India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய்யின் விக்கிரவாண்டி அரசியல் மாநாட்டிற்கு புதிய சிக்கல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் வருவார்கள் என காவல்துறை கணித்துள்ளதால், வாகன நிறுத்துமிடத்திற்கு 150 ஏக்கர் தேவைப்படும் எனத் தெரிகிறது. ஆனால், பார்க்கிங்குக்கு தற்போது 45 ஏக்கர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் இடங்களை பெறுமாறு தவெகவுக்கு போலீஸார் உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் சமீபத்திய நேர்காணலில் தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். ஒரு மல்டிஸ்டார் படத்தில் நடிப்பதற்காக துபாய் சென்றபோது, நாயகன் இரவில் தனது ரூம் கதவை தட்டியதாக கூறியுள்ளார். கதவை திறக்க மறுத்ததையடுத்து அவர் கதவை உடைத்ததாகவும், அதன்பின் அவருடன் சேர்ந்து நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தான் நடித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதாகவும் கூறியுள்ளார்.
ரகசியமாக இயங்கிவந்த ஹிஸ்புல்லா தலைவர் நசருல்லா, இஸ்ரேலின் தாக்குதலில் பலியானார். இதுபற்றி லெபனான் வெளியுறவு அமைச்சர் அப்தல்லா ரஷித் ஹபிப் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். நசருல்லா கொல்லப்படும் முன், ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டு, அது அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதன்பின் நசருல்லா வெளியே வர, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல், நசருல்லாவை கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அக்.11 ஆயுத பூஜை, அக்.12 சரஸ்வதி பூஜை மற்றும் அக்.12 ஞாயிறு என அடுத்த வாரம் தொடர்ந்து 3 நாள் விடுமுறை வருகிறது. இதனையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கும், மற்ற நகரங்களில் இருந்தும் அக்.9,10இல் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்யலாம்.
மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 160/4 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய நியூசி கேப்டன் டெவினே அரை சதம் (57*) அடித்து அசத்தினார். இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேணுகா தாகூர் 2, அருந்ததி ரெட்டி, ஆஷா ஷோபனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 161 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
விக்கிரவாண்டி தவெக மாநாடுதான், விஜய்யின் அரசியல் பயணத்தை தீர்மானிக்கப் போகிறது. மாநாட்டிற்கு வரும் ரசிகர்கள் செய்யும் சிறு தவறும், ஒட்டுமொத்த கட்சிக்கே ஒரு லேபிளை கொடுத்துவிடும். ஏற்கனவே தவெகவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் பனிப்போர், மாநாட்டில் மோதலாகவும் வெடிக்கக்கூடும். அப்படி ஏதும் நடந்து விடாதா என ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு இது புரிய வேண்டுமே.
இரவில் நீண்டநேரமாக செல்போன் திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் இன்று பலரும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாததால் கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 1. நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு பலவீனமடையும். 2. ஆயுட்காலம் குறையும். 3. மன அழுத்தம் அதிகமாகி, உடல் மெலியும். 4. இதயம் சார்ந்த பல பிரச்னைகள் வரும்.
பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள புதிய படம் ‘பிளாக்’. SR பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் CS இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஓராண்டு இடைவெளிக்குப் பின் ஜீவாவின் படம் வெளியாக உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்., அரசு, ஆட்சிக்கு வந்த 300 நாட்களில் ₹72,500 கோடியை கடனாக வாங்கியுள்ளது. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு ₹241 கோடி. செப்டம்பரில் மட்டும் ₹5,500 கோடி கடனாக பெறப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதத்தில் ₹7,400 கோடியை கடனாக திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற கடன் மேல் கடன் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு போடப்படும் DPT Diphtheria-pertussis-tetanus எனும் தடுப்பூசி கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாட்டில் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து இபிஎஸ், அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடுவதை திமுக அரசு நிறுத்த வேண்டும். உடனடியாக இத்தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.