India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இன்று அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்.5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணையும் அவர்கள் இருவரும், சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே, இருவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க்கின் X தளத்தை ஓலா சிஇஓ பாவிஸ் அகர்வால் விமர்சித்துள்ளார். இந்திய சட்டங்களுக்கு WIKIPEDIA கட்டுப்படவில்லை என டெல்லி ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்ததையும், பிரேசிலில் X நிறுவனத்துக்கும், அந்நாட்டு உச்சநீதிமன்றத்திற்கும் மோதல் நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற தளங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டிய அவசியத்தை இது வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் சுனிதா வில்லியம், பேரி வில்மோர் இல்லாமல் நாளை அதிகாலை 3.30க்கு பூமி திரும்பவுள்ளது. இந்த விண்கலத்தில் ஜூன் 5ஆம் தேதி இருவரும் ISS சென்ற நிலையில், ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவது சிக்கலானது. ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் பிப். 2025இல் அவர்கள் பூமி திரும்பவுள்ளனர்.
கடன் இல்லாமல் வாழ சில விதிகளை பின்பற்ற நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். *”சம்பளம் அதிகரிக்கட்டும் சேமிக்கலாம்” என சாக்குபோக்கு சொல்லாமல், வாங்கும் சம்பளத்தில் 20%ஐ சேமிக்க வேண்டும். *மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு கட்டாயம் செய்திருக்க வேண்டும். *FD, மியூச்சுவல் ஃபண்ட் SIP என ஏதாவது ஒரு முறையில் 6 மாத சம்பளத்தை அவசரகால நிதியாக சேமித்து வைத்து கொள்ள வேண்டும். *ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும்.
1.பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 2.தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டது? 3.உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 4.உலகிலேயே பத்திரிகையாளருக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்? 5.தன் வாழ்நாளில் நீரே அருந்தாத உயிரினம் எது? விடைகளை கமெண்ட் பண்ணுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசியை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் நடைபெற்ற <<14033728>>சொற்பொழிவு<<>> நிகழ்ச்சியால் சர்ச்சை வெடித்ததை அடுத்து, இந்த நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு பெண்கள் தலைமை ஆசிரியையாக தமிழரசி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூரின் பிஷ்ணுபூர் பகுதியில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிரவாதத் தாக்குதலில் 2 கட்டடங்கள் சேதம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 45 km தொலைவில் அமைந்துள்ள குடியிருப்புகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது எதிர்தாக்குதல் தொடுத்துள்ளனர்.
15 நாள்களில் மரண காப்பீடு பணத்தை நாமினிக்கு செட்டில்மென்ட் செய்யும் வகையில், விதிகளை IRDAI திருத்தியுள்ளது. இதற்கு முன்பு, காப்பீடுதாரர் மரணமடையும் பட்சத்தில், செட்டில்மென்ட் தொகை அவரின் நாமினிக்கு அளிக்கப்படும் கால அவகாசம் 30 நாள்களாக இருந்தது. அந்த அவகாசத்தை பாதியாகயும், பாலிசி சரண்டர், பகுதியளவு பணம் எடுத்தல் அவகாசத்தை 7 நாட்களாகவும் IRDAI தற்போது குறைத்துள்ளது. SHARE IT
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். இதில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக புதின் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “பைடனைத்தான் ஆதரிக்கிறோம். ஆனால் பைடன் பாேட்டியிடாததால், அவர் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிக்கிறோம்” என்றார்.
மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த மூட நம்பிக்கைப் பேச்சாளரை கைது செய்ய டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுகளுக்கு காரணமென சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, சிக்கலை மூடி மறைக்கக் கூடாது. காரணமானவர்கள் பள்ளிக்கல்வித் துறையின் எத்தகைய உயர்பொறுப்பில் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.