India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (அக். 01) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (அக். 01) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
நேபாள நிலச்சரிவில் சிக்கி 204 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. மழையைத் தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளியே செல்வோர் குடை, ரெயின் கோட் ஆகியவற்றைக் கொண்டு சொல்ல அறிவுறுத்தப்பட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கி
மார்ச் 9ஆம் தேதி வரை பாக். நடைபெற உள்ளதால் இந்திய அணி சொல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, சர்வதேச சுற்றுப் பயணங்களின் போது அரசிடம் அனுமதி கேட்பதை வழக்கம் என்ற அவர், இந்த விஷயத்திலும் அரசு என்ன முடிவு எடுக்கிறதோ,
அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
நடிகை கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். கவிஞர் சினேகனுக்கும், கன்னிகாவுக்கும் 2021இல் கமல் தலைமையில் திருமணம் நடந்தது. நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்த அவர்கள், சமீபகாலமாக தங்களது சொந்த கிராமத்திற்கு சென்று விவசாயம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், அம்மாவாக போகிறேன், உங்களின் அன்பும், வாழ்த்தும் வேண்டும் என கன்னிகா பதிவிட்டுள்ளார்.
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியை, 13 வயது மாணவியை ரேப் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பலமுறை வன்கொடுமை செய்த டீச்சரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எந்தக் காரணம் கொண்டும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும், அரசின் உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
விஜயின் தவெக கட்சி மாநாடு அக்.27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், 18 ஆண்டுகள் வேலை செய்யும் நிர்வாகி ஒருவர் தன் முதலாளியிடம் 2 நாள் விடுமுறை கேட்டிருக்கிறார். அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் தளபதிக்காக வேலையை விட்டிருக்கிறார். இப்படி உண்மையான தொண்டர்கள் தவெக கட்சியில் மட்டுமே இருக்கிறார்கள் என்றார். உங்கள் கருத்து என்ன?
லட்டு சர்ச்சை குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்றம் தீவிரமாக விசாரித்தால், சந்திரபாபு நாயுடு ஏற்படுத்திய பொய் சர்ச்சை வெளியே வரும். உண்மை வெளி வந்தால், பொய் சொன்னவர்கள் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.