India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக போலீசார் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். சென்னையில் அரசுப் பள்ளியில் <<14040303>>தன்னம்பிக்கை உரை<<>> என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை பரப்பியதாகவும், மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், அவரிடம் விரிவான விசாரணை நடைபெற உள்ளதாக தெரிகிறது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, 9-ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த மண்டலம், அடுத்த 3 நாள்களில் மே.வங்கம்-வடக்கு ஒடிஷா பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் Storyஐ போல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் மியூசிக் சேர்க்கும் அம்சம் விரைவில் வர உள்ளது. அத்துடன், ஸ்டேட்டஸ்களில் உங்கள் நண்பர்களை டேக் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த வசதிகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், அவை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என சரியாக கூற முடியாது எனவும் அந்நிறுவனத்தின் குளோபல் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் கார்ல் வூக் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பாஜக கூட்டணி பலம் 119ஆக உயர்ந்தது. 234 இடங்களில் பாஜக கூட்டணிக்கு 113 இடங்கள் உள்ளன. புதிதாக 6 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதையும் சேர்த்து, பாஜக (96) கூட்டணி பலம் 119ஆக உயர்ந்தது. இது பெரும்பான்மைக்கு தேவையான 117ஐ விட 2 இடங்கள் கூடுதலாகும். இதன்மூலம் வக்புவாரிய சட்டத்திருத்தத்தை அரசால் எளிதில் நிறைவேற்ற முடியும். காங்கிரஸ் கூட்டணியின் பலம் 85 ஆகும்.
இந்தியா கடந்த 10 ஆண்டில் 92.38% வளர்ச்சி கண்டிருப்பதாக IMFஇன் வேர்ல்ட் எகனாமிக் அவுட் தரவு தெரிவிக்கிறது. அதில், 2013-23 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியில் 11ம் இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதுவே உலகில் மிக வேகமான வளர்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது. இதே 10 ஆண்டில், USA 62.06%, சீனா 83.50%, ஜெர்மனி 19.38%, ஜப்பான் 19.18% வளர்ச்சி அடைந்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மூண்டுள்ள கலவரத்தில் மேலும் 5 பேர் பலியாகினர். ஜிரிபாம் மாவட்டத்தில் தூங்கிக் காெண்டிருந்த ஒருவரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. மேலும் 4 பேர் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். இந்த 4 பேரும் அப்பகுதியில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
AI குறித்த படிப்பிற்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக தன்னை புதுப்பித்துக் கொள்வதில் அதிக நாட்டம் கொண்ட அவருக்கு, AI குறித்து அறிய ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்காக அங்குள்ள உயர்மட்ட கல்வி நிறுவனத்தில் 90 நாள் கோர்ஸில் சேர்ந்துள்ளார். எனினும், தக் லைப், கல்கி 2898 AD படப்பிடிப்பின் காரணமாக தற்போது, 45 நாட்கள் மட்டுமே படிப்பிற்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
VI தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால சலுகைகளை வாரி இறைத்துள்ளது. ₹349, ₹579, ₹859 திட்டங்களில் கூடுதல் 5 ஜிபி டேட்டாவை 3 நாள் வேலிடிட்டியுடன் அறிவித்துள்ளது. 28 நாள் வேலிடிட்டி கொண்ட ₹449 திட்டத்தில் கூடுதலாக 2 நாள், 56 நாள் வேலிடிட்டி கொண்ட ₹795 திட்டத்தில் கூடுதலாக 4 நாள் வேலிடிட்டி வழங்கியுள்ளது. ₹3,499, ₹3,699, ₹3,799 திட்டங்களில் ₹50- ₹100 தள்ளுபடி வழங்கியுள்ளது. SHARE IT
1) இந்தியாவின் மிகப் பெரிய நதி எது? 2) “தமிழ்த் தென்றல்” என்றழைக்கப்பட்டவர் யார்? 3) கிராம்பு என்பது தாவரத்தின் எப்பகுதி? 4) மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது? 5) இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
2024ம் நிதியாண்டில் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் ₹135 கோடியை சம்பளம், லாப பங்காக பெற்றுள்ளார். இந்த ₹135 கோடியில் ₹122 கோடி டாடா சன்ஸ் லாபத்தில் கிடைத்த பங்கு ஆகும். எஞ்சிய ₹13 கோடி சந்திரசேகரின் சம்பளம் ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 20% அதிகம் ஆகும். இதன் மூலம் அதிக வருமானம் பெற்ற இந்திய நிறுவனத் தலைவர் என்ற பெருமையை அவர் தக்க வைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.