India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்பு FRAUD என்று திமுகவால் விமர்சிக்கப்பட்ட செந்தில் பாலாஜி இப்போது எப்படி தியாகியானார் என்று அதிமுக கிண்டலடித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், அதிமுகவில் செந்தில் பாலாஜி இருந்தபோது, அவரை ஆள் கடத்தல் செய்பவர், சீட்டிங் என்று திமுக குற்றம்சாட்டியது. ஆனால் அவரை தற்போது தியாகி என்கிறது என்று கிண்டலடித்தார்.
1) விமானத்தின் வேகத்தைக் கணக்கிட பயன்படும் கருவி எது? 2) கி.மு 7000 ஆண்டளவில் நடந்ததெனக் கருதப்படும் முதற்சங்கத்தின் அமைவிடம் எது? 3) HTML என்பதன் விரிவாக்கம் என்ன? 4) உலகின் கூரை என்று அழைக்கப்படும் நாடு எது? 5) ஆசிய யானையின் விலங்கியல் பெயர் என்ன? 6) எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன? 7) செம்பின் (Copper) வேதியியல் குறியீடு என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
1977இல் நவ.27ஆம் தேதி பிறந்த உதயநிதி இளங்கலை வணிகவியல் முடித்தவர். 2008இல் குருவி படம் மூலம் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைந்த அவர், 2011இல் ஓகே ஒகே திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். திடீரென்று அரசியலில் நுழைந்த அவருக்கு 2019இல் திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின், 2021இல் திருவல்லிக்கேணி MLA-ஆக தேர்வான அவருக்கு 2022இல் அமைச்சர், 2024இல் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் தொடங்குவது தாமதமாகியுள்ளது. இப்போட்டி நடைபெறும் கான்பூரில் பெய்த மழையால் முதல் நாள் ஆட்டமும், 2ஆவது நாள் ஆட்டமும் பாதிக்கப்பட்டது. இன்று மழை பெய்யாத போதிலும் காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கவில்லை. 10 மணிக்கு மையானத்தில் கள ஆய்வு நடக்கவுள்ளது. அதன்பிறகே போட்டி தொடங்கும் நேரம் தீர்மானிக்கப்பட உள்ளது.
பச்சரிசி, உளுந்து & ஜவ்வரிசி ஒன்றாக ஒரு மணிநேரம் ஊற வைத்து, நீரை வடித்து, வடை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து வைக்கவும். பாசிப்பருப்பை மலர வேக வைத்து வடிக்கவும். அத்துடன், கெட்டியான பதத்தில் பனை வெல்லப் பாகு, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக பூரண உருண்டைகளைப் பிடிக்கவும். இதனை மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு சுழியம் ரெடி.
ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 17ஆம் தேதி சுயிஷா சாவத் என்ற பெண் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து நியூயார்க் சென்றார். விமானத்தில் வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், விமான ஊழியர்களிடம் புகார் அளித்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, செந்தில்பாலாஜி, கோவி. செழியன், ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகிய 4 பேர் உள்ளே வந்துள்ளனர். அதே நேரம், குமரி (மனோ தங்கராஜ்), விருதுநகர் (மஸ்தான்), விழுப்புரம் (KKSSR) ஆகிய மாவட்டங்களில் மக்களின் முகமாக இருந்த 3 பேர் அவுட்டாகியுள்ளனர். இது அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தவெகவின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “நம் மாநாட்டுக்கு வாருங்கள் என யாருக்கும் அழைப்பு விடுக்க தேவையில்லை. விஜய் முகமே போதும். கூட்டம் தானாக சேரும். கடந்த மக்களவைத் தேர்தலில் 18 வயது நிரம்பிய பலர் ஓட்டு போடவில்லை. விஜய்க்குதான் எங்கள் முதல் ஓட்டு எனக் கூறி அவர்கள் வாக்களிக்கவில்லை” என்றார்.
கடும் எதிர்ப்பு காரணமாக, ‘லட்டு பாவங்கள்’ வீடியோவை பரிதாபங்கள் டீம் நீக்கியது. எனினும், அந்த யூடியூப் சேனல் மீது ஆந்திரா டிஜிபியிடம் தமிழக பாஜக புகார் அளித்தது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமர்பிரசாத், “லட்டு பாவங்கள் வீடியோவுக்காக எச். ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் மன்னிப்பு கேட்டனர். ஆதலால், அந்த யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்” எனக் கூறினார்.
இந்தியாவில் முதன்முதலில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், பீகாரைச் சேர்ந்த அனுராக் நாராயணன் சின்ஹா. அவர் 1937-1939 வரையிலும், 1946-1952 வரையிலும் பீகாரின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆந்திராவின் நீலம் சஞ்சீவ ரெட்டி, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, கர்நாடகத்தின் சித்தராமையா, எடியூரப்பா, பீகாரின் சுஷில் குமார் மோடி என பல முக்கிய தலைவர்கள் துணை முதல்வராக பதவி வகித்திருக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.