India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற குழப்பம் இருந்த நிலையில், வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈக்விட்டி, ஈக்விட்டி டெரிவேட்டிவ், செக்யூரிட்டி லெண்டிங் அண்ட் பாரோயிங் பிரிவுகள் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்தன. மும்பை பங்குச்சந்தை 151, நிஃப்டி 54 புள்ளிகள் சரிவடைந்தன.
இன்று (செப்டம்பர் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தவை. இவற்றை தவறாமல் சாப்பிட்டால், மருத்துவ உதவியே நமக்கு இருக்காது. வைட்டமின் பி, துத்தநாகம், தாமிரம், இரும்பு உள்ளிட்ட பல சத்துக்கள் இந்தப் பழங்களில் அடங்கியுள்ளதால் சரும பிரச்சனைகள், சிறுநீரக கோளாறு ஆகியவற்றிற்கு இவை உகந்தவை. நீர்ச்சத்து அடங்கிய இப்பழங்களில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடையையும் குறைக்க உதவும். SHARE IT.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் COAL MINES PROVIDENT FUND நிறுவனத்தில் காலியாகவுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (செப்.6) கடைசி நாளாகும். ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் (10 இடங்கள்), சோஷியல் செக்யூரிட்டி உதவியாளர் (126) பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதற்கு CMPFO ஆள்சேர்ப்பு இணையதளத்தின் https://cmpfo.gov.in/இல் விண்ணப்பிக்கலாம்.
விஜய் கட்சியும் சீமான் கட்சியும் கூட்டணி வைக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் திடீரென சீமான், கூட்டணி இல்லை என கூறி விட்டார். இதற்கு விஜய் தரப்பிடம் சீமான் இறங்கி போய் பேச்சு நடத்தியதாகவும், அப்போது மிக குறைந்த தொகுதி தருவதாகவும், ஆனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் கூட்டணி முயற்சியை சீமான் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.
*மேஷம் – கவலை உண்டாகும் *ரிஷபம் – பயம் தரும் நாளாக அமையும் *மிதுனம் – கவனம் தேவை *கடகம் – நன்மை ஏற்படும் *சிம்மம் – உயர்வு தரும் *கன்னி – அச்சம் தரும் நாளாக இருக்கும் *துலாம் – போட்டி ஏற்படும் *விருச்சிகம் – நல்லது நடக்கும் *தனுசு – வெற்றி உண்டாகும் *மகரம் – குழப்பம் நிலவும் *கும்பம் – செலவு ஏற்படும் *மீனம் – பாராட்டு கிடைக்கும்
டெல்லி சட்டப் பல்கலைக்கழக விடுதியில், தமிழக மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் அந்த மாணவி கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த மாணவி மன உளைச்சலில் இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்தனர். மேற்படிப்புக்காக டெல்லி, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2030இல் அதி-பணக்கார குடும்பங்களின் செல்வம் $9.5 டிரில்லியனாக உயருமென்று டெலாய்ட் கணித்துள்ளது. அதன் அறிக்கையில், பரந்த அளவிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உயர் பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு தற்போதைய நிலையில் இருந்து 73% ஆக உயரும் என்றும், ஹெட்ஜ் ஃபண்டுக்கு (நிறுவனம் & முதலீட்டாளர்களின் கூட்டாண்மை மூலம் திரட்டப்பட்ட முதலீடு) அவர்களின் செல்வம் கடும் போட்டியை அளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் நிவின் பாலி மீது, கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதில், 2023 டிசம்பர் 15ஆம் தேதி தன்னை துபாயில் நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் பேரில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நிவின் பாலி, அந்த பெண் கூறிய தேதியில் கொச்சியில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்ததற்கான ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.
*மழை நீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து முகம் கழுவினால், பட்டு போல மிருதுவாக மாறும்.
*குளிர் காலத்தில் டார்க் நிற ஆடைகளை அணிவது இதமாக இருக்கும்.
*மழை நேரத்தில் ஜன்னல்களை திறக்க முடியாவிட்டால், கோல மாவுடன், உப்பு தூள் கலந்து ஜன்னல் விளிம்பில் தூவினால் எளிதில் திறக்கலாம்.
* மழை காலத்தில் உப்பு ஜாடியில் மூன்று பச்சை மிளகாய்களை போட்டு வைத்தால், ஜாடியில் ஈரம் கசியாது.
Sorry, no posts matched your criteria.