India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளம் தலைமுறையினரிடம் நடைப்பயிற்சி குறைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகளவில் பைக் பயன்படுத்துவதால், சர்க்கரை நோய், High BP, இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், குறைந்தது 30 நிமிடங்கள் நடந்தாலே, இந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும் எனக் கூறுகின்றனர். Share it.
சமீபத்திய நிகழ்வுகளையும், பொது அறிவு வினாக்களையும் ‘கேள்வி?பதில்’ வகையில் புகைப்படங்களாக மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் Swipe செய்து படிக்க முடியும். இதை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். தொடர்ந்து இதே போல பல பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது Way2News செயலியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
‘கூலி’ படத்தில் தயாள் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஷோபின் ஷாஹிர் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாப்பாத்திரங்கள் அறிமுகம் இன்று மாலை 6 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரஞ்சு மொழி பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக பிரான்ஸ் தூதரகத்துடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்கட்டமாக 9 மற்றும் 10 வகுப்பை சேர்ந்த 4 பேட்ஜ் மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் சென்னை முழுவதிலும் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்படாமல் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக விசிக MLA ஆளூர் ஷாநவாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். PMLA வழக்குகளில் ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஜாமின் என்பது விதி விலக்காகவும், சிறை என்பது விதியாகவும் இருப்பது ஏன்? என வினவியுள்ளார். இன்று ஜாமின் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என SC கூறியுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. இப்படம் அக்.10ல் வெளியாக உள்ள நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகளில் நடிகை மஞ்சு வாரியர் ஈடுபட்டுள்ள போட்டோக்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகம் முழுவதும் அறியப்படும் அறிவியல் விஞ்ஞானி. ஆனால், அவரது குழந்தை பருவம் தோல்விகளால் நிறைந்து இருந்தது உங்களுக்கு தெரியுமா? ஆம், 9 வயது வரை அவரால் சரளமாக பேசக்கூட முடியாது. மந்த புத்தியுள்ள மாணவனாக காணப்பட்டதால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதுபோன்ற பல்வேறு அவமானங்களுக்கு 1921இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றதன் மூலம் சமூகத்திற்கு பதிலடி கொடுத்தார்.
ஆக.31ஆம் தேதி நியாய விலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக மாதத்தில் இறுதிப்பணி நாளில் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால், இம்மாதத்திற்கான பொருட்களை பலர் பெறவில்லை என்பதால், அனைத்து அட்டைதாரர்களுக்கும் தடையின்றி பொருட்கள் கிடைக்கும் நோக்கில் ஆக.31இல் ரேஷன் பொருட்களைப் பெறலாம் எனக் கூறியுள்ளது.
பாஜகவை சாந்தப்படுத்த முருகன் மாநாட்டை DMK நடத்தியுள்ளதாக ADMK விமர்சித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ADMK EX மினிஸ்டர் ஜெயக்குமார், மதங்களை மதிக்க தெரியாத DMK, முருகன் மாநாடு நடத்தியது வேடிக்கை என்று கூறினார். பாஜகவை தாஜா செய்தால் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என வால் பிடிக்கும் வேலையை DMK தொடங்கி உள்ளது. பாஜகவுக்கு சொம்பு தூக்குகிற கட்சியாக மாறிவிட்டது என்றும் அவர் விமர்சித்தார்.
‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘புஷ்பா’ வெற்றியை தொடர்ந்து, அதன் 2ஆம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு PAN இந்தியா அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்னும் 100 நாள்களில் ICONIC box office experienceஐ உணர தயாராக இருக்கும்படி பதிவிட்டு, அல்லு அர்ஜூனின் மாஸான போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. யாரெல்லாம் ‘புஷ்பா 2’ படத்துக்காக வெயிட்டிங். கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.