news

News September 23, 2024

‘ஆபாசப் படம்’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

image

சிறார் அடங்கிய ஆபாச படங்களைப் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. CJI சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மின்னணு சாதனங்களில் தனிப்பட்ட முறையில் சிறார் ஆபாசப் படங்களை சேமித்து வைப்பதும் பார்ப்பதும் சட்டப்படி குற்றம் எனவும், இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யவும் பரிந்துரைத்துள்ளது.

News September 23, 2024

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா

image

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே (75) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய அதிபர் தனது அமைச்சரவை உருவாக்குவதற்கு வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் அனுர குமார திசநாயகேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022 ஜூலை முதல் தினேஷ் குணவர்த்தனே இலங்கை பிரதமராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

News September 23, 2024

சைகை மொழி பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

*செய்+கை = செய்கை. அந்த அசைவு மொழியே சைகை மொழியாக மாறியது. *சைகை மொழி என்பது வெறும் கைகளால் மட்டுமல்ல; முகம் & வடிவ பாவனை, உடல் அசைவு மூலமாகவும் சைகை மொழி பேசப்படுகிறது. *இம்மொழிக்கும் இலக்கணம் உண்டு. *சரியான செய்கையும், இமை & உடல் அசைவுமே கேள்விக்கும் பதிலுக்குமான வேற்றுமையை புரிய வைக்கும். *உலகில் 7 கோடி மாற்றுத்திறனாளிகள் (காது கேளா & வாய் பேசா) இம்மொழியை பேசுகின்றனர்.

News September 23, 2024

டெட்டனேட்டர் வைத்து ராணுவ ரயிலை கவிழ்க்க சதி?

image

மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர் மூலம் ராணுவ ரயிலை கவிழ்க்க சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடக்கிறது. ரத்லாம் என்ற இடத்தில் 18ம் தேதி ராணுவத்தினருக்கான சிறப்பு ரயில் செல்லும் தண்டவாளத்தில் 10 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தவறுதலாக நடந்ததாக ரயில்வே கூறிய நிலையில், கேங்மேன், சிக்னல்மேன், டிராக்மேனை சந்தேகத்தின்பேரில் பிடித்து ராணுவம் விசாரிக்கிறது.

News September 23, 2024

சற்றுமுன்: இலங்கை அதிபராக திசநாயக பதவியேற்றார்

image

இலங்கை அதிபராக அனுரகுமார திசநாயக பதவியேற்றார். நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில் அவர் பெரும்பான்மை பெற்றதையடுத்து இலங்கையின் 9ஆவது அதிபராக இன்று பதவியேற்றார். அவருக்கு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இவர், கல்லூரி நாள்களிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டார்.

News September 23, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகில் திரையரங்குகளே இல்லாத ஒரே நாடு எது? 2) ஒரு ஒளியாண்டு என்பது எத்தனை கி.மீ ? 3) தொல்லியல் துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 4) HTTP என்பதன் விரிவாக்கம் என்ன? 5) புதைப்படிவப் பறவை என்று கருதப்படும் உயிரினம் எது? 6) அரிகேசரி என அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்? 7) பச்சையம் இல்லாத தாவரம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News September 23, 2024

4 முறை பயணத்தில் கிடைத்த முதலீடு எவ்வளவு? இபிஎஸ்

image

வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். 4 முறை வெளிநாடு பயணம் செய்தும் தமிழகத்திற்கு குறைவான முதலீடு வந்துள்ளதாகவும், ஆனால் அரசு அதுபற்றிய முறையான தகவலை பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 17 நாள் அமெரிக்க பயணத்தில் ரூ.7,618 கோடி முதலீடு மட்டுமே முதல்வரால் திரட்ட முடிந்ததாகவும் விமர்சித்துள்ளார்.

News September 23, 2024

தென்னிந்தியா மர்லின் மன்றோவின் நினைவு தினம்!

image

தென்னிந்தியாவை தனது கண்களால் கட்டிப்போட்ட சில்க் ஸ்மிதாவின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஒப்பனையாளராக திரைத்துறை பயணத்தை தொடங்கிய இவர், தனது அழகால் நடிகையாக உயர்ந்து, 17 ஆண்டுகள் திரைவானில் உச்ச நட்சத்திரமாக ஒளிர்ந்தார். கவர்ச்சியில் மட்டுமல்ல குணசித்திர வேடங்களிலும் முத்திரைப் பதித்துள்ளார். நக்சல்பாரி ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திய இந்த தேவதையின் புகழை இன்றும் யாராலும் தொடமுடியவில்லை.

News September 23, 2024

தங்கம் விலை புதிய உச்சம்

image

ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம் விலை இன்று ₹20 உயர்ந்து ₹6,980ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் ₹160 அதிகரித்து ₹55,840ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் விலையில் புதிய உச்சம் ஆகும். அதேநேரத்தில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ₹98ஆகவும், 1 கிலோ வெள்ளி ₹98,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

News September 23, 2024

சற்றுமுன்: ரவுடி சி.டி. மணி சிறையில் அடைப்பு

image

போலீசால் நேற்று கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சி.டி. மணி சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு, சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிரபல ரவுடிகள் அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கைதான சி.டி. மணியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பாேலீசார் இன்று சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!