India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பலரும் தங்கள் வீட்டு குழந்தைகள் ‘கிருஷ்ணர்’ வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். பிரபலங்களும் தங்கள் வீட்டு குட்டி கிருஷ்ணாவின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சிறு வயதில் கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் விஜய் எப்படி உள்ளார் என கமெண்ட் பண்ணுங்கள்
திமுகவுடனான கள்ள கூட்டணியை அம்பலப்படுத்திய இபிஎஸ் மீது அண்ணாமலை நெருப்பை கக்கியிருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இபிஎஸ் மீது திமுக கக்கிய விஷத்தை அவரது புதிய கொள்கைக் கூட்டாளி அண்ணாமலை மீண்டும் கக்கியுள்ளார். கபட வேடதாரியின் பொய்க்கால் ஆட்டத்திற்கு 2026 தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள் என்ற அவர், மாமனிதர் இபிஎஸ்-க்கு அருகில் அமர்ந்திருப்பது பாஜகவுக்கு பெருமை என்றார்.
தினமும் ஒரு மணி நேரம் ஜாகிங் செய்வதால் உடலுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்குமென மருத்துவர்கள் கூறுகின்றனர். *கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, பிட்டான தோற்றம் கிடைக்கும். *நுரையீரல், மூச்சுக்குழாய் மற்றும் மூச்சு அறைகளைப் பலப்படும். *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். *கால், தொடை, இடுப்பு பகுதி வலுவாகும். *ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். *தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இந்தியாவில் Telegramக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட புகாரில் டெலிகிராம் CEO பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவில் இந்த செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுள்ளதா? என மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. ஒரு வேளை குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால், அச்செயலிக்கு தடை விதிக்கப்படலாம். Telegram யூஸ் பண்றீங்களா?
பிரபல மலையாள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ், நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது நடிகை மினு முனீர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஜெயசூர்யா கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டார். அட்ஜஸ்ட் செய்து கொண்டால் எதிர்காலத்தில் லாபம் கிடைக்கும் என்று சொன்னார் எனக் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், ஐந்து நடிகர்கள் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக பெயர்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய செயலாளராக இருக்கும் ஜெய்ஷா, அடுத்த மாதம் ICC தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த பதவிக்கு, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் ரோஹன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியான ‘வாழை’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பலதரப்பினரிடமும் பாராட்டை பெற்றுள்ள இப்படம் செப்டம்பர் இறுதியில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் இப்படத்தை பார்த்துவிட்டீர்களா?
FIR பதிவை உங்களது தார்மீக உரிமையாக கருதுங்கள். ஏதேனும் ஒரு குற்றம் நடந்தால், FIR பதிவு செய்ய காவல்துறை மறுக்க முடியாது. எனினும் FIR பதிவு செய்யாமல் உங்களை அலைக்கழித்தால், அருகில் உள்ள SP அல்லது நீதித்துறை மாஜிஸ்திரேட்டிடம் நீங்கள் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கலாம். FIR பதிவு செய்யாத காவலருக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
கடந்த சில நாட்களாக காற்றுடன் கனமழை பெய்து வருவதால்,<<13945968>> சத்ரபதி சிவாஜி<<>> சிலை உடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், வெண்கலத்தால் ஆன சிவாஜி சிலை அமைக்கப்பட்டதில், ஷிண்டே – பாஜக கூட்டணி அரசு ஊழல் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாளே அவகாசம் உள்ளன. பல்வேறு வங்கிகளில் PROBATIONARY OFFICERS, MANAGEMENT TRAINEES, SPECIALIST OFFICERS பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அறிவிப்பு கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிய 2 நாள்களே உள்ளதால், https://www.ibps.in/ இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். SHARE IT
Sorry, no posts matched your criteria.