India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பிட்ட அளவு தண்ணீர் தினமும் குடிப்பது கட்டாயமாகும். அதன்படி தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதைக் காணலாம். 1) பெரியவர்கள்: 2-3 லிட்டர் தண்ணீர் 2) 14-18 வயதுடையோர்: 2- 2.5 லிட்டர் 3) 9- 13 வயதுடையோர்: 2 லிட்டர் வரை 4) 4-8 வயதுடையோர்: 1.2 லிட்டர் 5) 1-3 வயதுடையோர்: 1 லிட்டர் வரை. SHARE IT
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் சிலவற்றை இங்கு காணலாம். 1) பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் 2) உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் 3) பொள்ளாச்சி ராஜகணபதி விநாயகர் 4) திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் 5) காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் 6) சேலம் ராஜகணபதி விநாயகர் 7) கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகர் 8) திருவண்ணாமலை இடுக்கு விநாயகர் கோயில். SHARE IT
விநாயகருக்கு பிடித்தமான சில பலகாரங்கள் குறித்து ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன?
1) எள் உருண்டை
2) கொழுக்கட்டை
3) சர்க்கரை பொங்கல்
4) பாசிப்பருப்பு பாயாசம்
இந்த 4 பலகாரங்களையும் அவருக்கு படைத்து விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் வழிபடுவது வழக்கம் ஆகும். இவ்வாறு வழிபட்டால் விநாயகர் மகிழ்ந்து கேட்ட வரம் அருள்வார்.
விநாயகரை அனுதினமும் வழிபட்டு ஒரு செயலைத் தொடங்கினால் தடைகள் நீங்கி அப்பணி சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. தினமும் வழிபட முடியாதவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி நாளிலாவது வழிபட வேண்டும். அருகம்புல் சாத்தி வழிபட்டாலே அவர் மனம் மகிழ்ந்து வரம் தருவார். இன்று காலை 9 மணிக்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். அல்லது ராகு காலம் முடிந்து காலை 10.30க்கு மேல் வழிபடலாம்.
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. முழு முதற்கடவுளாக போற்றப்படுகிறார் விநாயகரின் சிறப்பைக் கொண்டாடும் வகையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து, கொழுக்கட்டை மற்றும் விநாயகருக்கு பிடித்தமான பலகாரங்கள் படைத்து மக்கள் வழிபடுகின்றனர்.
விநாயகர் சிலை ஊர்வலங்கள் டிரோன், சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என DGP சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஊர்வலங்களால் அசம்பாவிதங்கள் நேரிடாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஊர்வலங்கள் டிஜிபி அலுவலகங்களில் நேரடியாக கண்காணிக்கப்பட இருப்பதாகவும், காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு CM ஸ்டாலின் குடும்ப TOUR சென்று இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார். முதலீட்டை ஈர்க்க வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, முதலீட்டாளர்களை தமிழகத்துக்கு அழைத்து பேசினாலே போதும், பிற மாநிலங்களில் இதுதான் நடக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார். துபாய்க்கு ஏற்கனவே CM சுற்றுப்பயணம் சென்றதை சுட்டிக்காட்டி, அதனால் எவ்வளவு முதலீடு வந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸில் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் வகையில் கையடக்க மின்னணு பெட்டகம் மூலம் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இந்த கிட் வழங்கும் பணி நடக்கிறது. 300க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பரிசோதனைகளை இதில் மேற்கொள்ளலாம். பள்ளிகளில் வாரத்துக்கு 1 மணி நேரம் இதற்காக ஒதுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கண் தானத்தில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற கண்தான வார விழாவில் பேசிய அவர், தேசிய அளவில் கண்தானம் பெறப்படும் கண்களில் 25% தமிழகத்தில் இருந்து பெறப்பட்டவை என்றும், கடந்த 10 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் இருந்து 208 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
திமுக கூட்டணியில் குழப்பம் என்று திரித்து பேசப்படுவதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் RS பாரதி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களின் கருத்துக்களை உள்நோக்கத்துடன் பார்க்க வேண்டாம், சில விவகாரங்களையே அவர்கள் சுட்டி காட்டுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். திமுகவினரை சீமான் வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கிறார், அவரை கண்டு கொள்ள வேண்டாம் என திமுக தலைமை கேட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.