India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்தில் உடல் நலனை மீட்டெடுக்க பொற்சீந்தில் மூலிகை போதும் என தேரன் வெண்பா கூறுகிறது. பால்மடைன், பெர்பெரின், டினோஸ்போரின், ஃபுரானோலேக்டோன் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இந்த இலைச் சாற்றை, சுக்குப் பொடி, பனைவெல்லம் சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் உள்ளங்கை, பாத எரிச்சல், நீரிழிவு , வாத நோய் உள்ளிட்டவை கட்டுப்படும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரிய பிரிஜ் பூஷன் மனுவை, டெல்லி HC தள்ளுபடி செய்தது. 6 பெண்கள் புகார் அளித்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கை எப்படி ரத்து செய்ய முடியும்? எனவும் நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பினர். EX மல்யுத்த சங்கத்தலைவரான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து WFI தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
ஜியோ பயனாளர்களுக்காக தீபாவளி முதல் 100ஜிபி இலவச Jio AI-Cloud திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜியோ 47ஆவது வருடாந்தர கூட்டத்தில் முகேஷ் அம்பானி இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார். அதன்படி, Jio பயனர்கள் 100 GB வரை இலவசமாக தங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், மற்ற அனைத்து டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் தரவுகளை பாதுகாப்பாகச் சேமித்துக் கொள்ளலாம்.
ஆந்திராவில் YSR காங்கிரஸ் கட்சியின் 2 மாநிலங்களவை எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மொபிதேவி வெங்கட ரமனா, பீடா மஸ்தான் ஆகியோர் மாநிலங்களவைத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். YSR காங்கிரஸ் கட்சியில் இருந்தும் 2 பேரும் விலகியுள்ளனர். விரைவில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர போவதாக தெரிவித்துள்ளனர். YSR காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தியே காரணமாக கூறப்படுகிறது.
தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்தில் உடல் நலனை மீட்டெடுக்க பொற்சீந்தில் மூலிகை போதும் என தேரன் வெண்பா கூறுகிறது. பால்மடைன், பெர்பெரின், டினோஸ்போரின், ஃபுரானோலேக்டோன் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இந்த இலைச் சாற்றை, சுக்குப் பொடி, பனைவெல்லம் சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் உள்ளங்கை, பாத எரிச்சல், நீரிழிவு , வாத நோய் உள்ளிட்டவை கட்டுப்படும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரில், இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக ஏற்கெனவே மன்னிப்பு கேட்ட அவர், தற்போது மீண்டும் பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதால், அவர் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் பணமோசடி, சூதாட்டம், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், ‘டெலிகிராம்’ ஆபாச படம் & மனித கடத்தலை ஊக்குவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் வந்துள்ளது. இதன் காரணமாக அச்செயலியை மத்திய அரசு தடை செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எந்தெந்த அப்ஸை அரசு தடை செய்யலாம் என இங்கே கருத்திடவும்.
இந்தியாவில் 1,539 பேரிடம் தலா ₹1,000 <<13966801>>கோடிக்கும் <<>>மேல் சொத்து உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 220 அதிகம். இவர்களின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 25% அதிகரித்துள்ளது. முதல்முறையாக இந்தி நடிகர் ஷாருக்கான் இந்த பட்டியலில் நுழைந்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ₹7,300 கோடி இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரமாக மும்பை, டெல்லி, ஹைதராபாத் திகழ்கின்றன.
இங்கிலாந்து தடகள வீரர் டிவைன் ஐஹேம் 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் இலக்கை 10.30 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டென்னிஸ் 10.51 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. அதை 0.21 வினாடிகள் வித்தியாசத்தில் ஐஹேம் முறியடித்துள்ளார். இவரது வேகம் பிரபல ஓட்டப்பந்தய ஜாம்பவானான உசைன் போல்ட்டை (9.58 வினாடிகளில்) நினைவுப்படுத்தும் விதமாக இருந்ததாக பலரும் கூறுகின்றனர்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், வலுவான தரைக்காற்று 30 – 40KM வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.