India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இயக்குநர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் இருவரின் படைப்பாற்றலும் வியக்க வைக்கிறது. சில படங்களை எடுத்திருந்தாலும், தங்கள் திரைக்கதைகளால் தவிர்க்க முடியாத சக்திகளாக மாறியுள்ளனர். பல நெருக்கடிகளை கடந்தே அவர்கள் பயணிக்கிறார்கள்” என்றார்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வில் உத்தேச விடைகள் மீது முறையீடு செய்ய வருகிற 9ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அவகாசம் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான உத்தேச விடைகள் அண்மையில் வெளியானது. இதன்மீது 9ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் “ஆன்சர் கீ சேலஞ்ச்” என்ற பகுதியில் முறையீடு செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
23ஆவது சட்ட ஆணையம் அமைக்க PRESIDENT திரெளபதி முர்மு ஒப்புதலை வழங்கியுள்ளார். இந்த சட்ட ஆணைய பதவிக்காலம், 2024 செப். 1 முதல் 2027 ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஆகும். சட்ட ஆணையத்தில் ஒரு முழு நேரத் தலைவர், 4 முழு நேர உறுப்பினர்கள், செயலர், 5 பகுதி நேர உறுப்பினர்கள் இடம்பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய சட்ட அமைப்பை மேம்படுத்துவது குறித்த தனது பரிந்துரைகளை அரசுக்கு இந்த ஆணையம் அளிக்கும்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில், அந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மருத்துவர் கொலை சம்பவத்திற்கு பிறகு இடைநீக்கம் செய்யப்பட்ட அவரிடம் உண்மைக் கண்டறியும் சோதனையை சிபிஐ அதிகாரிகள் நடத்தினர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோயிலில் சாமி கும்பிட்டதும் சிலர் உடனே வெளியே வருவர். இது சரியான செயல் இல்லை என்று ஆன்மிகத்தில் சொல்லப்பட்டு உள்ளது. கோயிலில் கண்ணுக்கு தெரியாத சக்திகள் உண்டு என்றும், அந்த சக்திகளின் ஆசீர்வாதம் கிடைக்க, சாமி தரிசனம் முடிந்ததும் கோயிலில் சிறிது நேரம் அமர வேண்டும் என்று ஆன்மிகம் தெரிவிக்கிறது. இத்தகவல் உங்களுக்கு பயன் அளித்து இருக்கும். உங்கள் ப்ரண்ட்ஸ்களுக்கும் இதை பகிருங்க.
படுக்கைக்கு அழைத்த நிகழ்ச்சி மேலாளரை நடிகை அமலாபால் கன்னத்தில் அறைந்து விட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மலையாள பட நடிகைகளை தொடர்ந்து தமிழ் நடிகைகளும் பாலியல் புகார்களை தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு விஷால் பதிலளித்தார். அப்போது மலேசியா நிகழ்ச்சிக்கு முன்பு சென்ற அமலாபாலை, மேலாளர் படுக்கைக்கு அழைத்து அடி வாங்கினார். இதை அமலாபால் என்னிடம் கூறினார் என்று தெரிவித்தார்.
கழிப்பறையில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துவது மூல நோய்க்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கழிப்பறையில் நீண்ட நேரம் உட்காரும் போது ஏற்படும் அழுத்தம், குடல் அசைவுகளின் போது வலிமிகுந்த வீக்கம், எரிச்சல் மற்றும் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். டைபாய்டு, காலரா ஆகிய நோய்களும் ஏற்படலாம். ஒருவர் 7 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் இருக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
திமுக குறித்து பேசும்போது மிகக் கவனமோடு இருக்க வேண்டும் என்று விசிகவினருக்கு திருமாவளவன் கட்டளையிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடைபெற்ற விசிக உயர்நிலை கூட்டத்தில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து உள்ளார். அப்போது மூத்த நிர்வாகிகள் 2 பேரிடம், எந்த விவகாரம் என்றாலும் கட்சி நிலைப்பாட்டை அறிந்து பேச வேண்டும், ஏதாவது பேசி தர்மசங்கடத்தை ஏற்படுத்த கூடாது என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது
இந்தோ – திபெத் படையில் 819 காவலர் இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் SC பிரிவினர்க்கு 48, ST பிரிவினர்க்கு 70 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. வயது வரம்பு 18-25 ஆகும். வேலையில் சேர விரும்புவோர், இந்தோ திபெத் படை இணையதளத்தில் அக்டோபர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.