India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அநுர குமார திசநாயகே, 1968ல் தம்புதேகம கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. படிக்கும்போதே JVP எனும் இடதுசாரி கட்சியில் இணைந்தார். 1987 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2004 கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தார். பொருளாதார நெருக்கடி காலத்தில், அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்தார். உழைக்கும் மக்களுக்கான அரசியலை பேசியதால் மக்கள் ஆதரவு அவருக்கு கிடைத்தது.
இந்திய சுவிசேஷ திருச்சபை (ECI) பேராயர் எஸ்.ரா.சற்குணம் (86) உடல்நலக் குறைவால் காலமானார். கருணாநிதி, திருமா, வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படும் இவர், பேராயராக மட்டும் இல்லாமல் அரசியல் ஞானமிக்கவராகவும் திகழ்ந்தார். பல நேரங்களில் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான தூதுவராகவும் செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு CM ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து கூறினார்.
அநுர குமார திசநாயகே, 1968ல் தம்புதேகம கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. படிக்கும்போதே JVP எனும் இடதுசாரி கட்சியில் இணைந்தார். 1987 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2004 கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தார். பொருளாதார நெருக்கடி காலத்தில், அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்தார். உழைக்கும் மக்களுக்கான அரசியலை பேசியதால் மக்கள் ஆதரவு அவருக்கு கிடைத்தது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில், CSK அணி யாரை எல்லாம் தக்க வைக்கும், தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில், தோனியை CSK அணி தக்கவைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் சேர்த்து ஜடேஜா, கெய்க்வாட், துபே, பத்திரனா ஆகியோரையும் CSK தக்கவைக்கும் என கூறப்படுகிறது. CSKவில் யாரெல்லாம் விளையாடலாம் என நினைக்கிறீர்கள்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சீசிங் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் கைது செய்யப்படும் 29 வது நபர் ஆவார். அண்மையில் சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆந்திர EX அமைச்சர் ரோஜா ஆந்திர CM சந்திரபாபுவை விமர்சித்துள்ளார். லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டது உண்மை என்றால், அறங்காவலர் குழுவில் இருந்த பாஜகவினர் அன்றே ஏன் பிரதமர் மோடியிடம் முறையிடவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயத்தில் ஆந்திர CM அரசியலுக்காக நாடகம் ஆடுவதாகவும் கூறியுள்ளார்.
<<14168164>>செஸ் ஒலிம்பியாட்<<>> மகளிர் பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்றது. ஹங்கேரியில் நடைபெறும் 45வது செஸ் ஒலிம்பியாட்டில், அஜர்பைஜான் அணிக்கு எதிரான இறுதிச்சுற்று ஆட்டத்தில், திவ்யா, வந்திகா, ஹரிகா, வைஷாலி, தானியா, அபிஜித் (கேப்டன்) ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்றது. ஆடவர் அணியை தொடர்ந்து, இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே வெற்றி பெற்றார். இதையடுத்து, 9வது அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். எந்த வேட்பாளருக்கும் 50% வாக்குகள் கிடைக்காத நிலையில், 2வது விருப்பு வாக்கு எண்ணிக்கை நடந்தது. தொடர்ந்து, கடும் இழுபறிக்கு பின்னர், அநுர குமார திசநாயகே வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
துலீப் கோப்பை தொடரில் முதலிடம் பிடித்த மயங்க் அகர்வால் தலைமையிலான ‘INDIA A’ டீம் கோப்பையை வென்றுள்ளது. INDIA – A, B, C, D என நான்கு அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அனைத்து அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடியது. இதில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் A டீம் முதலிடத்தையும், 1 வெற்றி, 1 தோல்வி, 1 போட்டி டிராவுடன் ருதுராஜ் தலைமையிலான ‘INDIA C’ டீம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.
‘96’ படத்தின் 2ஆம் பாகத்திற்கான கதையை 90% முடித்துவிட்டதாக இயக்குநர் பிரேம்குமார் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். மேலும், இந்த கதையை விஜய்சேதுபதியின் மனைவியிடம் சொல்லிவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், 2ஆம் பாகம் காதலை மையப்படுத்திய படமாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரேம்குமார், இது ஃபேமிலி சென்டிமெண்டை பேசும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.