India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹83.98ஆக சரிந்துள்ளது. முன்னதாக செப்.3ஆம் தேதி ₹83.96 என்ற அதிகபட்ச சரிவை எதிர்கொண்டது. ரிசர்வ் வங்கியின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இறக்குமதிக்கு எதிராக டாலரின் தேவை அதிகரித்து வருவதால், ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.
தமிழகத்தில் ஒரு காட்சி மட்டுமே ஓடி முடிந்துள்ள நிலையில்,‘GOAT’ திரைப்படம் ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் இப்படம் வெளியானது. இந்நிலையில், முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகி டெலிகிராம் செயலியில் பகிரப்படுவதால், படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பப்பாளி இலைச்சாறு தட்டணுக்களின் Counts அதிகரிக்கும் திறன் உடையது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும்போது, டாக்டரின் பரிந்துரைப்படி இதனை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். 10 மில்லி என்ற அளவு எடுத்துக் கொண்டாலே போதுமானது. அதேநேரம், கசப்பாக இருப்பதால் குழந்தைகளுக்கு குமட்டல் வராமல் இருக்க பனங்கற்கண்டு சேர்த்து கொடுக்க பரிந்துரைக்கின்றனர். Share it.
<<14005522>>ஆவின்<<>> நிர்வாக சீர்கேடுகளை வீடியோவாக வெளியிட்ட ஊழியரை சஸ்பெண்ட் செய்தது அராஜகத்தின் உச்சம் என இபிஎஸ் கண்டித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சியில் ஆவின் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என கூறிய CM, குற்றங்களை சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதில் சர்வாதிகாரியாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.
உக்ரைனுடன் அமைதி பேச்சு நடத்த இந்தியா, சீனா, பிரேசில் மத்தியஸ்த நாடுகளாக செயல்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன், ரஷ்ய அதிகாரிகள் இடையே இதுதொடர்பாக முதற்கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், ஆனால் அது இன்னும் அமலாகவில்லை, அதன் அடிப்படையில் அமைதி பேச்சு நடக்கும் என புதின் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன்- ரஷ்யா இடையே சுமார் 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மொபைல் போன் மற்றும் மூளை, தலை, கழுத்து புற்றுநோய்களுக்கு தொடர்பு இல்லை என்று ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. W.H.O. ஏற்படுத்திய குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களின் விற்பனை, பயன்பாடு விண்ணைத் தொடும் வேகத்தில் அதிகரிக்கும் நிலையில், இந்த வகை புற்றுநோய் பாதிப்பு ஒரே நிலையில் சீராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டுமென தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ‘G.O.A.T’ என்ற வார்த்தை சனாதனத்தை குறிப்பதாக ரவிக்குமார் விமர்சித்திருந்த நிலையில், படத்தை பார்த்தாலே அப்பெயருக்கான காரணம் புரிந்துவிடும் என்றார். ‘G.O.A.T’ மாபெரும் வெற்றி அடைந்துள்ளதாகவும், விஜய் சிறப்பாக நடித்துள்ளதாகவும் அவர் பாராட்டினார். அவரோட கருத்து குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
விஜய்யின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான அனுமதியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது எனக் கூறினார். மேலும், அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சி எனக் கூறிய அவர், விஜயதாரணிக்கு நிச்சயம் பதவி வழங்கப்படும் எனவும் கூறினார்.
ரேஷனில் ஆகஸ்ட் மாதத்திற்கான பொருள்கள் பெற இன்றே கடைசி நாளாகும். இந்நிலையில், பல பகுதிகளில் பருப்பு, பாமாயிலில் ஏதேனும் ஒன்றை வழங்கிவிட்டு, மற்றொரு பொருளை இல்லை என்று ஊழியர்கள் கூறுகின்றனர். பொருள்கள் கிடைக்காதவர்கள் www.tnpds.gov.in என்ற தளத்திலும், 1967 என்ற எண்ணிலும், TNePDS என்ற செயலியிலும் புகார் அளிக்கலாம். அத்துடன், தங்கள் ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு நிலவரத்தையும் அறியலாம்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தின விழாவில் பேசிய அவர், NEPஐ எதிர்க்கும் மாநிலங்களும் அதில் எந்த அளவு எடுத்துக் கொள்ளலாம் என்றே சிந்திப்பதாக கூறினார். அவையும் வேறு பெயர்களில் NEPஐ அமல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். TNக்கு புதிய கல்விக் கொள்கை தேவை என நீங்கள் கருதுகிறீர்களா? கமெண்ட்ல பதிவிடுங்க.
Sorry, no posts matched your criteria.