India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘சர்வ சிக்ஷா அபியான்’ திட்ட நிதியை வழங்க மறுக்கும் பாஜகவை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இந்த திட்டத்தில் ₹573 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டும், புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்ற காரணத்திற்காக, நிதி நிறுத்தி வைக்கப்பட்டதை ஏற்க முடியாது எனவும் விமர்சித்துள்ளார். மேலும் நிதியை முடக்கி, மாநிலங்களை தன்வசப்படுத்த பாஜக நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைன் பயணம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி விவாதித்துள்ளார். இது குறித்து Xஇல் பதிவிட்ட அவர், இரு நாடுகளுக்கு இடையேயான இறையாண்மை மற்றும் பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை கைவிடுவது பற்றியும், அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாகவும் மோடி அவரிடம் விளக்கினார்.
உலக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (38) தனது ஓய்வை பற்றி முதல்முறையாக பேசியுள்ளார். கிளப் கால்பந்தில் கிட்டத்தட்ட அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள ரொனால்டோ, இன்னும் தனது போர்ச்சுகல் அணிக்காக உலகக் கோப்பையை வெல்லவில்லை. இந்நிலையில், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவேன் எனக் கூறிய அவர், ஓய்வுக்கு பிறகு ஒரு கிளப்பை வாங்க விரும்புவதாக தெரிவித்தார்.
ஜம்மு & காஷ்மீர் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 15 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், தற்போது 29 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் நிலையில், காங்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இங்கு, செப்.18, 25 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
மாலையில் சிறிய அளவில் நடைபயிற்சி செய்வது நன்றாக தூங்க உதவும். இரவு உணவு நன்றாக செரிமானம் ஆவதோடு, முதுகு வலி வராமலும் தடுப்பதாக, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒவ்வொரு உறுப்பிலும் இயக்கத்தை உருவாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், பல உடல்நலப் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது. மேலும், தசைகளை வலுப்படுத்துவதோடு, மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுவதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று லண்டன் புறப்படுகிறார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தியாவிலேயே ஒரே ஒரு கட்சி, படிப்பதற்காக ஒரு மாநிலத் தலைவரை 3 மாதம் விடுப்பு கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகிறது என்றால் அது பாஜக மட்டும் தான். படிப்புக்கு பாஜக தரும் முக்கியத்துவத்தை பாருங்கள். தலைவர் பதவி என்பது வெங்காயம் மாதிரி. உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது” எனக் கூறினார்.
நிதி நிறுவன மோசடி வழக்கில் <<13842880>>தேவநாதனை<<>> 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரி மனு அளித்தது. இந்நிலையில், 7 நாள்கள் விசாரணைக்கு பிறகு செப்டம்பர் 3 மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BSP கட்சியின் தேசியத் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லக்னோவில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில், தேசிய செயற்குழு & அகில இந்திய மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், போட்டியின்றி ஒருமனதாக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2003இல் இருந்து அவர், அக்கட்சியின் தேசியத் தலைவராக பதவி வகித்து வருவது கவனிக்கத்தக்கது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற நமீதாவை அங்குள்ள நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதாக அவர் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தான் இந்து என்பதற்கான சான்றிதழை காண்பிக்குமாறு நிர்வாகிகள் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறநிலையத்துறை ஆணையத்திடம் கோயில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில், “நமீதாவின் மதம் பற்றி யாரும் கேட்கவில்லை” எனக் கூறியுள்ளது.
2026 தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடியுமா, ஒரு தொகுதியில் வெல்ல முடியுமா என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். இபிஎஸ் குறித்து விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி கிடையாது, அவர் 7 நாளே ஆயுள் கொண்ட விட்டில் பூச்சி என்றும் சாடியுள்ளார். மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்தும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை, ஆட்சிக்கு வரலாம் என பாஜக பகல் கனவு காண்பதாகவும் விமர்சித்தார் .
Sorry, no posts matched your criteria.