news

News August 24, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சனிடம் விசாரணை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் அவரது குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் விசாரணை நடக்கிறது. ஏற்கெனவே, இவ்வழக்கு தொடர்பாக அவரது மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், அவர் தனது நண்பர் மட்டுமே, கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நெல்சன் விளக்கமளித்துள்ளார்.

News August 24, 2024

ஐபிஎல்லில் தவானின் சாதனை

image

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷிகர் தவான், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிகிறது. இதுவரை 222 ஐபிஎல் போட்டிகளில் (221 இன்னிங்ஸ்) விளையாடியுள்ள ஷிகர், 2 சதம், 51 அரைசதங்களுடன் 6,769 ரன்கள் குவித்துள்ளார். 768 – 4s, 152 -6s அடித்துள்ள அவர், 99 கேட்சுகளை பிடித்துள்ளார். ஐபிஎல்லில் அதிக ரன் எடுத்த வீரர்களின் பட்டியலில், அவர் 2ஆவது இடத்தில் உள்ளார்.

News August 24, 2024

பாஜகவை நெருங்கினால் திமுக கூட்டணியில் இருந்து விலகல்: VC

image

ஆளுநர் விருந்து, கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் திமுக, பாஜக நெருக்கம் காட்டியது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திமுக ஏன் பாஜக கூட்டணியை நாட வேண்டும், அப்படி நாடினால் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் விலகிவிடும் என்றார். திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் என்னவாகும் எனவும் வினவினார்.

News August 24, 2024

நாங்கள் நம்பிக்கைகளுக்கு தடையாக இருந்ததில்லை: CM

image

பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை CM ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாநாடு 2 நாள்களில் முடிந்தாலும், ஒருவாரத்திற்கு அரங்கம், கண்காட்சி திறந்திருக்கும் என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும், அவற்றுக்கு அரசு தடையாக இருந்ததில்லை என்று கூறிய அவர், பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை திமுக வழங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

News August 24, 2024

சர்வதேசப் போட்டிகளில் தவானின் பங்களிப்பு!

image

கிரிக்கெட் ரசிகர்களால் ‘கப்பர்’ என்று அழைக்கப்படும் ஷிகர் தவான் சர்வதேச & உள்நாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச அளவிலான 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ரன்கள் (7 சதம், 5 அரைசதம்), 167 ODI போட்டிகளில் 6,793 ரன்கள் (17 சதம், 39 அரைசதம்), 68 டி20 போட்டிகளில் 1,759 ரன்கள் (11 அரைசதம்) என மொத்தம் 10,867 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்துள்ளார்.

News August 24, 2024

விஜய்க்காக அண்ணன் நான் இருக்கிறேன்: சீமான்

image

என்னை குறித்து பேசி சோர்ந்து போனவர்கள் தற்போது தம்பி விஜய்யை விமர்சனம் செய்து வருவதாக சீமான் குற்றஞ்சாட்டினார். தனக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இல்லை என்று வேதனை தெரிவித்த அவர், விஜய்க்காக பேச தான் இருப்பதாக ஆதரவு குரல் கொடுத்தார். கூட்டணி குறித்த நிருபர்களின் கேள்விக்கு, தானே அனைத்தையும் கூற முடியாது, செப்.22க்கு பிறகு விஜய் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்றும் சஸ்பென்ஸ் வைத்தார்.

News August 24, 2024

கணவருடன் விவாகரத்தா? பாவனா பதில்

image

கணவர் நவீனை விவாகரத்து செய்ததாக வெளியான தகவலை பாவனா மறுத்துள்ளார். சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாவனா, நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருடன் இருக்கும் படங்களை சமூகவலைதளத்தில் பகிராததை சுட்டிக்காட்டி விவாகரத்து பெற்றதாக தகவல் பரவி வருகிறது. இதை மறுத்துள்ள பாவனா, கணவருடன் இருக்கும் படத்தை வெளியிடாததால் விவாகரத்து ஆகி விடாது எனக் கூறியுள்ளார்.

News August 24, 2024

IPL: ரோஹித் ஷர்மாவுக்கு ₹50 கோடி?

image

MI அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மாவை ஏலத்தில் எடுக்க, DC & LSG ஆகிய இரு அணிகள் போட்டிப் போட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. MI அணியைவிட்டு அவர் வெளியேறினால், ₹50 கோடி கொடுத்தாவது ஏலத்தில் எடுக்க இரு அணிகளின் உரிமையாளர்களும் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை IPL கோப்பையை வெல்லவில்லை. ரோஹித்தை அணிக்கு கொண்டுவந்தால் வெற்றிவாகை சூடலாம் என அவர்கள் எண்ணுகின்றனர்.

News August 24, 2024

அரியர் தேர்வெழுத ஓர் அறிய வாய்ப்பு நண்பர்களே!

image

அரியர் வைத்த அண்ணா பல்கலை. மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. படிப்பு முடிந்த 3 ஆண்டுகளில் அரியர் முடிக்காதவர்களின் டிகிரி ரத்தாகும் நிலை உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி, 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்களும் தற்போது தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஆக.30-செப்.18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரியர் முடிக்காத உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 24, 2024

செயலி மூலம் மின்சார கணக்கெடுப்பு விரைவில் அமல்

image

செல்போன் செயலி மூலம் மின்பயன்பாடு கணக்கெடுக்கும் பணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது. தற்போது எச்.எச்.சி. எனும் கையடக்க கணினி வாயிலாக கணக்கெடுக்கப்படுகிறது. இதற்குப் பதில் புதிய செயலியை EB உருவாக்கியுள்ளது. இதை தற்போது சோதித்து வருகிறது. விரைவில் இதனை EB அமல்படுத்தவுள்ளது. மின்கணக்கீட்டில் முறைகேட்டை தடுக்கவும், கட்டணத்தை உடனே தெரிவிக்கவும் இது உதவும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!