India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக டிட்டோஜாக் (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு) அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு உறுதியளித்ததால், செப்.30இல் திட்டமிட்டிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது. தங்களின் கோரிக்கை விரைவில்
நிறைவேற்றப்படும் எனவும் டிட்டோஜாக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
6 தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்திருப்பதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கூட்டமைப்பு நிர்வாகிகள், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 28 படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தனர். தமிழில் தங்கலான், கொட்டுக்காளி, வாழை, மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜமாவை பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவதை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக்காேரி, மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய கடிதத்தில், தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கையில் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், மீனவர்களுக்கு சட்ட உதவி கிடைக்க உதவ வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அக்.7 தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன்
இருப்பதாக செய்திகள் வெளியாகின. காசாவில் அவர் பதுங்கி இருந்ததாகக் கூறப்பட்ட இடத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. அந்த தாக்குதலில் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் வட்டாரங்கள் கூறியதாக Newyork Post செய்தி வெளியிட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் ₹999 கட்டணத்தில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 98 நாள்கள் ஆகும். இதில் அன்லிமிடெட் 5G டேட்டாவை ஜியோ வழங்குகிறது. இதுதவிர்த்து 5G கவரேஜ் இல்லாத பகுதி எனில் தினமும் 2ஜிபி 4G டேட்டா அளிக்கிறது. அத்துடன் அன்லிமிடெட் அழைப்பு வசதி, தினமும் 100 SMS, நாடு முழுவதும் இலவச ரோமிங் உள்ளிட்டவற்றையும் ஜியோ வழங்குகிறது.
அமெரிக்க ராணுவம் & இந்திய பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டுக்கான செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை கொல்கத்தாவில் அமைக்கப்படவுள்ளது. இது தொடா்பான ஒப்பந்தம், மோடி & ஜோ பைடன் முன்னிலையில் கையொப்பமானது. 2025இல் ‘சக்தி’ என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு துறைக்கான இந்த ஆலையில் Next Gen தொலைத்தொடர்பு, பசுமை எரிசக்திக்கான செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கிண்டி ரேஸ் மைதானத்தை பசுமை பூங்காவாக மாற்றும் தமிழக அரசின் முடிவை அன்புமணி வரவேற்றுள்ளார். கிண்டியில்118 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படுவது சென்னையின் ஒட்டுமொத்த பரப்பளவுக்கு போதுமானது இல்லை என்றும், பயன்பாட்டில் இல்லாத கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தையும் பூங்காவாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது. வேளச்சேரியில் துப்பாக்கியை காட்டி பணம் பறித்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் மீது கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. 10 வழக்குகளில் வாரண்ட் இருந்தும் நேரில் ஆஜராகாமல் சீசிங் ராஜா தலைமறைவாக இருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.
சீசிங் ராஜா போலீசாரை நோக்கி சுட்டதால், தற்காப்புக்காக அவரை போலீசார் சுட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த இணை ஆணையர் சி.பி சக்கரவர்த்தி, ஆந்திராவில் சீசிங் ராஜா கைது செய்யப்பட்டு போலீசார் கஸ்டடியில் இருந்ததாகவும், ஆனால் போலீசிடம் இருந்து தப்பித்துச் செல்லும் நோக்கில் கள்ளத்துப்பாக்கியை எடுத்து போலீசாரை சீசிங் ராஜா சுட்டதாகவும் குறிப்பிட்டார்.
விசிகவின் மதுஒழிப்பு மாநாடு நாடகம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் பேட்டியளித்த அவர், மது ஒழிப்பு மாநாடு நாடகத்தை முதல்வர் ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும் இணைந்து அரங்கேற்றியுள்ளதாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்றும், தொடர் கொலைகள் நிகழ்ந்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.