India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த சில நாட்களாக காற்றுடன் கனமழை பெய்து வருவதால்,<<13945968>> சத்ரபதி சிவாஜி<<>> சிலை உடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், வெண்கலத்தால் ஆன சிவாஜி சிலை அமைக்கப்பட்டதில், ஷிண்டே – பாஜக கூட்டணி அரசு ஊழல் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாளே அவகாசம் உள்ளன. பல்வேறு வங்கிகளில் PROBATIONARY OFFICERS, MANAGEMENT TRAINEES, SPECIALIST OFFICERS பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அறிவிப்பு கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிய 2 நாள்களே உள்ளதால், https://www.ibps.in/ இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். SHARE IT
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.27) கடைசி நாளாகும். நீட் அடிப்படையில்தான் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பப்பதிவு மற்றும் தகவல் தொகுப்பேட்டினை <
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மொத்தம் 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, தற்போது ஷாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகியோர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.
நீங்கள் அனுப்பிய கிருஷ்ண ஜெயந்தி போட்டோக்கள் எங்களிடம் நிரம்பி வழிகின்றன. way2news மீது அளவற்ற அன்பை காட்டியதற்கு நன்றி. ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எங்களுக்கு வந்துள்ள நிலையில், அளவு கட்டுப்பாடுகள் காரணமாக சில புகைப்படங்களை மட்டுமே வெளியிடுகிறோம். உங்களது புகைப்படங்களை வெளியிட முடியாமல் போனதற்காக வருந்துகிறோம். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் way2news சார்பாக கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் அனுப்பிய கிருஷ்ண ஜெயந்தி போட்டோக்கள் எங்களிடம் நிரம்பி வழிகின்றன. way2news மீது அளவற்ற அன்பை காட்டியதற்கு நன்றி. ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எங்களுக்கு வந்துள்ள நிலையில், அளவு கட்டுப்பாடுகள் காரணமாக சில புகைப்படங்களை மட்டுமே வெளியிடுகிறோம். உங்களது புகைப்படங்களை வெளியிட முடியாமல் போனதற்காக வருந்துகிறோம். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் way2news சார்பாக கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.
கொள்கை ரீதியான கருத்துகளை தெரிவிக்க கங்கனா ரனாவத்துக்கு பாஜக தடை விதித்துள்ளது. சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இந்நிலையில், இது அவரது தனிப்பட்ட கருத்து எனக் குறிப்பிட்டுள்ள பாஜக தலைமை, எதிர்காலத்தில் இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமான மற்றும் மதம் சார்ந்த கருத்துகளை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியர்களின் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முந்தைய தலைமுறை லெட்டருக்கும், மணி ஆர்டருக்கும் காத்திருந்தார்கள். இன்றோ நொடியில் தகவல்களையும், பணத்தையும் பகிர்கிறோம். நேற்றைய நிகழ்வு இன்றைய செய்தி என்ற காலம் மாறி, Liveஇல் செய்திகளை அறிகிறோம். இப்படி எத்தனையோ மாற்றங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் நினைத்து பிரம்மிக்கும் மாற்றம் என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 511 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளுடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எச்.சி.எல், டெக் பங்குகள் 3%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 2.8%, டெக் மகிந்திரா பங்கு 2.5%, JSW ஸ்டீல் பங்கு 2%, டைட்டன் பங்கு 1.7%, எம்&எம், எல்&டி பங்குகள் தலா 1% உயர்ந்துள்ளன.
இனிப்பு, துவர்ப்பு, மென் கசப்பு ஆகிய மூன்று சுவைகளின் சேர்க்கை கொண்ட தொட்டாற்சிணுங்கிக்கு ரத்தத்தைத் தூய்மை செய்யும் ஆற்றல் இருப்பதாக குணவாகடப் பாடல் கூறுகிறது. அவிகுலாரின், மைமோசைன், பீனாலிக், அபிஜெனின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இந்த இலைச் சாற்றை, பனைவெல்லம் சேர்த்து காலை – மாலை உரிய முறையில் கஷாயமாக குடித்து வந்தால், உடல் வலி, மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் நீங்கும்.
Sorry, no posts matched your criteria.