news

News August 29, 2024

₹75 லட்சம் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

கூட்டுறவு செயலியில் ₹75 லட்சம் வரை <<13964008>>வீட்டுக்கடனு<<>>க்கு விண்ணப்பிப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். கூட்டுறவு செயலியில் வங்கி சேவை பிரிவை தேர்வு செய்து, கடன் தகவல் குறிப்பை அழுத்த வேண்டும். அதில் வீடு, பயிர் உள்ளிட்ட பல கடன்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் வீட்டுக்கடனை தேர்வு செய்து, அதில் கேட்கப்பட்ட விவரங்கள், முந்தைய கடன் விவரத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News August 29, 2024

காளான் வளர்ப்புக்கும் இனி மானியம்

image

தமிழகத்தில் உண்ணக் கூடிய காளான் வளர்ப்பு, வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. காளான் முக்கிய உணவுப் பொருளாக மாறி வருவதால், அதன் தேவையும் அதிகரித்துள்ளது. இதையொட்டி, மொட்டுக் காளான், பால் காளான் வகைகளை வளர்ப்பது, வேளாண் சாகுபடி கீழ் கொண்டு வரப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயத்திற்கு கிடைக்கும் அரசின் அனைத்துவித மானிய உதவிகளும் காளான் வளர்ப்பவர்களுக்கும் கிடைக்க உள்ளது.

News August 29, 2024

6 நாள்கள் மழை நீடிக்கும்: IMD

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் செப்.3ம் தேதி வரை 6 நாள்கள் மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறியுள்ளது.

News August 29, 2024

பண வரவை அதிகரிக்க செய்யும் குரு பகவான்

image

குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு. நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்கும் தேவர்களின் ஆசானான குரு பகவானுக்கு விரதமிருந்து, சென்னை பாடியில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோயிலுக்குச் சென்று, அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, நெய் தீபமேற்றி, கொண்டைக்கடலை நைவேத்தியம் படைத்து, குரு காயத்ரி மந்திரம் சொல்லி வணங்கினால், பண வரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

News August 29, 2024

நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

image

நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்.8 வரை நடைபெற உள்ள விழாவில், பிற மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவின் ஆசியை பெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்குவதால், உள்ளூர் விடுமுறை அறிவித்து நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News August 29, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி

image

*டெலிகிராம் CEO கைது – ஃபிரான்ஸிடம் ரஃபேல் விமானத்தை வாங்கும் ஒப்பந்தத்தை UAE நிறுத்தி வைத்தது.
*நைஜீரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 49 பேர் பலி.
*ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சிக்கு ஷேக் ஹசீனா அரசு விதித்த தடையை நீக்கியது இடைக்கால அரசு.
*வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஆஸி., கட்டுப்பாடு – இந்தியாவுக்கு பாதிப்பு.
*2 பெண்கள் கொடூர கொலை-USAவைச் சேர்ந்த டெட்பூல் கில்லர் வேட் வில்சனுக்கு மரண தண்டனை.

News August 29, 2024

தமிழ் திரையுலகிலும் பாலியல் தொந்தரவு: ஊர்வசி

image

தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக நடிகை ஊர்வசி குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள திரையுலகம் போல தமிழ் திரையுலகில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து பேச யாரும் முன் வருவதில்லை என்றும், இதனால் தமிழ் திரையுலகில் எதுவும் நடக்கவில்லை எனக் கூறிவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஊர்வசி குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன?

News August 29, 2024

இந்த செயலி இருந்தால் ₹75 லட்சம் வரை வீட்டுக் கடன்

image

கூட்டுறவு செயலி மூலம் ₹75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது. இதற்காக கூட்டுறவு எனும் செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பித்து, 8.5% வட்டியில் கடன் பெறலாம். இந்த கடனை அடைப்பதற்கு 20 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

News August 29, 2024

வேளாங்கண்ணி திருவிழா இன்று தொடங்குகிறது

image

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா, ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கான கொடியேற்றம் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஆலயத்தில், ஏசுவின் தாய் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி அளிப்பது சிறப்பு. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, அனைத்து மத பக்தர்களும் வழிபடும் தலமாக இது திகழ்கிறது.

News August 29, 2024

இன்று முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்

image

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், இன்று காலை 10 மணி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெறலாம். தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

error: Content is protected !!