India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா, வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. கான்பூரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம், 2ஆவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது. 3ஆவது நாள் ஆட்டமான இன்று மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டதால், முதலில் போட்டி தொடங்குவது தாமதமாகும் எனக் கூறப்பட்டது. பிறகு கைவிடப்பட்டது.
உதயநிதி தமிழக துணை முதலமைச்சராக இன்று மாலை அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். அரசியலுக்கு வந்த 5 ஆண்டுகளிலேயே அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது கடும் விமர்சனத்தை ஈர்த்து வருகிறது. விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பதவியேற்புக்கு முன்னதாகவே, தனது எக்ஸ் பக்கத்தில் ‘தமிழ்நாடு துணை முதலமைச்சர்’ என உதயநிதி மாற்றியுள்ளார்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் தைரியமும், தர்ம சிந்தனையும் கொண்டவராக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வம்பு சண்டைக்குப் போகமாட்டீர்கள். அதேநேரத்தில், வலிய வரும் சண்டையை விடமாட்டீர்கள். நினைத்ததை முடிக்கும் செயல்திறன், உள்ளதை உள்ளபடி சொல்லும் மனம் கொண்டவர்கள் என்று நந்தி வாக்கியம் உங்களைப் பற்றிக் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
ஆன்லைன் மூலம் நாள்தோறும் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வரிசையில், காதலிப்பதாகக் கூறி, பண மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது. அதில், முன்பின் தெரியாதோர் உங்களது உணர்வை காயப்படுத்த அனுமதிக்க வேண்டாம். அவர்களுடனான நிதி பரிவர்த்தனையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். மோசடி குறித்து www.cybercrime.gov.in, 1930ல் புகார் அளிக்கலாம் எனக் கூறியுள்ளது.
ராகுலை பொய் பேசும் இயந்திரம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். ஹரியானாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ராகுலை “ராகுல் பாபா” என்று சாடினார். ஓய்வூதியம் காெடுக்க விரும்பாததால், அக்னிவீர் திட்டத்தை அரசு கொண்டு வந்திருப்பதாக ராகுல் கூறுகிறார். ஆனால் இளைஞர்களைக் கொண்ட படையாக ராணுவத்தை வைத்திருக்க அது கொண்டு வரப்பட்டது என்று அவர் கூறினார்.
செய்தித்தாள்கள் மூலம் செய்யப்படும் ப்ளேட்களில் உணவுப் பொருட்களை உட்கொள்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல என FSSAI எச்சரித்துள்ளது. நாளிதழ்களில் அச்சிடப்படும் மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும், பேசிலஸ் நுண்ணுயிரிகளின் தாக்குதலும் குடற்புற்றுநோயை ஏற்படுத்துகிறதாம். இதன் காரணமாகவே உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கும், பாதுகாத்து வைப்பதற்கும் தாள்களை பயன்படுத்த வேண்டாமென FSSAI அறிவுறுத்தியுள்ளது.
இன்று 10 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) டேகோ மீட்டர் 2) கடல் கொண்ட தென் மதுரை 3) Hyper Text Markup Language 4) திபெத் 5) எலிபாஸ் மாக்சிமஸ் 6) ஆறு 7) Cu. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தேடப்படும் மொட்டை கிருஷ்ணன், வக்கீல் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர். தலைமறைவாக உள்ள மொட்டை கிருஷ்ணன் குறித்து போலீஸ் அளித்த புகாரில், அவரை வக்கீல் பணியில் இருந்து அகில இந்திய பார்கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது.
துணை முதல்வராக உதயநிதி இன்று பதவியேற்கிறார். இந்நிலையில், துணை முதல்வர் பதவி மற்றும் அவருக்கான அதிகாரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் ‘துணை முதல்வர்’ என்ற பதவியே வரையறுக்கப்படவில்லை. கூட்டணி சமரசங்களுக்காக உருவாக்கப்பட்டதே இது. மற்றபடி, அப்பதவிக்கு அதிகாரங்கள் என தனியாக ஏதுமில்லை. கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்டவரே துணை முதல்வர்.
மட்டன் பலவிதமான சத்துகளை உள்ளடக்கிய அற்புதமான உணவு. புரதம், கொழுப்பு, இரும்பு என உடலுக்கு தேவையான சத்துகள் மட்டனில் உள்ளன. ஆனாலும், மட்டன் சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும் பால் மட்டும் எடுக்கக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரண்டிலும் புரோட்டீன்கள் உள்ளதால் கடுமையான செரிமானப் பிரச்சனை ஏற்படும். மேலும், லாக்டோஸ் இன்டோலரன்ஸ் ஏற்பட்டு Food Poison-ம் உருவாகும்.
Sorry, no posts matched your criteria.