India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து, இம்மாதம் மற்றுமொரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது. அதாவது, இந்த மாதத்தின் 3ஆவது வாரத்தில் அகவிலைப்படியை 3-4% வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அதேநேரம், கொரோனா காலத்திற்கான DA, DR அரியர் தொகை வழங்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
தமிழ் தேசியம் எழுச்சி அடைந்தால் திராவிடம், இந்திய தேசியம் செல்லாக்காசாகி விடும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இந்தியாவை இந்துக்கள் நாடு என சொல்வதை ஏற்க மாட்டேன். ஏன் என்றால் இந்த நாடு எங்கள் நாடு, பாரத நாடு பைந்தமிழர் நாடு எனக் கூறினார். மேலும், தெற்காசிய நாடுகள் முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள், மற்றவர்கள் வந்து குடி பெயர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
காணாமல் போன ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வச்கஜெட்ஸ் எரிமலைக்கு அருகில் உள்ள தளத்தில் இருந்து நேற்று புறப்பட்ட Mi-8T ரக ஹெலிகாப்டர், சிறிது நேரத்தில் காணாமல் போனது. ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில், அதன் பாகங்கள் கண்டறியப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ் நடிகைகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது. திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து ராதிகா, குட்டி பத்மினி போன்ற பல்வேறு நடிகைகள் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், அதுகுறித்து ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், புகார்களில் உண்மையிருந்தால் அரசு தாமதிக்காது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
அரசு வங்கிகளுக்கு இந்த மாதம் 8 நாள்கள் விடுமுறை ஆகும். அதை இங்கு காணலாம். 1) செப்டம்பர் 1- ஞாயிறு 2) செப்டம்பர் 7 – விநாயகர் சதுர்த்தி 3) செப்டம்பர் 8 – ஞாயிறு 4) செப்டம்பர் 15 – ஞாயிறு 5) செப்டம்பர் 16 – மிலாது நபி 6) செப்டம்பர் 22 – ஞாயிறு 7) செப்டம்பர் 28 – கடைசி சனிக்கிழமை 8) செப்டம்பர் 29 – ஞாயிறு. இதுதவிர்த்து, சில மாநிலங்களில் அந்தந்த விழாக்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $7.02 பில்லியன் அதிகரித்து, $681.68 பில்லியன் என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. முன்னதாக, $674.91 பில்லியன் வரலாற்று உச்சமாக இருந்தது. ஆகஸ்ட் 23ஆம் தேதி கணக்கெடுப்பின்படி, தங்கத்தின் கையிருப்பு $893 மில்லியன் உயர்ந்து, $60.99 பில்லியனாக அதிகரித்துள்ளது. SDR பொறுத்தமட்டில் $118 மில்லியன் அதிகரித்து, $18.45 பில்லியனாக உயர்ந்துள்ளது.
கிரிக்கெட் உலகின் மகத்தான பிளேயரான விராட் கோலியை பாபர் அசாம் நெருங்கக் கூட முடியாது என்று பாக். முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “உலகம் முழுவதிலும் உள்ள ஆடுகளங்களில் எதிரணியை அசத்தும் வகையில் விளையாடிய விராட் கோலியை தனது சொந்த மண்ணிலேயே சுமாராக விளையாடும் பாபர் அசாமுடன் ஒப்பிடக்கூடாது. அதனாலேயே நான் எப்போதும் அவர்களை ஒப்பிடுவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகம் இருப்பதாக நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. இந்நிலையில், சென்னையில் நடிகர் ரஜினிகாந்திடம் நிருபர்கள் இதுதொடர்பாக கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ஹேமா கமிட்டி பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றார். முன்னதாக, ஹேமா கமிட்டி அறிக்கையை அடுத்து, மலையாள நடிகர் சங்கப் பதவிகளிலிருந்து மோகன்லால் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர்.
இன்று 12 மணிக்கு Current Affairsஇல் கேட்கப்பட்ட <<13991104>>கேள்விகளுக்கான<<>> பதில்கள் இவையே. 1. சுமித் அன்ட்டில் (ஈட்டி எறிதல்) 2. ராஜீவ் காந்தி 3. அரிகாத் 4. சுச்சேதா கிரிபாலனி (உ.பி.). இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னிற்கு சாதகமான பிட்ச்களில் திணறுவதற்கு BCCI நிர்வாகமும் முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் சுழலக் கூடிய மோசமான பிட்ச்களில் இந்திய அணி அதிகம் விளையாடி இருக்கிறது. இது பேட்ஸ்மேன்களின் மன உறுதியை குறைத்துள்ளது. அணி நிர்வாகம் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.