India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட உகந்த நேரம் எது என புராணத்தில் கூறப்பட்டிருப்பதை இங்கு பார்க்கலாம். கிருஷ்ணர் இரவு நேரத்தில் பிறந்தார் என்பதால், பகலில் கொண்டாடுவதை விட இரவு 8-9 மணிக்குள் காெண்டாடுவதே சிறப்பு என்று புராணம் கூறுகிறது. பகலில் விரதமிருந்து மாக்கோலம் இட்டு, கிருஷ்ணரின் கால் பாதத்தை வாசலில் இருந்து பூஜை அறை வரை வரைந்து வழிபடுவது சிறப்பு என புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 67 NH சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு வெறும் ₹340-க்கு மாதாந்திர பாஸ் வழங்கப்படும் விஷயம் பலருக்கு தெரிந்திருக்காது. சுங்கச்சாவடி அமைக்க இடமளித்த 20 Km சுற்றளவில் உள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இச்சலுகை அளிக்கப்படுகிறது. உதாரணமாக பரனூர் சுங்கச்சாவடியில், அதே பகுதியைச் சேர்ந்த பதிவெண் கொண்ட Non-Commercial வாகனங்கள் உள்ளூர் வாகனங்களாக கருதப்படும்.
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது. தற்போது இந்த வரம்பு ₹2.5 லட்சமாக உள்ளது. இதனால் பல பெண்களுக்கு உரிமைத் தொகை ₹1,000 கிடைக்காத நிலை உள்ளது. இதை விரிவுபடுத்த பெண்களிடம் இருந்து கோரிக்கை வலுத்துவந்த நிலையில், நிபந்தனைகளை தளர்த்தி செப்.15ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி (S.B) ஜாமினில் வந்ததும் அமைச்சரவை மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. CM ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன்பு அமைச்சரவை மாற்றப்படலாம் என செய்தி வெளியானபடி இருந்தது. ஆனால் பணமோசடி வழக்கில் கைதான S.B. ஜாமின் கிடைத்து வெளிவந்தபிறகு அமைச்சரவையை மாற்றலாம், அதுவரை முடிவை தள்ளிவைக்கலாம் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களே, உங்கள் பகுதி கிருஷ்ண ஜெயந்தி செய்திகளை Way2News-ல் பார்க்க ஆர்வமாக உள்ளீர்களா? உடனே Way2News செயலியில் கீழே உள்ள Post என்ற பட்டனை அழுத்தி உங்கள் மொபைல் எண்ணுடன் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். பின், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட உங்கள் பகுதி நிகழ்வுகளை படங்களுடன், 40 வார்த்தைகளில் டைப் செய்து பதியவும். இதன் மூலம் நீங்கள் ரிப்போர்ட்டர் அங்கீகாரம் பெறுவதுடன், வருவாயும் ஈட்டலாம்.
அதிகாரத்திற்கு எதிரான தனது போராட்டம் முடிவடையவில்லை, அது இப்போதுதான் தொடங்கியுள்ளதென மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்தார். ஹரியானா சர்வ்காப் பஞ்சாயத்து நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் பேசிய அவர், நாடு திரும்பிய பின் மக்கள் காட்டிய அன்பால் திக்குமுக்காடிப் போனதாகக் கூறினார். அத்துடன், தன் மகள்களின் கௌரவத்திற்கான தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் உறுதிபடக் கூறினார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே விடுதலை சிறுத்தை (விசிக) நிலைப்பாடு என்று அக்கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்குள் இக்கோரிக்கை எழுந்திருப்பது குறித்த கேள்விக்கு, அது விசிக நீண்டகாலமாக முன்வைக்கும் கோரிக்கை. அதுதான் உண்மையான சமத்துவம் என்று அவர் பதிலளித்தார். மாநில காங்கிரஸ் தலைவர்களும், இக்கோரிக்கையை வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம் என பல்வேறு மன்றங்கள் செயல்படுகிறது. இதில், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை, 2025 ஏப்ரல் வரை வாரந்தோறும் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரில் காங்கிரஸ் – JKNC கூட்டணிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக PDP தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி அறிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதே தனக்கு மிக முக்கியம் என்றும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்த பாஜகவுக்கு பாடம் புகட்டவும், மண்ணின் மக்களின் கண்ணியத்தை காக்கவும் PDPஇன் திட்டங்களை ஏற்றால், அவர்களுடன் இணைந்து நிற்க தயார் எனத் தெரிவித்துள்ளார்.
‘வாடிவாசல்’ படம் வருமா, வராத என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தயாரிப்பாளர் தாணு கருத்து தெரிவித்துள்ளார். விடுதலை 2-ஐ முடித்துவிட்டு வெற்றிமாறனும், S44 படத்தை முடித்துவிட்டு சூர்யாவும் வாடிவாசல் படத்தில் பணியாற்றவுள்ளதாக தெளிவுபடுத்திய அவர், ‘ஜூராஸிக் பார்க்’ படத்திற்கு CGI வொர்க் செய்த ILM நிறுவனம், வாடிவாசலுக்கான முன்னோட்ட அனிமேஷன் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.