news

News September 26, 2024

ஆழ்ந்த தூக்கத்திற்கு செய்ய வேண்டியதும்! வேண்டாததும்!!

image

*தூங்கச் செல்லும் முன்பு இளஞ்சூட்டில் பசும்பால் அருந்தலாம்.
*ஆப்பிள், வாழை, மாதுளை (தேவையான அளவு) ஆகியவை கலந்த சாலட்டை ஒரு கப் சாப்பிடலாம்.
*நாள்தோறும் தூங்கும்முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
*தூங்கச் செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
*எளிதில் செரிமானம் ஆகாத தயிர், முட்டை, மாமிசம், சிப்ஸ், மஞ்சூரியன் போன்றவற்றை இரவில் உண்ணக் கூடாது.

News September 26, 2024

4 பேருக்கு மரண தண்டனை: நெல்லை கோர்ட் அதிரடி

image

தென்காசியில் கடந்த 2014-ம் ஆண்டு காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பொன்னுமணி, கண்ணன், முத்துகிருஷ்ணன், காளிராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் பொன்னுமணி, கண்ணன், முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2024

SPB சாலை.. அனைவரது சார்பிலும் நன்றி

image

மறைந்த பாடகர் SPB பெயரில் சாலை என அறிவித்த CM ஸ்டாலினுக்கு நன்றி என இளையராஜா Xஇல் பதிவிட்டுள்ளார். அதில், தனது நண்பன் பாலுவின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலையின் பெயரை மாற்றியதற்காக தமிழக மக்கள், திரையுலகம் சார்பில் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலை, S.P.பாலசுப்பிரமணியன் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

News September 26, 2024

FLASH: ஊதியத்தை உயர்த்தி அறிவித்தது அரசு

image

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. திறனில்லா ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ₹783, பகுதி திறன் உள்ளவர்களுக்கு ₹868, திறன் உடையவர்களுக்கு ₹954, திறன் மிகுதியானவர்களுக்கு ₹1,035ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய விகிதம் அக்.1 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கட்டுமானம், தூய்மைப்பணி உள்ளிட்ட பலதுறை தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர்.

News September 26, 2024

செந்தில் பாலாஜி: அன்றும் இன்றும்..!

image

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து செந்தில் பாலாஜி இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அவரை ED கைது செய்தது. நெஞ்சு வலி, பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகிய படலங்களை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொங்கு மண்டலத்தை தனது கைக்குள் வைத்திருந்த செந்தில் பாலாஜி, 471 நாட்கள் சிறைவாசத்தை முடித்து வெளியே வந்திருக்கிறார்.

News September 26, 2024

கவர்ச்சி உடையில் மனைவியை பார்க்க தனித்தீவு!

image

இவரை போல கணவர் கிடைக்குமா என இளம்பெண்களை ஏக்கம் கொள்ள செய்திருக்கிறார் துபாய் ஷேக் ஒருவர். துபாயில் பெண்கள் கவர்ச்சி உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனது காதல் மனைவியை, பிகினி உடையில் பார்க்க ஆசைப்பட்ட ஜமால், தனித்தீவு ஒன்றையே ரூ.418 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். அந்த தீவின் வீடியோவை அவரது மனைவி செளதி, பெருமையுடன் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். என்னா மனுசன்!

News September 26, 2024

“2026ல் விஜய் தான் முதலமைச்சர்”

image

அக்.27ம் தேதி நடைபெறும் தவெகவின் முதல் மாநாட்டில் பெண்கள்தான் அதிகமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நிர்வாகிகளுடன் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நம்பிக்கை தெரிவித்தார். நம்முடைய இலக்கு 2026 தான் என்றும், விஜய் தான் முதலமைச்சர் எனவும் உறுதி தெரிவித்தார்.

News September 26, 2024

கேவலத்தின் உச்சம்: அதிமுக விமர்சனம்

image

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு SC ஜாமின் அளித்ததை வரவேற்று CM ஸ்டாலின் இன்று உருக்கமாக பதிவு வெளியிட்டு இருந்தார். இதை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. X பக்கத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், விசாரணை கைதி ஜாமினில் வருவதற்கு மாநிலத்தின் முதல்வர் புளகாங்கிதம் அடைவது கேவலத்தின் உச்சம் என விமர்சனம் செய்துள்ளார்.

News September 26, 2024

செந்தில் பாலாஜி விடுதலைக்கு OK சொன்ன ED

image

செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்கள் ஏற்கப்பட்டதை அடுத்து, சற்றுநேரத்தில் அவர் வெளியே வருகிறார். இரு நபர் நிபந்தனை ஜாமின் உத்தரவாதங்கள் மீது நீதிபதி கார்த்திகேயன் சந்தேகங்களை எழுப்பிய நிலையில், SB விடுதலைக்கு ED தரப்பில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, ஜாமின் உத்தரவாதங்களை நீதிபதி ஏற்றுக்கொண்டார். 471 நாள்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில் பாலாஜி விடுதலையாகிறார்.

News September 26, 2024

கருவிழி அடிப்படையில் பொருள்கள் விநியோகம்

image

தமிழகத்தில் 10,000 பகுதி நேர நியாய விலைக் கடைகளில் கருவிழி அடிப்படையில், பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 3 லட்சம் பேர் குடும்ப அட்டைக் கோரி விண்ணப்பித்ததாகவும், 1.5 லட்சம் பேருக்கு சரிபார்க்கும் பணி நிறைவடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 40 மாத திமுக ஆட்சியில் 16 லட்சம் நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!