளவு) உலர்ந்த பேரீச்சம் பழத்துடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், நுரையீரல் பாதையில் சிறைப்பட்டிருக்கும் கோழையும் வெளியேறும்.
பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி தனியார் பள்ளிகளில் முகாம் நடத்தினால், உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் எந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எந்த முகாம் நடந்தாலும் தொடர்புடைய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். சிறுமிகளுக்கு எதிராக தவறு நடந்தால் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மத்திய உள்துறையின் புதிய செயலராக கோவிந்த் மோகன் இன்று பதவியேற்றார். மத்திய உள்துறை செயலராக இருந்த அஜய்குமார் பல்லா நேற்றுடன் ஓய்வுபெற்றார். இதையடுத்து அப்பதவியில் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட கோவிந்த் இன்று பதவியேற்றார். அவர், மத்திய அரசு துறைகளில் கலாசாரத்துறை செயலர் உள்ளிட்ட பல பதவி வகித்துள்ளார். கலாசாரத்துறை செயலராக இருந்தபோது, அம்ரித் மகோத்சவ், ஹர் ஹர் திரங்காவை அமல்படுத்தினார்.
Sorry, no posts matched your criteria.