India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Work from Home செய்பவர்களை காட்டிலும் அலுவலகத்திற்கு வருபவர்களிடமே அதிக திறன் இருப்பதாக META CEO மார்க் சக்கர்பெர்க் தெரிவிக்கிறார். அதனால், அந்நிறுவனத்தில் கடந்த 2023ல் வாரத்திற்கு 3 நாள்கள் அலுவலகம் வர வேண்டும் என விதி திருத்தப்பட்டது. Tesla CEO எலான் மஸ்க், பணி ஒழுக்கத்தின் படி அது தவறானது என்கிறார். இது டெக் தொழில் நிறுவனங்கள் எடுத்த தவறான முடிவு என்கிறார் OpenAI CEO சாம் அல்ட்மேன்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல் ▶குறள் எண்: 32 ▶குறள்: அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. ▶பொருள்: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
நடிகர் சாந்தனு ‘புளு ஸ்டார்’ படம் மூலம் முதல் வெற்றியை ருசித்துள்ளார். ஆனால் அவர் தவறவிட்ட படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. முதன்முதலாக அவர் தவறவிட்ட படம் ‘பாய்ஸ்’, அடுத்ததாக ‘காதல்’. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என கூறப்படும் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரத்திலும் நடிக்க மறுத்தார். பின்னர்
‘களவாணி, ‘டாணாகாரன்’ என தொடர்ந்து தற்போது ‘மகாராஜா’ வரை பட்டியல் நீள்கிறது.
காயம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்திய அணியில் விளையாட தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என நடராஜன் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதாகவும், விளையாட்டுத்துறை சிறப்பாகவும், வேகமாகவும் முன்னேறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், விளையாட்டுத்துறை மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் இளைஞர்களுக்கு இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடுநிலையாக இருப்பதாக காட்டிக் கொள்ளாமல், இந்தியா தங்கள் பக்கம் நிற்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற பெரிய மற்றும் உலகளவில் முக்கியமான நாடால் உக்ரைனில் அமைதி நிலவ செய்ய முடியும் எனவும், ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் மோடியை மதிக்காததால் தான், மோடி ரஷ்யாவில் இருந்தபோது உக்ரைனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
கோழிக்கோடு பல்கலை.யில் BA, MA பாடத்திட்டத்தில் தூய்மை பணியாளரான தனுஜா குமாரி எழுதிய புத்தகம் இடம்பெற்றுள்ளது. தனுஜா தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை ‘செங்கல் சூளையிலே என்ட ஜீவிதம்’ என்ற புத்தகமாக எழுதியுள்ளார். சுதந்திர தினத்தன்று கேரள ஆளுநர் அவரை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த வாழ்க்கை தனக்கு என்ன கொடுத்ததோ அதை புத்தகமாக எழுதியதாகவும், அது இலக்கியம் அல்ல, தன் வாழ்க்கை என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஆகஸ்ட் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை GVP பகிர்ந்துள்ளார். தனுஷ் இயக்கும் இப்படத்தில் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘ராயன்’ படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கும் இப்படத்திற்கு GVP இசையமைத்து வருகிறார். இந்நிலையில், அவர்களது செல்ஃபி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு பொருத்தமான கேப்ஷனை கமெண்டில் பதிவிடுங்கள்.
கடந்த 2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது அமித்ஷா குறித்து ராகுல் அவதூறாக பேசியதாக பாஜகவை சேர்ந்த விஜய் மிஸ்ரா உத்தர பிரதேசத்தில் உள்ள MP, MLAக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்று அமித் மிஸ்ராவின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் வழக்கு வேறு தேதிக்கு (செப்.5) ஒத்திவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.