India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை அடுத்து, பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய மருத்துவ சங்கம் (IMA) ஆய்வு நடத்தியது. இதில், தங்களுக்கு இரவு பணிகளின் போது Duty Room ஒதுக்கப்படவில்லை என 45% பெண் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்படியே அறை ஒதுக்கப்பட்டாலும் அங்கு கழிவறை இருப்பதில்லை என்றும், இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரனார் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் அனுமதியின்றி நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்.11ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
*எலுமிச்சையில் ஸ்ட்ராபெர்ரியை விட அதிக சர்க்கரை உள்ளது. *8% பேருக்கு கூடுதல் விலா எலும்பு உள்ளது. *85% தாவர உயிரினங்கள் கடலில் காணப்படுகின்றன. *ஈர்ப்பு விசை இல்லாவிட்டால், பறவைகளால் உணவை விழுங்க முடியாது. *ஆங்கிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் எழுத்து ‘E’. *மனித உடலில் மிகச்சிறிய எலும்பு காதில் காணப்படுகின்றன. *பூனைகள் வாழ்நாளில் 66% நேரம் தூங்குகின்றன. தகவல் பிடித்திருந்தால் லைக் போடுங்க.
இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூலை வரை, ₹81 லட்சம் கோடி மதிப்புக்கு UPI பரிவர்த்தனைகள் நடந்திருப்பது புதிய சாதனையாக கருதப்படுகிறது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் தான் 40%க்கும் அதிகமான பணம் செலுத்தப்படுவதால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகிலேயே முன்னணியில் இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 10-15 ஆண்டுகளில், UPI பரிவர்த்தனை 100 பில்லியனைத் தொடும் என கூறப்படுகிறது.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பந்தயம் எப்போது தொடங்கும் என்பது குறித்து மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப பிரச்னை காரணமாக ரவுண்ட் 2 போட்டிகளை தொடங்குவதில் தாமதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.30 மணிக்கு போட்டிகள் தொடங்கவிருந்த நிலையில், தற்போது போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்லீரலைக் குறிவைக்கும் வைரஸ்களின் பெருக்கத்திற்கு காரணமான நொதியைத் தடுத்து நிறுத்தும் வீரியம் கீழாநெல்லிக்கு இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது. குவர்செடின், கூமாரின், அமாரின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் இலையை, கரிசாலையுடன் சேர்த்து அரைத்து, நெல்லி அளவில் உப்பில்லா மோரில் கலந்து காலையில் 48 நாட்கள் பருகி வந்தால் கல்லீரல் பாதிப்பு மட்டுப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
CRPF மூலம் மத்திய அரசு தன்னை உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டிய சரத்பவார், Z+ பாதுகாப்பை நிராகரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நான் யாரை சந்திக்கிறேன்; எங்கு செல்கிறேன் என்பதை அறிய மத்திய அரசு எனக்கு இந்த பாதுகாப்பை வழங்கியுள்ளது” என்றார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கி ஏந்திய CRPF பாதுகாப்பை வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
வேளாண் சார்ந்த தொழிலை பட்டதாரி இளைஞர்கள் தொடங்கினால் அவர்களுக்கு வங்கிக்கடனுடன் ₹1 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயத்தின் மீது இளைஞர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் அரசு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. முதற்கட்டமாக 100 இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
உலகின் தலைசிறந்த டாப் 50 சிக்கன் ரெசிபி வகைகளை Taste Atlas நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 10 இடங்களில், பட்டர் சிக்கன் (4), டிக்கா (6), தமிழ்நாட்டின் சிக்கன் 65 (10) ஆகிய 3 இந்திய உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. முதலிடத்தில் கொரியன் சிக்கின் உள்ளது. தமிழ்நாட்டின் வாரயிறுதி நாட்களில் கோழிக்கறி என்பது ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். உங்களுக்கு பிடித்த சிக்கன் ரெசிபி என்ன?
இந்தி எதிர்ப்பு என்றால் அது தமிழ்நாடு தான் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், இந்தியை ஒருபோதும் தமிழகம் எதிர்த்ததில்லை என்பதே நிதர்சனம். இந்தி திணிப்பை மட்டுமே தமிழகம் எதிர்த்திருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம்தான் இந்த செய்தி. அதாவது, இந்தி பிரச்சார சபா வாயிலாக இந்தி தேர்வுகளை எழுதியதில் தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இந்திக்கு தமிழர்கள் எதிரி அல்ல என்பதற்கு இதுவே சான்று.
Sorry, no posts matched your criteria.