India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்கங்களே பயப்படும் ஒரே மிருகம் கழுதைப் புலி தான். ஒரே கடியில் எலும்பை நொறுக்கும் தாடை வலிமை அதற்கு உண்டு. 4 கழுதைப் புலிகள், ஒரு சிங்கத்தையே கொன்றுவிடும். இவ்வளவு கொடூரமானவையாக இருந்தாலும் அவை மிகவும் கண்ணியமானவை. விலங்குகளிலேயே ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வது கழுதைப்புலிகள் தான். அதேபோல, தனது குடும்பத்தில் உள்ள பெண் கழுதைப் புலிகளிடம் ஆண் கழுதைப் புலிகள் இணை சேராது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற முஷ்பிகுர் ரஹீம், பரிசு தொகையை வங்தேச மக்களுக்கு வழங்கவுள்ளார். பாக்., எதிராக முதல் டெஸ்டில் 191 ரன்கள் குவித்து வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்ட அவர், ஆட்ட நாயகனுக்காக கொடுக்கப்பட்ட தொகையை வங்கதேசத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளதாக கூறினார். இவரின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த கோரிக்கையை ஏற்காவிடில் ஸ்டிரைக் நடைபெறும் என அண்ணா தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. வரும் 27ஆம் தேதி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு எச்சரித்துள்ளது. 5% ஊதிய உயர்வை இம்முறை ஏற்க மாட்டோம். 15-வது ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் மூலம் பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளது.
’தக் லைஃப்’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த போட்டோவை சிம்பு தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். கொண்டை போட்ட முடியுடன் திரும்பி அமர்ந்திருக்கும் இந்த Black & White புகைப்படம் வைரலாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சிம்பு, கமல் காம்பினேஷன் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிம்பு லுக் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க.
வங்கதேசத்திற்கு எதிரான தோல்விக்கு மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாததே காரணம் என பாக்., கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். பாக்., பந்துவீச்சாளர்களுக்கு எதிராக, வங்கதேச வீரர்கள் சிறப்பாக விளையாடியதாகவும், சில கணிப்புகள் தவறாக போனதுமே தோல்விக்கு முக்கிய காரணம் என விளக்கமளித்தார். முன்னதாக, பாக்., எதிரான முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் முறையாக வங்கதேசம் வெற்றிபெற்றது.
வரும் வாரத்தில் 14 நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு Dividend வழங்கவுள்ளன. அதன்படி, நாளை மணப்புரம் (₹1/ Share), துருவ் கன்சல்டன்சி சர்வீசஸ் (₹0.25/ Share), ஆக.27 விண்ட்சர் மெஷின்கள் (₹0.5/ Share), மனோரமா இண்டஸ்ட்ரீஸ் (₹0.4/ Share), கேடிடிஎல் (₹4/ Share), ஆக.28 ஃபோர்ஸ் மோட்டார்ஸ் (₹20/ Share), இந்துஸ்தான் ஜிங்க் (₹0.1/ Share) வழங்கவுள்ளது. உங்களிடம் இருக்கும் பங்கு என்ன கமெண்ட் பண்ணுங்க.
இன்ஸ்டாவில் அதிக Followers பெற்றுள்ள இந்தியர்கள் பட்டியலில், நடிகை பிரியங்கா சோப்ராவை பின்னுக்கு தள்ளி நடிகை ஷ்ரத்தா கபூர் 2ஆவது இடம் பிடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா 9.18 கோடி Followers பெற்றுள்ள நிலையில், ஷ்ரத்தா 9.21 கோடி Followers பெற்றுள்ளார். 27 கோடி Followers உடன் அசைக்க முடியாத இடத்தில் கோலி முதலிடத்தில் தொடர்கிறார். 4ஆவது இடத்தில் இருக்கும் பிரபலம் யாரென்று தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க.
உடற்பயிற்சி, ஜாகிங், ரன்னிங்கை விட Cycling உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வு என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். Cycling செய்யும் போது, இதய துடிப்பு சீராவதால், ஹாட் ஹட்டாக் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள். டைப் 1, டைப் 2 சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்தை சீராக்கும் எனவும், மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி தரும் என்றும் கூறுகின்றனர். சைக்கிள் ஓட்டிய அனுபவங்களை கமெண்டில் பதிவிடுங்கள்.
UPS திட்டத்தில் இருக்கும் ‘U’மத்திய அரசு, இதுவரை அடித்த ‘யு டர்ன்’களை குறிப்பிடுவதாக கார்கே கிண்டலடித்துள்ளார். வக்ஃபு மசோதா, லேட்டரல் என்ட்ரி, ஒளிபரப்பு மசோதா என மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின் வாங்குவதாக விமர்சித்த அவர், 140 கோடி இந்தியர்களை மோடி அரசிடம் இருந்து நிச்சயம் பாதுகாப்போம் என உறுதியளித்தார். ஜூன் 4 மக்களின் முடிவு, மோடி அரசின் அதிகார திமிரை வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோடீஸ்வரர்கள் மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும் என சிலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால், பங்குச்சந்தை அனைவருக்குமானது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் ₹1 கூட பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும். பங்குச்சந்தை மூலம் பணக்காரன் ஆக ஆர்வமும், நீண்ட கால முதலீடும் போதுமானது என நிபுணர்கள் சொல்கிறார்கள். யாருக்கெல்லாம் பங்குச்சந்தை கற்க ஆசை கமெண்ட் பண்ணுங்க. <<-se>>#sharemarket<<>>
Sorry, no posts matched your criteria.